என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
குரல் கம்மல் ( ஸ்வர சாத )ரோக சிகிச்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1
குரல் கம்மல் ( ஸ்வர சாத )ரோக சிகிச்சைகள்
யஷ்டிமதுக கியாழம் :- மிளகு சூரணத்தை நெய்யில் அருந்த வாத குரற்கம்மல் தீரும். அதிமதுர சூரணத்துடன் சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து காய்ச்சிய பாலில் அருந்த பித்த குரற்கம்மல் தீரும். அரிசித்திப்பிலிசூரணத்தை ஆடாதோடை சாற்றுடன் தேன் சேர்த்து அருந்த கப குரற்கம்மல் தீரும்.
கடுகாதி கியாழம் :- கடுகுரோகணி அதிவிடையம், வட்டத்திருப்பி, மரமஞ்சள், கோரைக்கிழங்கு, வெட்பாலை இவைகளை கோமூத்திரத்தில் கியாழம்வைத்து சாப்பிட்டால் குரற்கம்மல் நீங்கும்.
பதரீ கல்கம் :- இலந்தை இலை கல்கமாவது அல்லது நெய்யில் வருத்த இலந்தை இலையுடன் இந்துப்பை கலந்தாகிலும் சாப்பிட்டால் குரற்கம்மல், காசங்கள் இவைகள் நீங்கும்.
மரீசிகிருத பானம் :- அன்னம் புசித்தபிறகு மிளகு சூரணத்தை நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் வாயுவினால் உண்டாகிய குரற்கம்மல் நீங்கும்.
நெய் வெல்லம் இவைகளுடன் கலந்த அன்னம் புசித்து வெந்நீர் குடித்தாலும் அல்லது கரசனாங்கண்ணிச்சாற்றை நெய்யுடன் கலந்து பானஞ்செய்தாலும் அல்லது கரசனாங்கண்ணிச்சாற்றை நெய்யில் விட்டு கிருதபதமாகக் காய்ச்சிய கிருதத்தை பானஞ்செய்தாலும் வாதகுரற்கம்மல் நிவர்த்தியாகும்.
விரேசன சிகிச்சைபெற்று பிறகு மதுர பதார்த்தத்துடன் பக்குவமான பாலையாவது, மதுவஸ்துக்களை சூரணித்து அதில் தேன் கலந்தாவது சாப்பிட்டால் பித்த குரற்கம்மல் நிவர்த்தியாகும்.
பயப்பானம் :- மதுர பதார்த்தங்கள் போட்டு காய்ச்சிய பாலை சர்க்கரை, தேனுடன் கலந்து சாப்பிட்டால் குரற்கம்மல் நீங்கும்.
பிப்பலீ யோகம் :- திப்பிலி, திப்பிலிமூலம், மிளகு, சுக்கு இவைகளைச் சூரணித்து கோமூத்திரத்தில் கலந்து சாப்பிட்டால் கபகுரற்கம்மல் நிவர்த்தியாகும்.
காகஜங்காதி தாரியம் :- காகஜங்கா, உத்தாமணி, வசம்பு,கோஷ்டம், திப்பிலி இவைகளை சூரணித்துத் தேன் கலந்து ஏழுஇராத்திரிகள் வாயில் வைத்துக்கொண்டு அதன் ரசத்தை விழிங்கிக் கொண்டிருந்தால் குரற்கம்மல் நீக்கி கின்னரியைப்போல் கானம் செய்வான்.
நெல்லிக்காயை அரைத்து பாலில் சாப்பிட்டால்குரற்கம்மல் நீங்கும்.
கதிரதாரியம் :- கதிரசாரம், திப்பிலி, கடுக்காய் இவைகளை சூரணித்து நெய்யில் கலந்து அல்லது சுக்குடன் கலந்தாவது சாப்பிட்டால் ஸ்வரபேதம் நிவர்த்தியாகும்.
சதாவரீ சூரணம் :- தண்ணீர்விட்டான்கிழங்கு சூரணமாவது அல்லது சிற்றாமுட்டி சூரணமாவது, தண்ணீர்விட்டான்கிழங்கு சூரணம் நெற்பொரி சூரணமாவது தேன் கலந்து சாப்பிட்டால் குரற்கம்மல் நீங்கும்.
ஆமலவேதம் சூரணம் :- செவ்வியம், கொன்னைப்புளி, சுக்கு மிளகு, தாளிசபத்திரி, திப்பிலி, சீரகம், தவஷீரி,சித்திரமூலம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய் இவைகளை சமஎட
யாய் சூரணித்து வெல்லங் கலந்து சாப்பிட்டால் குரற்கம்மல், பீனசம் கபம், அருசி இவை நீங்கும்.
அஜாமோதாதி சூரணம் :- ஓமம், மஞ்சள், நெல்லிவற்றல்,யவக்ஷ¡ரம், சித்திரமூலம் இவைகளை சமஎடயாய் சூரணித்து நெய், தேன் கலந்து சாப்பிட்டால் திரிதோஷ குரற்கம்மல் நீங்கும்.
பலத்திரிகசூரணம் :- கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல் சுக்கு, மிளகு, திப்பிலி, இவைகளை சூரணித்து ஏழுராத்திரிகள் சாப்பிட்டால் சகலமான குரற்கம்மல்கள் நீங்கும்.
பிராஹ்மாதி சூரணம் :- கண்டுபாரங்கி, சிவகரந்தை, வசம்பு சுக்கு, திப்பிலி, இவைகளை சூரணித்து தேனுடன் ஏழுராத்திரிகள் சாப்பிட்டால் சகலமான குரற்கம்மல்கள் நீங்கும்.
வசாதி சூரணம் :- கண்டுபாரங்கி, வசம்பு, ஆடாதோடைதிப்பிலி, இவைகளை சூரணித்து தேனுடன் கலந்து சாப்
பிட்டால் குரற்கம்மல் நிவர்த்தியாகும்.
நீதிக்காதி லேகியம் :- கண்டங்கத்திரி 100 பலம், திப்பிலி மூலம் 50 பலம், சித்திரமூலம் 25 பலம், தசமூலம் 25 பலம், இவை யாவும் 512 பலம் ஜலத்தில் போட்டு 64 பலம் மீறும்படியாய் சுண்டக்காய்ச்சி அதில் 32 பலம் பழைய வெல்லத்தை கலந்து மந்தாக்கினியால் பாகுபதமாய் சமைத்து அதில் 8 பலம், திப்பிலி சூரணம், இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கப்பத்திரி,மிளகு, இவைகள் வகைக்கு 1 பலம் இவை யாவும் சூரணித்து அந்தப் பாகில் கொட்டி அத்துடன் தேன் 8 பலம் கலந்து தானியராசியில் புடமிட்டு சாப்பிட்டுவந்தால் குரற்கம்மல், பீனசம், காசரோகம், மேல்மூச்சு, அக்கினிமந்தம், குன்மம், மேகம், மூத்திர கிரிச்சிரம், கிரந்தி இவைகள் நிவர்த்தியாகும்.
ஜாதிபலாதி லேகியம் :- சாதிக்காய், ஏலக்காய், கொடிமா துளம்பழம், இலவங்கப்பத்திரி, பொரி, திப்பிலி இவைகளைச் சமஎடையாய்ச் சூரணித்துத் தேன் கலந்து லேகியம்போல் செய்து சாப்பிட்டால் கண்டத்தொனியானது வீணை தொனிக்குச் சமமாக இருக்கும்.
ஜாதீதசாதி லேகியம் :- ஜாதிபத்திரி, ஏலக்காய், திப்பிலி, வெட்டிவேர், கொடிமாதுளம்பழம், இலவங்கப்பத்திரி, இவைகளைச் சூரணித்துத் தேன் கலந்து லேகியபதமாக்கி சாப்பிட்டால் கண்டத்தில் வீணையைப்போல் மதுரமான குரலுண்டாகும்.
குடூச்யாதி லேகியம் :- சீந்தில்கொடி, நாயுருவி, வாய்விளங்கம், சங்கிணி, வசம்பு, சுக்கு, தண்ணீர்விட்டான்கிழங்கு, இவைகளைச் சூரணித்துத் நெய்யுடன் கலந்து மூன்று நாள் சாப்பிட்டால்
குரல் கம்மல் நீங்கி ஆயிரம் பாட்டுகளைப் பாடுவான்.
காசமர்த்த கிருதம் :- பேயாவரை இலைரசம், கண்டுபாரங்கி கல்கம், இவைகளால் தயார் செய்த கிருதத்தை குடித்தால் வாயுவினால் உண்டான குரல்கம்மல் நீங்கும்.
வியாக்கீரி கிருதம் :- கண்டங்கத்திரசம், சித்தரத்தை, சிற்றா முட்டி, நெரிஞ்சல் இவைகள் கலந்து காய்ச்சிய நெய்யைக் குடித்தால், குரற்கம்மல், ஐந்துவித காசங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.
சுண்டீ கிருதம் :- சுக்கு, இலவங்கப்பட்டை இவைகளின் சூரணம், ஆலன் முதலிய பால் உள்ள விருக்ஷங்களின் பாலில்வேக வைத்து சர்க்கரை கலந்து சாப்பிட்டாலும் அல்லது அதிமதுரத்தைச்சூரணித்து அத்துடன் நெய் சர்க்கரை கலந்து சாப்பிட்டாலும் பித்தத்தினால் உண்டாகிய குரல்கம்மல் நீங்கும்.
கோரக்ஷ வடுகங்கள் :- இரசபற்பம், தாம்பிரபற்பம், லோஹ பற்பம், இவைகளை கண்டங்கத்திரிபழரசத்தினால் 21-நாள் அரைத்து உளுந்து அளவு மாத்திரைகள் செய்து வாயில் வைத்துக்கொண்டு ரசத்தை விழுங்கிக் கொண்டிருந்தால் குரற்கம்மல் நிவர்த்தியாகும்.
கண்டூஷம் :- இஞ்சிரசத்தில், இந்துப்பு, திரிகடுகு, கொடிமாதுளம்பழரசம், அரத்தைச் சூரணம் இவைகளைச் சேர்த்துகண்டூஷஞ் செய்து சாப்பிட்டால் குரற்கம்மல் நிவர்த்தியாகும்.
குரல்கம்மலுக்கு பத்தியங்கள் :- வியர்வை வாங்குதல், வஸ்தி கருமம், புகைகுடித்தல், விரேசனம், ஔஷதங்களை வாயில்வைத்துக்கொண்டிருக்குதல், நசியம், தலையில் சிட்டிக்கை போடுதல், யவதானியம், சிகப்பு நெல் அன்னம், காட்டுகோழி, மயில் இவைகளின் மாமிசம், நெரிஞ்சில் இலை, ஆடாதோடை இலை, மணத்தக்காளி, ஜீவந்திக்கீரை, பிஞ்சுமுள்ளங்கி, திரா¨க்ஷ, கடுக்காய், கொடி
மாதுளம்பழம், வெள்ளைப்பூண்டு, உப்பு, இஞ்சி, தாம்பூலம், மிளகு, நெய் இவைகள் குரற்கம்மல் வியாதிக்கு பத்தியங்கள்.
அபத்தியங்கள் :- மாம்பழம், விளாம்பழம், எலுமிச்சன், குளிர் ந்த ஜலம், சீதளபொருள்கள், வாந்தி, நித்திரை, விசேஷமாகப்பேசுதல், விருத்த அன்னபானங்கள் இவைகள் அபத்தியங்கள்.
Similar topics
» தாஹ ரோக சிகிச்சைகள்
» சுர சிகிச்சைகள்
» பிரமேக ரோக சிகிச்சைகள்
» கிரகணி சிகிச்சைகள்
» சுவாச ரோக சிகிச்சைகள்
» சுர சிகிச்சைகள்
» பிரமேக ரோக சிகிச்சைகள்
» கிரகணி சிகிச்சைகள்
» சுவாச ரோக சிகிச்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|