ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    3 posters

    Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

    Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:07 pm

    பழங்கால இந்தியாவில்செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது,தூங்குவது மாதிரி அதுவும்ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப்பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும்திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப்புரிந்திருந்தது.

    இல்லறத்தில் ஆண்,பெண் இடையே இருக்கும்உறவு, ஒளிவு மறைவில்லாதது.அன்பு செலுத்துவது, உண்மையாகஇருப்பது, மரியாதை தருவதுஎன எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின்தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம்தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும்இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில்அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும்பிரச்னைகள் உருவாகும்என்பது அந்தரிஷிகள் சொன்ன வாக்கு.

    முடிவாக அவர்கள்சொன்ன நீதி... இந்த உறவில்கொடுப்பவர், எடுப்பவர் என்றவித்தியாசம் இல்லை!நமது ரிஷிகள்நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பதுவருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம்புரிந்து கொண்டிருக்கிறது.
    வாழ்க்கையின்முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரியகவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்குஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தைநமக்கும் விதைத்து விட்டனர்.

    இதிலிருந்துமீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரியஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பானசிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர்.மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதைஉணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில்புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

    இந்தத் தொடரைப்படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவேபாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும்,அதுபற்றி முழுமையாகத்தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

    அது ஒருபெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும்ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம்பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமானகலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

    தங்கள் காதல்மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்தடீன்ஏஜ் காதலர்கள், தனியாகஅறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத்தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள்உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லைஎன்றுநிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக்கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்குஜோடியே தேவையில்லைஎன்ற படி தனிஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்தஅறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

    வெளிச்சம்,இருட்டு என்ற வித்தியாசம்எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமானஉணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம்தராமல், அடுத்தடுத்துபத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
    இவ்வளவு பிஸியானஅந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் தேனிலவு சூட்அல்லது ஏதாவதுகுளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள்நினைத்தீர்கள்.

    ஸாரி... அதுதப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக்கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையைஅனுபவித்தது, ஓர்ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின்மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான்நடந்தது இந்த ஆராய்ச்சி.

    இதில் போய் என்னஆராய்ச்சி!என முகத்தைச்சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்தபாராவுக்கு போங்கள்.

    இந்தவித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... இருண்ட கண்டம்என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்தஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோதொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
    வகைப்படுத்திபெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

    ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின்அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள்நிகழ்கின்றன? ஒட்டுமொத்தஉடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளைஉலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது?பிரபஞ்சத்தைசிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்தஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பதுவெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டேஇருக்கிறார்கள்? இந்த உறவில்பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன?பலபேருக்கு குழந்தைப்பேறுஇல்லாமல் போவதற்கு என்ன காரணம்?

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:07 pm

    இப்படி எத்தனையோகேகள்விகள். ஒரு பெண்ணின் அந்தரங்கபாகத்தில் மூன்று தனித்தனி துவாரங்கள் உண்டு. சிறுநீர் போக ஒரு துவாரம்...அந்தரங்க உறவுக்கு ஒரு துவாரம்... குழந்தை பெற்றுக்கொகள்ள மூன்றாவது துவாரம்...சரியாகக் கணிக்காமல் உறவின்போது துவாரம் மாறி விட்டால் போச்சு. அப்படி உறவுகொகள்ளும் ஆணுக்கு மர்மமான வியாதிகள் வரும்என்றெல்லாம்கற்பனைக் குதிரையை பயங்கரமாகத் தட்டிவிட்டு, கதைகள் எழுதியஅந்தக் கால டாக்டர்கள் உண்டு!

    மருத்துவம்படிக்கிற எல்லோருக்கும் அடிப்படையாக இரண்டு விஷயங்கள் பற்றிய புரிதல் முக்கியம்.ஒன்று பிஸியாலஜிஉடலில் எந்தெந்தபாகங்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்பதை சொல்லித்தரும் பிரிவு இது!இரண்டாவது பேதாலஜிநோய் வந்தால் உடலில் எந்தெந்த பாகங்களில்என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது... செயல்பாடுகளில் என்ன குறைபாடுகள் ஏற்படுகிறதுஎன்பது குறித்த நோய் குண அறிவியல்.இந்த இரண்டையும் நன்றாக புரிந்துகொண்டவர்களேடாக்டர்கள்.

    செக்ஸ் தொடர்பானநோய்களில்,சிக்கல் இந்த அடிப்படைவிஷயத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. செக்ஸ் உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், உறவு கொகள்ளும்போது அவற்றின் பங்கு... இவைபற்றி தெரிந்தால்தானே நோய் ஏற்படும்போது இதில் நிகழும் மாற்றங்களை அறிய முடியும்.அடிப்படையே புரியாத பட்சத்தில்..?

    பல டாக்டர்கள்இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் செக்ஸ் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவதையே தவிர்த்துவந்தார்கள். உளவியல் நிபுணர்களோ, ‘செக்ஸ் தொடர்பானஎல்லா பிரச்னைகளுக்கும் மனதுதான் காரணம்என்றுஸ்டிராங்காக சொல்லி, ஏதோ அவர்களால் முடிந்தஅளவுக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    இப்படிப்பட்ட ஒருபின்னணியில்தான் நடந்தது, அந்த ஆராய்ச்சி!மற்றவர்களுக்கு இது எப்படியோ... ஆனால், செக்ஸ்பிரச்னைகளுக்கு மருத்துவ ரீதியான தீர்வுகளைத் தரும் எங்களைப் போன்ற டாக்டர்களுக்குஇது மனிதன் நிலவில் காலடி வைத்ததைவிட பெரிய அறிவியல்சாதனை.அந்த ஒற்றை ஆராய்ச்சிதான் இன்று செக்ஸாலஜிஎன்ற பெயரில்நவீன சிகிச்சை முறை ஒன்று உருவாக அடித்தளம் போட்டுக் கொடுத்தது. இப்போது பலரும்செக்ஸில் பிரச்னை என்றால் கூசிக்கொண்டு அதை மூடி மறைக்காமல், முக்காடு போட்டுக்கொண்டு தயங்கித் தயங்கிபிளாட்பார லேகியக் கடைக்குப் போகாமல், ‘வாலிப, வயோதிக அன்பர்களைக் கூவி அழைக்கும் போலி வைத்தியர்களிடம் போய்சொத்தை இழக்காமல், அறிவியல்ரீதியான தீர்வுதேடி தம்பதி சமேதராக ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த ஆராய்ச்சிதான்!

    ஒரு காலத்தில் மலட்டுத் தன்மை பெண்ணிடம் மட்டும்தான்இருக்கிறதுஎன்று உலகம் முழுக்கஎல்லா சமுதாயமும் உறுதியாக நம்பியது. விதையில்எப்போதும் பழுது இல்லை... நிலம்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது. அதனால் விதைத்த விதைபொய்த்துப் போகிறதுஎன்று இதை நாசூக்காகசொன்னார்கள்.

    அரியணைக்குவாரிசைப் பெற்றுத் தராத காரணத்துக்காக எத்தனையோ மகாராணிகள் அநியாயமாக மலடிபட்டம் சுமந்து, மரண தண்டனையை பரிசாகப் பெற்று, வாகள்முனைக்கு தங்கள் தலையைக் கொடுத்த பரிதாபசம்பவங்கள் அநேகமாக உலகின் எல்லா நாட்டு வரலாறுகளிலும் இருக்கின்றன! பிரச்னைமகாராஜாவிடம்தான் இருக்கிறது என்பது புரியாவிட்டாலும், அந்தப்புரத்துக்கு அடுத்தடுத்து வரும்மகாராணிகளில் யாரோ ஒருத்தி, தன் உயிரைக்காப்பாற்றிக்கொகள்ள, யாருடனாவது சேர்ந்துதப்பு செய்து இளவரசனைப் பெற்றெடுத்து விடுவாகள். அரசனும் "இப்பபுரியுதா? நான் ஆம்பளை சிங்கம்தான்!" என்று மகிழ்ந்துவிடுவான்.
    ஆனால், சராசரி குடும்பங்களில் எத்தனையோ பிரச்னைகள்.குழந் தைப்பேறு இல்லாததால் ஏராளமான மணமுறிவுகள். மிக சாதாரணமான ஒரு சிகிச்சைஅவர்களுக்குத் தீர்வு தந்திருக்கும். அது அப்போது யாருக்கும் தெரியாது.

    ஐம்பதாண்டுகளுக்குமுன் நடந்த "படுக்கை அறை" ஆராய்ச்சிதான் அதுபோன்ற தீர்வுகளுக்குதிறவுகோலாக அமைந்தது. இன்றைக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான தம்பதிகள் விவாகரத்துமூலம் பிரிவதைத் தடுத்தது... பல பெண்கள் மலடிஎன்ற பட்டத்தைச் சுமந்து வாழ்க்கையை இழந்துஅம்மா வீட்டில் காலம் முழுக்கக் கண்ணீரோடு கிடப்பதைத் தடுத்தது... என மகத்தானபுண்ணியம் இந்த ஆராய்ச்சிக்கு உண்டு.

    அந்தப் படுக்கைஅறை இரண்டு தடுப்புகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. ஓர் அறையில் மிருதுவான படுக்கை.அதற்குகள்தான் ஜோடிகள் நுழையும். அந்த அறையின் கண்ணாடிச் சுவர்கள் சன்கன்ட்ரோல்ஃபிலிமால் மறைக்கப்பட்டு இருக்க, அதற்கு வெளியேஇருந்த குட்டி அறையில் ஆராய்ச்சிக் குழு இருக்கும். உகள்ளே இருக்கும் ஜோடிக்குஇந்தக் குழுவினர் தெளிவாகத் தெரிவார்கள்.

    உள்ளே நுழையும்ஜோடி பரவசத்தை அனுபவிக்கும்போது அவர்களது உடலில் நிகழும் மாற்றங்களை அளவெடுக்க, எல்லா விதமான ஏற்பாடுகளும் இருந்தன. அவர்களதுநாடித்துடிப்பை அளக்க ஒரு கருவி, ரத்த அழுத்தத்தைஅளவிட ரத்த அழுத்தமானி, மூளையில் நிகழும்மாற்றங்களை அளக்க எலெக்ட்ரோ என்ஸஃபைலோகிராம்எனப்படும் ஈ.ஈ.ஜி. கருவி, இதய மாற்றங்களை உணர்வதற்கு ஹோல்டர் மானிட்டர்என்ற கருவி, இது தவிர வியர்வை சுரப்பு, கண்ணில் நிகழும் மாற்றங்களை அளவிடும் கருவி...இப்படி பல கருவிகளின் இணைப்பு ஒயர்கள் அவர்கள் மீது பிணைக்கப்பட்டு இருந்தன.இவற்றை சுகமான சுமைகளாககருதியபடிஅவர்கள் இயல்பாகத் தங்களுக்குகள் கலந்தார்கள்.

    மற்றஉறுப்புகளின் செயல்பாடுகளை அளவிடுவது சுலபம். ஆனால், அந்த உறவுக்குஅத்தியாவசியமான செக்ஸ் உறுப்புகளை எப்படி கண்காணிப்பது? ஆணுக்கு எல்லாமே உடலுக்கு வெளியில் இருந்தன.அதனால் அதில் பெரிய சிரமம் இல்லை. ஆனால் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் நிகழும்மாற்றங்கள்? அதைக் கண்காணிக்கவும் ஒருஸ்பெஷல் கருவி தயாரானது. ஆணுறுப்பு போல நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒன்றை செயற்கையாகபிளாஸ்டிக்கில் தயாரித்தனர். ஒளி ஊடுருவும் வகை பிளாஸ்டிக்கால் ஆன அதன்உகள்பக்கத்தில் மைக்ரோ கேமரா வைக்கப்பட்டது. அந்த செயற்கை உறுப்பை வைத்து சிலபெண்கள் சுய இன்பம் அனுபவிக்க, அதற்குகள் இருந்தகாமிரா ஸ்டில் போட்டோக்களாகவும், வீடியோ படமாகவும்பெண் உறுப்பில் நிகழும் மாற்றங்களைப் பதிவு செய்தது.

    மிகச் சாதாரணமானஆராய்ச்சிகளுக்கே எதிர்ப்புக் குரல்கள் எழும்போது இதை விட்டு வைத்திருப்பார்களா? ‘அறிவியல் போர்வையில் நடக்கும் விபசாரம்என பலர் கூக்குரல் எழுப்ப, மத அமைப்புகளும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில்குதித்தன. கொஞ்சம் தடம் புரண்டாலும் ஒட்டுமொத்த ஆராய்ச்சியே கேகள்விக்குறி ஆகும்நிலை உண்டானது.

    ஆனாலும்ஊசிமுனையில் தவம் செய்வது போன்ற ரிஸ்க்கான இந்த ஆராய்ச்சியை வெற்றியோடு செய்துமுடித்தார், வில்லியம் ஹோவெல்மாஸ்டர்ஸ்.

    சரி... எப்படிஇத்தனை பேர் அவரிடம் படுக்கை அறை ஆராய்ச்சிப் பொருட்களாக இருக்க ஒப்புக் கொண்டார்கள்?

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:09 pm

    அமெரிக்காவின்புகழ் பெற்ற மருத்துவரான வில்லியம் மாஸ்டர்ஸ் பிறந்தது, ஒஹையோ மாநிலத்தில் இருக்கும் க்ளீவ்லாண்டில்.பாரம்பரியமிக்க ரோசெஸ்டர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அவர் படித்தார். அந்தபல்கலைக்கழகத்தில் தான் செக்ஸ் உயிரியல்வல்லுநர் என பெயர் பெற்ற ஜார்ஜ் வாஷிங்டன்கார்னர் பணி புரிந்தார். வாஷிங்டன் கார்னரை குருவாக ஏற்றுக் கொண்ட வில்லியம்மாஸ்டர்ஸ்,எலிகளின் செக்ஸ் வாழ்க்கைபற்றிதான் முதலில் ஆராய்ந்தார். பெண்களுக்கு மாத விடாய் வருவது போல எலிகளுக்கும்ஒருவித திரவச் சுரப்பு நிகழ்கிறது என்பது அவரது ஆராய்ச்சி முடிவு.

    அதை மனிதர்களின்செக்ஸ் சுழற்சி யோடு ஒப்பிட்டு பார்க்க முயன்றபோது அவருக்குத் தோல்விதான்கிடைத்தது. சரியான புத்தகங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு சில ஆராய்ச்சிநூல்களும் மனித உடலில் செக்ஸின்போது நிகழும் மாற்றங்கள் குறித்து தப்புத் தப்பாகசொல்லியிருந்தன. அப்போது அவருக்கு 24 வயசு. தாங்கள்எங்கிருந்து எதனால் வந்தோம்... தலைமுறை தலைமுறையாக தாயின் கருவில் உயிர்ச்சுழற்சிஎப்படி நிகழ்கிறது என்பது பற்றி யாரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லையே?’ என்ற விஷயம் அவரை உறுத்தியது. என் வாழ்நாள் முழுக்க செக்ஸ் பற்றியஉருப்படியான ஆராய்ச்சிதான் செய்யப் போகிறேன்என அப்போதே அவர்முடிவெடுத்தார்.

    ஆனால், அவரது குருவான கார்னர் கவலையோடு அவருக்குஎச்சரிக்கை விடுத்தார். ‘‘உனக்கு அதற்கானவயதும், பக்குவமும் வரும் வரை காத்திரு. இப்போது நீசின்னப் பையன். நீ மனப்பூர்வமாகவே ஆராய்ச்சி செய்தாலும் அதற்கு தப்பான பெயர்சூட்டி உன்னைக் களங்கப்படுத்தி விடுவார்கள். எத்தனையோ மகத்தானஆராய்ச்சியாளர்களுக்கு செக்ஸ்வெறியர்கள்என பட்டம் கொடுத்து, தண்டனையும் கொடுத்த தேசம் இது. அப்படி ஒரு நிலைஉனக்கும் வரக் கூடாது. முதலில் ஒரு டாக்டராக புகழ் தேடிக் கொள். அப்புறம் ஏதாவதுஒரு நிறுவனத்தின் உதவியோடு ஆராய்ச்சி நடத்து. அப்போதுதான் பிரச்னை வராது’’ என்றார் அவர்.

    மாஸ்டர்ஸ் அதைஏற்றார். வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் வந்து வேலைக்குசேர்ந்தார். மாதவிடாய் கோளாறுகள், மகப்பேறுபிரச்னைகள் என பெண்கள் மருத்துவத்தில் புகழ்பெற்றார். குறிப்பாக முதுமை வந்துமாதவிடாய் நிற்கும் பருவத்தில் பெண்களுக்கு ஹார்மோன் ஊசிகளைப் போட்டு, மாதவிடாய் கோளாறு களை தடுக்கும் இவரது புதியசிகிச்சை முறையைப் பெற பெண்கள் கூட்டம் க்யூவில் நின்றது. செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சிஎதற்கும் பெண்களின் சப்போர்ட் தேவை. அது அவருக்கு கிடைத்து விட்டது.

    அவரது ஆராய்ச்சிஆசைக்கு தீனி போடும் விதமான விஷயங்கள் இங்கும் அவருக்கு கிடைத்தன. புகழ்பெற்றமகப்பேறு நிபுணர் என அவர் பெயர் வாங்கியதால், ‘‘டாக்டர்! எனக்குகுழந்தை பாக்கியம் இல்லை’’ என்ற புலம்பலோடுஅவரிடம் நிறைய பெண்கள் வந்தார்கள். அவர்களைப் பரிசோதித்துப் பார்த்த மாஸ்டர்ஸுக்குஆச்சர்யம்...

    உடல்ரீதியாகஅவர்களில் பலருக்கு எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் குழந்தை இல்லைஎன்றமனக்குறையோடு வரும் பெண்களில் நூற்றில் முப்பத்தேழு பேருக்கு செக்ஸில் ஆர்வம்இல்லை. அவர்கள் குறைந்தபட்ச ஈடுபாடு காட்டி கணவருடன் சேர்ந்து படுக்கை அறைக்குபோனாலே போதும்... அவர்களது பிரச்னை தீர்ந்துவிடும். அதைச் சொன்னால் அவர்கள்புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு செக்ஸில் நாட்டமும் இல்லை... அதுபற்றி தெரிந்துகொள்வதிலும் ஆர்வம் இல்லை.

    தவறு எங்கேஇருக்கிறது என்று அவருக்கு குழப்பம். இந்த குழப்பம் வந்தபோது அவருக்கு 38 வயதுஆகியிருந்தது. கண்ணியமான டாக்டர் என்ற பெயரும் வாங்கியிருந்தார். இப்போது நம்ஆராய்ச்சியைச் செய்ய ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு வந்தது. அமெரிக்கர்கள்தனிமனித ஒழுக்கத்தைப் பிரதான விஷயமாக மதித்த காலம் அது! செக்ஸ் என்ற வார்த்தையைஉச்சரிப்பதே ஆபாசமான விஷயமாக கருதப்பட்டது.

    ஆனாலும் செக்ஸ்ஆராய்ச்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாகநடந்து பலத்த சர்ச்சைகள் எழுந்து கொண்டிருந்தன. அதுவரை செக்ஸை ஆராய்ந்த எல்லோருமேவெறும் இன்டர்வியூ டைப் ஆராய்ச்சிகளைத்தான் முடித்திருந்தனர். பெரும்பாலும்அவர்கள் மனோதத்துவ நிபுணர்கள். எங்காவது ஒரு ஆபீஸ் போட்டுக் கொண்டு, தங்களிடம் சிகிச்சைக்குத் தனியாக, தம்பதிகளாக வருகிறவர்களிடம் கேள்விகள் கேட்டு, அவர்கள் சொல்லும் பதில்களை வைத்து ஆராய்ச்சிமுடிவுகளை அறிவித்துக் கொண்டிருந்தனர். பலருக்கு கேள்விகள் புரியாது. சிலருக்குதங்கள் பதிலை எப்படி சொல்வது என்று தெரியாது. எந்த வயதில்முதல் தடவையாக உறவு கொண்டீர்கள்? ஒரு மாதத்துக்குஎத்தனை தடவை? மனைவியுடனான செக்ஸ் தவிரவேறு ஏதாவது உண்டா?’ என்கிற மாதிரியானகேள்விகள்தான். கூச்சப்பட்டுக் கொண்டு பலர் உண்மைகளை மறைத்துவிடுவார்கள். இவைவெறும் உணர்வுப்பூர்வமான விஷயங்களாக இருந்ததே தவிர, அறிவியல்ரீதியாகஅவற்றால் உபயோகம் எதுவும் இல்லை.

    ஆனால், சும்மா இன்டர்வியூ ஆராய்ச்சி செய்ததற்கேஎதிர்ப்புகள் எழும்போது, ‘நான் பரிசோதனைக்கூடத்தில் ஒரு படுக்கையை வைத்து, அதில் பலரை உறவுகொள்ளச் செய்து ஆராய்ச்சி செய்யப் போகிறேன்என்று சொன்னால்அமெரிக்க மக்கள் தன்னைக் கொன்றே விடுவார்கள்... அதன் நல்ல பலன்கள் பற்றி எவ்வளவுசொன்னாலும் யாருடைய மண்டையிலும் ஏறாது என்பதை மாஸ்டர்ஸ் உணர்ந்தார். அதனால்முடிந்தவரை தனது ஆராய்ச்சியை ரகசியமாக வைத்துக் கொள்ள தீர்மானித்தார்.

    முதல்கட்டமாகதங்கள் பல்கலைக்கழக நிர்வாகியிடம் தனது ஆராய்ச்சி பற்றி விளக்கமாகச் சொல்லிஅவரிடம் சம்மதம் வாங்கினார். பிறகு ஆராய்ச்சியைத் தடை செய்யும் அளவுக்கு சக்திவாய்ந்தது எது எது... யார் யார் என்று ஒரு பட்டியல் போட்டார்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:09 pm

    இதில் முதலிடம்பிடித்தது சர்ச். அப்போது வரை மதம்தான் மனிதர்களுக்கான ஒழுக்க நெறிகளைவரையறுத்துக் கொண்டிருந்தது. செக்ஸை ஒருபாவச்செயல்என காலம்காலமாக சொல்லிவந்த கிறிஸ்தவ பாதிரியார்கள், செக்ஸ் தொடர்பானஆராய்ச்சிகளையும் பாவச் செயலாகவே கருதி னார்கள். மற்ற விஷயங்களைப் பொறுத்தவரைமனிதர் களின் மீதான மதத்தின் பிடி தளர்ந்து இருந்தாலும், ஒழுக்கத்தைப் பொறுத்தவரை அதன் பிடி இறுக்கமாகவே இருந்தது.

    செயின்ட் லூயிஸ்நகரிலிருந்த அனைத்து தேவாலயங்களின் நிர்வாகிகளையும் சந்தித்த மாஸ்டர்ஸ், தன் ஆராய்ச்சி மருத்துவரீதியாக எவ்வளவுமுக்கியமானது என்பதைச் சொல்லி, ‘நீங்கள் சம்மதம்சொன்னால் நான் இந்த ஆராய்ச்சியைச் செய்கிறேன்எனமுடிவெடுக்கும் பொறுப்பை அவர்கள் கையில் கொடுத்தார். இந்த தந்திரம் நல்ல பலன் தந்தது.அவர்கள் மாஸ்டர்ஸின் வெளிப்படையான அμகுமுறையில்கவரப்பட்டு அனுமதி தந்தார்கள்.

    தனதுஆராய்ச்சிக்கு ஆலோசனை சொல்ல ஒரு குழுவை உருவாக்கி இருந்தார் மாஸ்டர்ஸ். உண்மையில்அவர்களில் யாருடைய ஆலோசனையும் அவருக்கு தேவையில்லை. ஆனால் யார் யார் ஆராய்ச்சிக்குமுட்டுக்கட்டையாக இருப்பார்கள் என அவர் கருதினாரோ அவர்களை வளைத்து சும்மா ஒரு கௌரவபதவி கொடுத்து, அவர்கள் வாயை மூடும்டெக்னிக் அது! நகரில் இருக்கும் பிரபலமான மத குருக்கள் அனைவரையுமே அந்தக் குழுவில்ஆலோசகர்களாக நியமித்து விட்டார் மாஸ்டர்ஸ்.

    அடுத்தது போலீஸ்.இந்த ஆராய்ச்சியின் எந்த ஒரு கட்டத்திலும் போலீஸ் அதிரடியாக பரிசோத னைக் கூடத்தில்நுழைந்து அங்கு படுக்கை யில் இருப்பவர்களை, ‘விபசாரத்தில் ஈடுபட்டதாக’ (பரிசோதனைக்கு வந்தவர்களில் பலர் தம்பதிகள்இல்லை என்பதை நினைவில் கொள்க!) கைது செய்யும் அபாயம் இருந்தது. அது மட்டுமில்லை...ஆராய்ச்சிக் குழுவினரை விபசாரத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யக் கூடியவாய்ப்பும் இருந்தது. பொதுமக்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந் தால், ‘பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகச் சொல்லிஆராய்ச்சிக்கே தடை போட்டு விடுவார்கள்.

    தன் ஆராய்ச்சிஇப்படி குறை பிரசவம் ஆவதை மாஸ்டர்ஸ் விரும்பவில்லை. செயின்ட் லூயிஸ் நகர போலீஸ்கமிஷன ரைச் சந்தித்த அவர், எல்லா
    விவரங்களையும்சொல்லி, அவரையும் தனது குழுவில் ஆலோசகர் ஆக்கிவிட்டார்.

    மூன்றாவதாகமீடியா. இதற்கு முன் ஆராய்ச்சி செய்த பலரைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி, உணர்ச்சிமயமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி, பொதுமக்களை அவர்களுக்கு எதிராக போராட்டக்களத்தில் இறங்கவைத்து, அவர்களது இமேஜையே காலிசெய்ததில் பத்திரிகைகளின் பங்கு பிரதானமானது என்பது அவருக்கு தெரிந்திருந்தது.பத்திரிகைகளில் தன்னைப் பற்றியும், தனது ஆராய்ச்சிபற்றியும் நல்லவிதமாக வராவிட்டாலும் பரவாயில்லை... தப்பாக எதுவும் வந்துவிடக்கூடாது என நினைத்த அவர், செயின்ட் லூயிஸ்நகரில் பிரபலமான இரண்டு பத்திரி கைகளை நடத்திவந்த பதிப்பாளர் ஒருவரை சந்தித்து, ஆராய்ச்சி பற்றி சொன்னார். ‘‘நீங்களாக வந்து எங்களி டம் சொல்லாதவரை, இந்த ஆராய்ச்சி பற்றி ஒரு வரி கூட நான் எழுதமாட்டேன்’’என்று அவர் உறுதி மொழிகொடுத்தார். அப்புறம் என்ன? அவரும் ஆலோசனைக்குழுவில் இடம்பிடித்தார்.

    மாஸ்டர்ஸ் தன்ஆராய்ச்சியை முதலில் நடத்தியது செக்ஸ் தொழி லாளிகளிடம்...

    இரண்டு ஆண்டுகள்நடந்தது அந்த ஆராய்ச்சி. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து செக்ஸ்தொழிலாளிகளை வரவழைத்து, தன் பரிசோதனைக் கூடத்தில்ஆராய்ச்சி செய்தார் வில்லியம் மாஸ்டர்ஸ். 118 பெண்கள். 27 ஆண் செக்ஸ் தொழிலாளிகள். முதல்கட்டமாக அவர்களது பின்னணியை விசாரித்துக் கொண்டு, அவர்களின் குடும்ப விவரங்கள், உடல்நிலை, உணர்வுகள், தொழில் அனுபவங்கள் என எல்லாவற்றையும் கேட்டுதொகுத்துக் கொண்டார் அவர்.

    இந்தஆராய்ச்சியின் போதுதான் அவருக்கு ஒரு சுவாரஸ்யமான உண்மை புரிந்தது. செக்ஸ் தொழிலை பல பெண்கள் தேர்ந்தெடுத்ததுசுலபமாக குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கும் வழி என்பதால் மட்டுமில்லை... இந்ததொழிலுக்கு வந்திருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு சராசரி பெண்களை விட செக்ஸில்அதிக ஆசை இருக்கிறதுஎன்பதுதான் அது!

    முதல்கட்டஆராய்ச்சிகள் முடிந்து இரண்டாவது கட்டத்துக்கு அவர்களிலிருந்து எட்டு பெண்கள்மற்றும் மூன்று ஆண்களை மட்டும் செலக்ட் செய்தார். இனி ஆராய்ச்சியில் அவர்களதுஉடலும், மனமும் இணைய வேண்டும். அவர்களை ஜோடிகளாகஇணைத்து படுக்கை அறைக்கு அனுப்பி தனது கருவிகள் மூலம் ஆராய்ந்தார். அந்த மூன்றுஆண்களும், எட்டு பெண்களும் விதம்விதமான காம்பினேஷனில் பலமாதங்கள் அந்த அறைக்குள் போய் படுக்கையை பயன்படுத்தினார்கள். கிட்டத்தட்டஆராய்ச்சியின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒரு செக்ஸ் தொழிலாளியின் உணர்வுகளும், உடல்ரீதியான மாற்றங்களும் எந்த அளவு இயல்பாகஇருக்கும்?’

    ஒரு பெண் தன்கணவன் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தியபடி படுக்கையில் அனுபவிக்கும் பரவசஉணர்வுகளுக்கும், காசுக்காக அந்த சுகத்தைத்தரும் ஒரு செக்ஸ் தொழிலாளியின் உணர்வுகளுக்கும் நிச்சயம் வித்தியாசம் உண்டு.வெறும் செக்ஸ் தொழிலாளிகளை வைத்து நடத்தப்படும் இந்த சோதனை, எல்லா பெண்களையும் பிரதிபலிக்கும் சோதனையாகஇருக்காது என்பது அவருக்குப் புரிந்தது. இந்த சோதனையை வெறும் அனுபவமாக மட்டும்எடுத்துக் கொண்ட மாஸ்டர்ஸ், அந்தப் படுக்கைஅறையை தற்காலிகமாக பூட்டி வைத்துவிட்டார்.

    அப்புறம் பலபெண்களே வந்து அவரது ஆராய்ச்சியைத் தொடர வைத்தது சுவாரஸ்யமான கதை!

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:10 pm

    இந்த ஆராய்ச்சிஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் பெண்கள், படிக்கும் மாணவிகள் என பலரும் அந்த பரிசோதனைக்கூடத்தின் வராண்டா பக்கம் வரவே பயந்தனர். எப்போதும் செக்ஸ் தொழிலாளிகள் கிண்டலும், கேலியுமாக பேசிக் கொண்டு உலா வரும் இடம்என்றால் கேட்கவா வேண்டும்?
    ஆனால், நாளாக ஆக, ‘இவர் நிஜமாகவேசீரியஸாக ஏதோ செய்கிறார்என்பது அந்தவளாகத்தில் பலருக்கும் புரிந்தது. செக்ஸ் தொழிலாளிகள் மீதான ஆராய்ச்சியை திடீரெனமாஸ்டர்ஸ் நிறுத் திய போது மாணவிகளும் நர்ஸுகளும் இயல்பாகவே அவரை அணுகினார்கள். தனது ஆராய்ச்சிக்கு குடும்பப் பெண்கள்தான் தேவைஎன்பதை அவர் சொன்ன போது அவர்களில் பலர் அதற்குமுன்வந் தார்கள். தங்கள் கணவர்களோடு வந்த நர்ஸ்கள், பாய்ஃபிரண்டுகளைக் கூட்டிக் கொண்டு வந்த கல்லூரி மாணவிகள், மாஸ்டர்ஸிடம் ஏற்கெனவே சிகிச்சை பெற வந்தபெண்கள், தங்களுக்கு தெரிந்த தம்பதிகளை அனுப்பி வைத்தடாக்டர்கள் என பலரும் கைகொடுக்க வந்தனர்.

    இப்போதுஅவருக்குத் தேவை இந்த பெண்களிடம் சரளமாக பேசி அவர்களிடமிருந்து தகவல் களைத் திரட்டஒரு பெண் உதவியாளர். பத்திரிகைகளில் அவர் ஒரு விளம்பரம் கொடுத்தார். முதிர்ந்த அனுபவம் கொண்ட ஒரு இளம்பெண் தேவை.அவர் மனிதர்கள் மீது ஆர்வம் காட்ட வேண்டும். ஒரு குழந்தை எங்கே உருவாகி எப்படிவருகிறது என்ற உண்மையைப் புரிந்தவராக இருக்க வேண்டும்.

    இந்தவித்தியாசமான விளம்பரத்தைப் பார்த்து விட்டு அவரிடம் வந்தார் வர்ஜீனியா ஜான்சன்.உளவியல் நிபுணரான வர்ஜீனியா ஜான்சன் மோண்டானாவில் பிறந்தவர். மாஸ்டர்ஸை விட பத்துவயது இளையவர்.

    பாட்டுப் பாடுவது, பத்திரிகைகளில் எழுதுவது, விளம்பர ஆராய்ச்சி என பல வேலைகளை அவ்வப்போதுபார்த்து வந்த வர்ஜீனியா ஜான்சனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன.மாஸ்டர்ஸின் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி அவரது உதவியாளராக உடனே வேலைக்குசேர்ந்தார் அவர். அதன்பின் மாஸ்டர்ஸும் வர்ஜீனியா ஜான்சனும் பரிசோதனைச் சாலைபடுக்கை அறைக்கு வந்தவர்களை ஆராய்ந்தனர். பரிசோதனைக்கு வந்தவர்கள் மொத்தம் 694பேர். இதில் 312 பேர் ஆண்கள். 382 பெண்கள். இவர்களில் 552 பேர் திருமணமாகி கணவன், மனைவிகளாக வந்தவர்கள். 98 பேர் விவாகரத்துஆனவர்கள். 44 பேர் திருமணம் ஆகாதவர்கள். ஆண்களைப் பொறுத்தவரை 21 வயது இளைஞர்கள்முதல் 89 வயதில் இருக்கும் குடுகுடு கிழவர்கள் வரை வெவ்வேறு வயதுகளில்இருந்தார்கள். பெண்கள்... பதினெட்டு வயது கல்லூரி மாணவி முதல் எழுபத்தெட்டு வயதுபாட்டி வரை இருந்தார்கள். ஆறு பேர் கர்ப்பிணிகளாக பரிசோதனைக்கு வந்தார்கள். அந்தசமயத்தில் பரிசோதனைக் கூடத்தில் தங்கள் கணவரோடு உறவு கொண்ட அவர்கள், திரும்பவும் குழந்தை பிறந்த பிறகு மீண்டும்வந்தார்கள். உறவு கொண்டார்கள்.

    ஒருவழியாகஆராய்ச்சி முடிந்து அதை புத்தகமாக வெளியிடும் சமயம்... செக்ஸ் என்ற வார்த்தையேபரபரப்பு கிளப்பக் கூடியதாயிற்றே. அப்படி எதுவும் வெற்று பரபரப்பு கிளம்பி, இந்த ஆராய்ச்சியின் கண்ணியத்துக்கு பாதிப்புஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மாஸ்டர்ஸ் உறுதியாக இருந்தார். இது டாக்டர்களைக் குறிவைத்து நடந்த ஆராய்ச்சி.இந்த ஆராய்ச்சி முடிவுகள் அவர்களுக்கு உதவ வேண்டும். செக்ஸ் பிரச்னைகளோடுவருகிறவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை தர இது வழிகாட்டியாக இருக்கும். செக்ஸ்பிரச்னையால் குடும்பங்கள் சிதறாமல் இந்த புத்தகம் தடுக்கும்என அவர் நம்பினார். அந்த புத்தகமே கடினமானமருத்துவ வார்த்தைகளால் எழுதப்பட்டு இருந்தது. மருத்துவ புத்தகங்களை வெளி யிடும்பாஸ்டன் நகரைச் சேர்ந்த லிட்டில் பிரௌன் நிறு வனத்திடம் புத்தக உரிமையைக் கொடுத்தமாஸ்டர்ஸ்,‘‘பொதுமக்களை வாங்கச்சொல்லி விளம்பரம் கொடுக்கா தீர்கள்.என் புத்தகத்தை டாக்டர்கள் வாங்கினால் போதும்’’ என்று சொன்னார். கவர்ச்சியான அட்டை எதுவும்இல்லாமல் ஏதோ பாட புத்தகம் மாதிரி வெறும் எழுத்துக்களை நிரப்பிய மேலட்டையோடுதான்வெளியானது அது!

    1966&ம் ஆண்டு ‘Human Sexual Response’ என்றப்பெயரைத் தாங்கி அந்த புத்தகம்வெளிவந்தது. ஆனால், அது வெளியாவதற்கு சிலநாட்கள் முன்னதாக புத்தகத்தைப் பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்டு பலர் தாக்குதல்தொடுத்தனர்.

    ‘‘செக்ஸ் உறவில் இருக்கும்இன்பத்தைப் பற்றி மாஸ்டர்ஸ் உணரவில்லை. மெக்கானிக்குகள் பைக்கை ஓட்டி டிரையல்பார்ப்பது மாதிரி இயந்திரத்தனமாக ஒரு அறையில் தாம்பத்ய உறவைச் செய்ய வைத்து அவர்ஆராய்ச்சி செய்திருக்கிறார். இப்படி அந்தரங் கத்தை அலசி ஆராய்ந்தால் அதில்இருக்கும் சுவாரஸ்யம் போய்விடும். விலங்குகள் கூட அதை சுகமாக அனுபவிக்கும் போதுமனிதன் மட்டும் இயந் திரத்தனமாக செக்ஸை அனுபவிக் கும் பரிதாப ஜீவன் ஆகிவிடுவான்’’ என்று சமூக ஆர்வலர்கள் கூக்குரல் போட்டனர்.அந்த சமயத்தில்தான் இப்படி ஒரு ஆராய்ச்சி நடந்த விஷயமே வெளியில் தெரிந்தது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:11 pm

    இப்படி கிளம்பியபரபரப்புகளே தீனி போட, மாஸ்டர்ஸும், வர்ஜீனியா ஜான்சனும் இணைந்து எழுதிய அந்தபுத்தகம் வந்த வேகத் தில் மளமளவென விற்றுத் தீர்ந்தது. புரியாத மொழி... பத்துடாலர் விலை என இருந்தாலும் அது ஐம்பது லட்சம் பிரதிகள் விற்றது. டாக்டர்கள்வாங்குவதற்கு முன்னரே சாதாரண பொதுஜனங்கள்தான் வாங்கித் தள்ளினர். இதுவரை நியூ யார்க் டைம்ஸ்பத்திரிகை வெளி யிட்ட விற்பனைப் பட்டியலில்முதலிடம் பிடித்த ஒரே மருத்துவ நூல் அதுதான்.

    செக்ஸின் போதுநாடித்துடிப்பு எவ்வளவு அதிகரிக்கிறது... ரத்த அழுத்தம் எவ்வளவு எகிறுகிறது...கண்ணுக்குள் இருக்கும் பாப்பா எப்படி நெகிழ்கிறது என பல விஷயங்களையும் அந்தபுத்தகம் டெக்னிக்கலாக சொல்லியிருந்தாலும் அதன் வீரியம் இன்னொரு பக்கத்தில்தான்வெளிப்பட்டது. காலம் காலமாக செக்ஸ் பற்றி இருந்துவந்த பல நம்பிக்கைகளைஒட்டுமொத்தமாக தகர்த்தது அது.

    வயதுக்கு வந்த உடனேஒருவர் செக்ஸில் ஈடுபட தயாராகி விடுவதாக நினைப்பது தவறு. உடல், மனசு இரண்டும் பக்குவப்பட வேண்டும். அதன்பின்னரே ஒருவரால் செக்ஸில் ஈடுபட முடியும்என்றார்மாஸ்டர்ஸ்.

    செக்ஸ் அறிவுஎன்பது தானாக வருவதில்லை. முறையாக கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைஎன்கிற மாதிரியான பழமொழிகள் எல்லாமே தப்பு.மீன்குஞ்சு பிறந்ததும் நீந்தக் கற்றுக் கொள்வது மாதிரி அந்த வயது வந்ததும் இதைதானாக கற்றுக் கொள்வார்கள் என நினைப்பது ஆபத்து. அதை பலர் தப்பாக கற்றுக்கொள்வதால் பிரச்னைதான் வருகிறது. அப்படிப்பட்டவர்கள்தான் பிரச்னைகளில்தவிக்கிறார்கள் என்றார் மாஸ்டர்ஸ்.
    அதேபோல வயதானதும் செக்ஸைக் குறைத்துக் கொள்ள வேண்டும்என்று அதுவரை சொல்லப்பட்ட அட்வைஸையும் அவர்மறுத்தார். உடல் ஒத்துழைத்து, ஆர்வமுள்ள துணை கிடைத்தால் எண்பது வயதிலும்ஒருவர் இருபது வயது இளைஞனைப் போல செயல்படலாம்என்றார் அவர்.

    மலட்டுத் தன்மைஎன லேபிள் குத்தி பல பெண்கள் குழந்தை பெறலாயக்கற்றவர்களாக ஒதுக்கப்படுவதை அவர் கடுமையாக எதிர்த்தார்.

    எப்போது, எப்படி உறவு கொள்ள வேண்டும் என்ற விஷயம்புரிந்தாலே இதில் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். மேலும் இது தொடர்பானகுறைபாடுகளில் அறுபது சதவிகிதம் ஆண்களிடம்தான் இருக்கிறது. இதற்கு காரணம் பயம்தான்என்றார் அவர். செக்ஸ் என்பது ஏதோ குழந்தைபெறுவதற்கோ, உணர்ச்சிகளை கொட்டித்தீர்த்துக் கொள்வதற்கோ மட்டுமான விஷயம் இல்லை. அது உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒருபழக்கம். அந்த நெருக்கமான உறவின் மூலம் ஆணும், பெண்ணும்சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வது தான் சமூக நியதி என்பது அவரது முடிவு. செக்ஸில்ஆண்களைப் போலவே பெண்களும் பரவச நிலையை அனுபவிக்கிறார்கள். ஆண்களுக்கு விரைவாகபாலுணர்வு கிளர்ந்து எழுகிறது. ஆனால், பெண்ணுக்கு இந்தகிளர்ச்சி தாமதமாகவே வருகிறது. பல சந்தர்ப்பங்களில் பெண்கள் இப்படி கிளர்ச்சி அடையஆரம்பிப்பதற்குள் ஆண்கள் முடித்து விடுகின்றனர். இதனால் திருமணமான பெண்களில்நான்கில் ஒருவர் பல ஆண்டுகள் உறவுக்கு பிறகு கூட அந்த பரவசத்தை அனுபவித்ததில்லை.பெரும்பாலான ஆண்கள் இப்படி பெண்களின் உணர்வுகளை மதிக்காததால் ஏற்படும்வெறுப்புதான் அந்த உறவின் மீது பலருக்கு ஆர்வமே இல்லாமல் செய்து விடுகிறது"என்றார் அவர். முதல் புத்தகம் போலவே அடுத்தடுத்து இரண்டு புகழ்மிக்க புத்தகங்களைமாஸ்டஸும் வர்ஜீனியா ஜான்சனும் வெளியிட்டனர். செக்ஸை ஆரம்பித்து முடிக்கும் வரைஉடலில் ஏற்படும் மாற்றங்களை நான்கு கட்டமாக அவர்கள் பிரித்தனர். இதில் முதல்நிலை உணர்ச்சி வசப்படும் கட்டம்.இதற்கு அடுத்தது, இந்த உணர்ச்சியைஅப்படியே நிலைநிறுத்தி வைக்கும் பீடபூமி நிலை.உச்சகட்ட இன்பத்தை அடைவது மூன்றாவது நிலை.இதன்பின் ஓய்வெடுப்பது நான்காவது நிலை. சரி... இதில் என்ன லாபம்?

    இதற்கு முன்புவரை செக்ஸ் பிரச்னைகளுக்கு ஒரே பெயர்தான். பிரச்னையுள்ள ஆண்களை ஆண்மையற்ற வர்கள்என்றும், பெண்களை கிளர்ச்சியற்ற தன்மை உள்ளவர்கள்' எனவும் வகை பிரித்திருந்தனர். சிகிச்சையும்அவர்களுக்கு ஒரே விதமானதுதான். காரில் நான்கு டயர்கள். அதில் ஏதாவது ஒன்றுபஞ்சராகி இருக்கும். பஞ்சரை ஒட்டாமல் நான்கு டயர்களுக்கும் சும்மா காற்றடித்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரிதான்செய்தார்கள். அதனால் பலனும் இல்லாமல் போனது. இப்போது இந்த இரண்டு வார்த்தைகளும்செல்லாதவை ஆகிவிட்டன.

    உலகம் முழுக்கஇனம், நிறம், நாடு, மொழி என பலவிதங்களில் மனித இனம்வித்தியாசப்பட்டு இருந் தாலும் அவர்கள் எல்லோருக்கும் செக்ஸைப் பொறுத்தவரை ஒரேமாதிரியான உணர்வுகளே இருக்கும். இதில் ஒருவருக்கு பிரச்னை என்றால் ஒட்டுமொத்தமாகவேஅவருக்கு எல்லாம் முடியாமல் இருக்க முடியாது. சிலருக்கு செக்ஸ் ஆசையில் தான்பிரச்னை இருக்கும். ஆசை அதிகமாக இருக் கும் அல்லது குறைவாக இருக்கும். சிலருக்குஉணர்ச்சிவசப்பட்ட தன்மையை அப்படியே நிலைநிறுத்தி பரவசநிலைக்கு போக முடியாமல்இருக்கும். சிலருக்கு பரவச நிலையில் பிரச்னை இருக்கும். துரித ஸ்கலிதம் ஆகிவிடும்.அவரை விசாரித்து இந்த நான்கில் எந்த கட்டத்தில் அவருக்கு பிரச்னை என்று கேட்டு, அதற்கு தகுந்த சிகிச்சை கொடுத்தால் போதும்...பிரச்னை தீர்ந்துவிடும் என்பது இந்த ஜோடி சொன்ன விஷயம்.

    ஹெலன் சிங்கர்கெப்ளான் என்ற உளவியல் நிபுணர், ‘‘எல்லாம் சரி...ஆசையை விட்டுட்டீங்களே! மனதில் ஆசை இல்லாமல் இரண்டு பேருக்கு மத்தியில் உறவுநடந்தால் அதில் பரவச நிலை வராது. அந்த ஆசையை மாஸ்டர்ஸ் முழுமையாக தன்ஆராய்ச்சியில் புறக்கணித்து விட்டார்’’ என்றுவேகப்பட்டார்.

    ஆனால், இந்த வகை சிகிச்சையில் செக்ஸ் தொடர்பானபிரச்னைகளில் 99 சதவிகிதத்துக்கு தீர்வு இருக்கிறது என்ற மாஸ்டர்ஸும், வர்ஜினியா ஜான்சனும் இதற்காக ஒரு மையத்தையும்தொடங்கினர். அங்கு அவர் தந்த ஒரு அதிரடி சிகிச்சை இன்னும் பலத்த சர்ச்சையைஏற்படுத்தியது.

    அது...தாயால்வளர்க்க முடியாத குழந்தையை செவிலித் தாய் வளர்ப்பது மாதிரி, செக்ஸ் அனுபவிப்பதில் பிரச்னை உள்ள ஆண்களுக்குசெவிலித் துணையாக பெண் ஒருவரை அனுப்பி படுக்கையில் செக்ஸை கற்றுத்தரும் சிகிச்சை.

    இதில்தான்வாழ்க்கையில் பெரும் எதிர்ப்பை சந்தித்தார் மாஸ்டர்ஸ்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:11 pm

    வரலாற்றில்முதல்முறையாக பரிசோதனைக் கூடத்தில் செக்ஸை நிகழ்த்த வைத்து, அதில் ஆராய்ச்சிகள் செய்த கையோடுசிகிச்சையிலும் இறங்கினார் மாஸ்டர்ஸ். ஆராய்ச்சி நடந்த அதே செயின்ட் லூயிஸ் நகரில்கடந்த 70-ம் ஆண்டு அவரது மருத்துவ மனை துவங்கியது. அங்கு செக்ஸ் குறைபாடுகளுக்குஅவர் தந்த இரண்டு வார சிகிச்சை, பயங்கர பாப்புலர்ஆனது.

    ‘‘ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ படுக்கையில் செக்ஸ் உணர்வுஇயல்பாகவே கிளர்ந்தெழும். ஆனால், ஏதோ ஒருகுறுக்கீடு ஏற்படும் போதுதான், அதில் குறைபாடுஏற்படுகிறது. அதற்கு சமூகம் காரண மாக இருக்கலாம். மதம் காரணமாக இருக்கலாம்.அனுபவங் கள் காரணமாக இருக்கலாம். ஏதாவது மூட நம்பிக் கைகள்கூட காரணமாக இருக்கலாம்.அதை சரிசெய்யத் தான் சிகிச்சை. எப்படி செய்வது என எதையும் டாக்டர் கற்றுத்தரமுடியாது. அந்த தடைகளை அகற்றி அவர்களை இயல்பாக்கி விட்டால் போதும். அவர்களேஇயற்கையாக நடந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்’’ என்றுவெளிப்படையாகவே தனது சிகிச்சை அணுகுமுறை பற்றி சொன்னார் மாஸ்டர்ஸ்.

    பெரும்பாலானவர்களுக்குபிரச்னை ஏதாவது தப்பான முன்அனுபவங்களாகவே இருக்கும். திருமணத்துக்கு முன் செக்ஸ்தொழிலாளிகளிடம் போயிருப்பார்கள். பதற்றமும், பயமும், முதல் தடவை என்கிற உணர்வும் ஏராளமானவியர்வையைக் கிளப்பிவிட்டு எல்லாவற்றையும் தப்பாக்கி இருக்கும். அந்த தருணத்தில், ‘நான் இதற்கெல்லாம் லாயக்கில்லைஎன்கிற மாதிரியான உணர்வு மனதில் ஆழமாகப்பதிந்து விட்டி ருக்கும். அதை அகற்றுவது கஷ்டமான விஷயம். திருமணத்துக்கு பிறகுமனைவியைத் தொடும்போதெல்லாம் அந்த உணர்வு மேலெழும்பி வர, செக்ஸ் உணர்வு இல்லாமல் போய் விடும். இதேபோலசிறுவயதில் பார்த்த செக்ஸ் காட்சிகள், நேர்ந்த துயரமான

    அனுபவங்கள், அதனால் எழுந்த பாதிப்புகள்... இப்படி பலவிஷயங்கள் ஆண்களையும், பெண்களையும் பாதித்துஅவர்களை நோயாளிகள் ஆக்குகின்றன. மாஸ்டர்ஸ் வெளிப்படையான சிகிச்சை முறையைத்துவக்கியதற்கு முன்பெல்லாம் உளவியல் நிபுணர்கள் தான் இந்த மாதிரியானபிரச்னைகளுக்கு சிகிச்சை தருவார்கள். பிரச்னை உள்ள ஆசாமி ரகசியமாக தனியாக வருவார்.அவரின் மனைவிக்குக்கூட கணவனின் பிரச்னை தெரியாது, ஆண்டுக்கணக்கில்நீளும் சிகிச்சையில் பலன் பெரும்பாலும் இருக்காது. மாஸ்டர்ஸ் புகுத்தியசிகிச்சைமுறை இதிலிருந்து வித்தியாசமானது. பிரச்னை உள்ளவர் தனியாக வரக் கூடாது.தன் மனைவி அல்லது கணவனோடு வர வேண்டும். இரண்டு வாரங்களும் தினமும் மருத்துவமனைக்குவர வேண்டும். செக்ஸ் சிகிச்சை தருவதில் பயிற்சி பெற்ற ஒர் ஆணும், பெண்ணும் ஜோடியாக அவர்கள் முன் அமர்ந்துபேசுவார்கள். இயல்பாக இரண்டு ஜோடிகளும் பேசிக் கொண்டிருக்கும்போது பிரச்னை எங்கேஎன்பது புரிந்துவிடும். கொஞ்சம் உளவியல் சிகிச்சை, கொஞ்சம் மருத்துவசிகிச்சை என இரண்டையும் கலந்து கொடுத்தார் மாஸ்டர்ஸ். கிட்டத்தட்ட எண்பது சதவிகிதஜோடிகளுக்கு இதிலேயே பிரச்னை தீர்ந்து, அவர்கள்வாழ்க்கையில் முதல்முறையாக படுக்கை அறை சந்தோஷத்தை அனுபவித்தனர். பலருக்குகுழந்தையும் பிறந்தது.

    இன்றுஉலகெங்கிலும் பல நாடுகளிலும் செக்ஸ் பிரச்னைகளுக்கு தரப்படும் சிகிச்சைக்குஅடிப்படை இதுதான்! ஆனால், அவரைப் போலஇரண்டு வாரம் வந்து தங்கச் சொல்லி யாரும் வற்புறுத்துவதில்லை. அந்த காலத்திலேயேஇந்த சிகிச்சைக்கு அவர்கள் 5000 டாலர் கட்டணம் வசூலித்தார்கள்.

    இரண்டு வாரம் வேலைக்குப்போகாமல் பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு வந்து நான் சொல்லும் இடத் தில்தங்கு... இவ்வளவு ஃபீஸ் கொடுஎன்றெல்லாம் நம்மஊரில் சொல்ல முடியாது. இரண்டு வாரம் சம்பாதிக்கா மல் இருந்தால் அப்புறம் அவர்கள்டாக்டருக்கு எப்படி ஃபீஸ் கொடுப்பார்கள்? அது தவிர ஒரு செயற்கையானசூழ்நிலையில் இரண்டு வாரம் தங்கும்போது அவர்களுக்குள் எப்படியாவது நெருக்கத்தைஏற்படுத்தி உறவை சாத்தியமாக்கி விடும். ஆனால், திரும்பவும்வீட்டுக்கு போனதும் பழையபடி பிரச்னைதான்.

    இதையெல்லாம்கணக்கில் எடுத்துக் கொண்டு இப்போதைய சிகிச்சை முறை வேறு மாதிரியான வடிவம்எடுத்திருக்கிறது. டாக்டரிடம் ஐந்து முதல் பத்து தடவை சிகிச்சைக்கு வந்தால்போதும்... அங்கு தரப்படும் சிகிச்சையை வைத்து வீட்டில் போய் அவர்கள்நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இதில் சிகிச்சைஎன்பது மருந்து மற்றும் மனரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் கவுன்சிலிங் ஆகியஇரண்டும் இணைந்தது. மனதில் ஆசை இருந்து உடலும் ஒத்துழைத் தால் மட்டுமே ஒருவரால்செக்ஸில் ஈடுபட முடியும். இரண்டும் இப்படி இணைந்து உறவில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் மனதில் தோன்றும் பயமோ, அல்லது வேறு ஏதோஉணர்வுகளோ அவர்களது கவனத்தை திசைதிருப்புகிறது. அதை மாற்றி நூறு சதவிகிதஈடுபாட்டுடன் அவர்களை உறவு கொள்ள வைப்பதுதான் சிகிச்சை. இதில் வெறும் மாத்திரைகள்பலன் தராது. சும்மா அட்வைஸ் கொடுத்தாலும் வேலைக்கு ஆகாது. புதைகுழியில் சிக்கிஇருப்பவனுக்கு, ‘பயப்படாதே தம்பி! ஒன்றும்ஆகாது. நீ கவனமாக பார்த்து வந்திருக்கக் கூடாதா?’ என்றெல்லாம்சொல்லப்படும் அட்வைஸ்கள் தேவையில்லை. அவனை அதிலிருந்து மேலே கொண்டுவர வேண்டும்.அதுதான் முக்கியம்.
    செக்ஸ்சிகிச்சையும் இது மாதிரிதான்! அதை எப்படி செய்வது என்று சொல்லித் தருவது சிகிச்சைஇல்லை... அந்த உறவைத் தடுக்கும் பயம் அல்லது தயக்கத்திலிருந்து மீண்டு வரும்வழியைக் கற்றுத் தருவதுதான் சிகிச்சை. உதாரணமாக ஒரு குழந்தை கீழே விழுந்துஅடிபட்டு சிராய்ப்பு ஏற்படுகிறது... உடனே அது அழுகிறது. அந்த வலியை மூளை உணர்வதால்அது அழுகைக்கான கட்டளைகளை பிறப்பிக்கிறது... அதனால் அழுகை வருகிறது. அதேகுழந்தைக்கு ஒரு சாக்லெட் கொடுத்தால் அதை சுவைத்ததும் அழுகை நிற்கிறது. காரணம், இந்த இனிப்பு, வலியைமறக்கடிக்கிறது.

    கவனம்திசைதிரும்புவதுதான் இதற்கு காரணம். ஒவ்வொரு செயலுக்கும் என்று மூளையில் தனித்தனிபகுதிகள் உண்டு. செக்ஸ§க்கும் மூளை, தண்டுவடம் ஆகிய இரண்டு இடங்களிலும் தூண்டல்தேவை. மனதில் உணர்வு எழுந்ததும், இவை தூண்டப்பட்டுசெக்ஸ் உறுப்புகளில் அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து அது உறவுக்கு தயாராகிறது. இந்தசமயத்தில் வேறு ஏதோ நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கும்போது மூளையின் தூண்டுதல்தற்காலிகமாக தடைபடுகிறது. இதன் எதிரொலியாக எல்லாமே கெட்டு விடுகிறது. இப்படி கவனம்சிதறாமல் நிலைநிறுத்துவதுதான் சிகிச்சை. இப்போது ஒவ்வொரு குறைபாட்டுக்கும் எனபலவகை மருந்துகள் வந்து விட்டதால் எல்லாம் சுலபமாக முடிகிறது.

    ஆனால், மாஸ்டர்ஸ் காலத்தில் இவ்வளவு மருந்துகள்கிடையாது. அதனால் ஒரு டாக்டருக்குரிய தொழில் தர்மத்தை மீறி, அவரது கௌரவத்துக்கே களங்கம் நேர்கிற ஒருவிஷயத்தை அவர் முயன்று பார்த்தார்.

    தம்பதிகளாக வருகிறவர்களுக்குஇரண்டு வார சிகிச்சை ஓகே! திருமணமாகாத ஒருவரோ, மனைவியை இந்தபிரச்னையால் பிரிந்து தனியாக வாழும் நிலையிலிருக்கும் ஆணோ இந்த சிகிச்சைக்குவந்தால் என்ன செய்வது? இதற்காகவே செவிலித் துணை’ ((surrogate partner ) என்ற புதிய சிகிச்சையை அவர் ஏற்படுத்தினார்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:12 pm

    இதற்காகமாஸ்டர்ஸ் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து சில பெண்களையும், ஆண்களையும் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சிகொடுத்தார். இந்த தொழிலுக்கு வரும் அவர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும்அல்லது விவாகரத்து பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது அவர் விதித்த நிபந்தனை.

    பிரச்னையோடுஒருவர் வந்தால் அவரிடம் டாக்டர் முதலில் விசாரிப்பார். அவருக்கு செக்ஸைஆரம்பிப்பதில் பிரச்னையா, ஆரம்பத்தில்கிளர்ந்த உணர்வுகளை அப்படியே நிலை நிறுத்துவதில் பிரச்னையா, அல்லது உச்சகட்ட இன்பம் கிடைக்கவில்லையா, வழக்கமில்லாத வலி ஏதாவது ஏற்படுகிறதா என்றுவிசாரிப்பார். அதன்பிறகு செவிலித் துணையை அழைத்து அவரை அந்த கிளையன்ட்டுக்குஅறிமுகம் செய்து வைப்பார் டாக்டர். அவருக்கு என்ன பிரச்னை... செவிலித் துணை என்னசெய்ய வேண்டும் என்பதை விளக்கமாக சொல்லி விடுவார்.

    அதன்பிறகுடாக்டர் இல்லாமல் அவர்கள் சந்தித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் இரண்டு மணிநேர பயிற்சி. முதலில் படுக்கை அறைக்கு ரிலாக்ஸாக போக உதவும் சில எளிமையானஉடற்பயிற்சிகள் சொல்லித் தரப்படும். பிறகு தன் அந்தரங்க பாகங்கள் எப்படிஇருக்கிறது என்பதை தன் உடலில் காட்டி விளக்கு வார் செவிலித் துணை. அதன்பிறகுசும்மா தொட்டுக் கொள்வதிலேயே எப்படி உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவது என்று பயிற்சி.இந்த பயிற்சிக்குள் இருவருமே அந்தரங்க மாக பேசிக் கொள்ளுமளவுக்கு நெருக்கமாகிவிடுவார்கள். நெருக்கம்தானே உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதில் பிரதான பங்குவகிக்கிறது!

    இந்த எல்லாம்முடிந்த பிறகு கடைசியாகத்தான் ஆடைகளற்ற உறவு. எல்லாமே ஏழெட்டு தடவை நிகழும்சந்திப்புகளுக்குள் நடந்து முடிந்து அவரது பிரச்னை தீர்ந்துவிடும். மிகச் சிலருக்குமட்டுமே இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும். (என்னிடம் வந்தஒருவருக்கு 52 தடவை பயிற்சி கொடுத்த பிறகுதான் பிரச்னை தீர்ந்ததுஎன்று லிண்டா போயல்ட்ஸ் என்ற செவிலித் துணை தன்அனுபவக் கதைகளை எழுதும்போது குறிப்பிட்டு இருந்தார். அநேகமாக இவர்தான் அதிக நேரம்எடுத்துக் கொண்ட நபராக இருக்கும்!).

    கொஞ்சம் மருத்துவஅறிவு, உளவியல் மற்றும் சமூகவியல் படிப்பு, சுமாரான அழகு, செக்ஸில் ஈடுபாடு, அன்பாக பழகும் குணம் இவை இருக்கும் யாரையும்இப்படி செவிலித் துணையாக பயன்படுத்தி பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று நம்பினார்மாஸ்டர்ஸ்.

    ஆனால், அவருக்கும் சறுக்கியது. அவரிடம் பயிற்சி பெற்றுசெவிலித் துணையாக பணிபுரிந்த ஒரு பெண் தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டே இந்தவேலைக்கு வந்ததாக சொன்னார். ஆனால், அது உண்மையில்லை.இருவருக்குள் ஏதோ சண்டை. கோபித்துக் கொண்டு பிரிந்த அந்த பெண் அப்படியே இந்தவேலைக்கு வந்துவிட்டார்.
    திரும்பவும்மனைவியைத் தேடிக் கொண்டு வந்த அவருடைய கணவர், தன் மனைவிசெய்யும் வித்தியாச மான வேலையைப் பற்றிக் கேள்விப்பட்டு ஷாக் ஆகி கோர்ட்டில்வழக்கு போட்டு விட்டார். என் மனைவிக்குமாஸ்டர்ஸ் தப்பான அட்வைஸ் கொடுத்து, அவளைக்கட்டாயப்படுத்தி பல ஆண்களோடு பழகச் சொல்கிறார். படுக்கைக்கு அனுப்புகிறார்என அவர் வழக்கு போட, அமெரிக்காவே அதிர்ந்தது. இப்படிக் கூடவா சிகிச்சை தருவார்கள்?’ என பலர் முகத்தை சுளித்தனர்.

    மாஸ்டர்ஸின்வழக்கறிஞர்கள் அட்வைஸ் செய்தபோதுதான் இதன் விபரீதம் அவருக்கு புரிந்தது. ‘‘இது சிகிச்சை என்று நீங்கள் சொல்லலாம் ஆனால், சட்டம் இதை அனுமதிக்கவில்லை. உங்கள் பார்வையில்இது சிகிச்சை... சட்டத்தின் பார்வையில் இது கிட்டத்தட்ட விபசாரம். வழக்கு நடந்தால்நமக்கு தோல்வி கிடைக்கும். கோர்ட்டுக்கு வெளியே சமாதானம் பேசி செட்டில் செய்துகொள்ளுங்கள்’’ என்றனர் அவர்கள். அந்ததம்பதிக்கு பெரும் தொகை கொடுத்து வழக்கை வாபஸ் பெறவைத்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டார் மாஸ்டர்ஸ்.

    இந்த சிகிச்சையில்கொள்கைரீதியாக எனக்கு உடன்பாடு இல்லைஎன்று சொல்லிஅதோடு இதை நிறுத்திக் கொண்டார் அவர்.

    எந்த செக்ஸ்நிபுணரும் மாஸ்டர்ஸின் இந்த பரிசோதனை முயற்சியை ஏற்கவில்லை. இதெல்லாம் அபத்தம். சமூக நியதிக்கு எதிரானதுஎன கண்டித்து இந்தவகை சிகிச்சையை நிராகரித்துவிட்டார்கள். சட்டப்படியும் இதற்கு தடை போடப்பட்டு விட்டது.

    ஆபாச அலையைவளர்த்தவர்... சமூகம் கெட்டுப் போவதற்கு காரணமானவர்... ஒழுக்கக்கேட்டைத்தூண்டியவர்... இப்படி பல பெயர்களைச் சூட்டி மாஸ்டர்ஸை அமெரிக்காவில் ஒரு குழுவினர்திட்டினாலும் கலிலியோ, டார்வின் போன்றஅறிஞர்களுக்கு நிகராக அவரை மதிக்கும் பலர் அங்கே உண்டு. ஆனால், கின்ஸியோடு ஒப்பிடும்போது - மாஸ்டர்ஸ் சந்தித்தஎதிர்ப்புகள் ரொம்ப குறைவு. மாஸ்டர்ஸ் ஆராய்ச்சியை நடத்துவதற்கு பல ஆண்டுகளுக்குமுன்பே அமெரிக்க சமூகத்தின் ஒழுக்கக்கேட்டை அம்பலப்படுத்திய கின்ஸி, தினம் தினம் நரக வேதனையை அனுபவித்தார்...

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:13 pm

    77 வயதில்திருமணம்!

    மாஸ்டர்ஸ்ஏற்கெனவே திருமணமானவர். வர்ஜீனியா ஜான்சனும் ஏற்கெனவே திருமண பந்தத்தில்இருந்தவர். ஆனால், மாஸ்டர்ஸ§ம் வர்ஜீனியா ஜான்சனும் பல வருடங்களாக இணைந்துசெக்ஸ் பற்றி செய்த ஆராய்ச்சி, அவர்களுக்குள்நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தங்கள் முதல் துணைகளை இருவருமே விவாகரத்துசெய்துவிட்டு, 1969-ம் ஆண்டு திருமணம்செய்து கொண்டனர். அப்போது மாஸ்டர்ஸ§க்கு 53 வயது.அதன் பிறகு 23 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள், கடந்த 92-ம்ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்த னர். அதோடு அவர்களது ஆராய்ச்சி, சிகிச்சை எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது. ‘‘செக்ஸ் ஆராய்ச்சி செய்து பல குடும்பங்களில்படுக்கை அறையில் சந்தோஷம் நிலவ காரணமான ஜோடி இது. இவர் களாலேயே சேர்ந்து வாழமுடியவில்லை என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்? திருமண அமைப்பின்மீதே சந்தேகம் வரும் அல்லவா?’’ என அப்போது பலசெக்ஸ் நிபுணர்கள் வெளிப்படையாகவே கவலைப்பட்டார்கள். ஆனால், அந்த 77 வயதில் மூன்றாவதாக ஜெரால்டின் என்றபெண்மணியைத் திருமணம் செய்து கொண்ட மாஸ்டர்ஸ் 85 வயதில் இறக்கும் வரை அந்தப்பெண்ணோடு வாழ்ந்தார்.

    நம்ப முடியாதஉண்மை!

    கர்ப்பம்’ - இந்த வார்த்தையை உச்சரிக்கவும், ஒரு கர்ப்பிணியை டி.வி-யில் காட்டவும்அமெரிக்காவில் தடை இருந்தது. லூசில்லே பால் அமெரிக்காவின் புகழ்பெற்ற டி.வி.நடிகை. கடந்த 53-ம் ஆண்டு இவர் தயாரித்து நடித்த ஐ லவ் லூசிஎன்ற தொடர் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தபோதுஇவர் கர்ப்பமானார். தொடரை நிறுத்த விரும்பாமல், இவரது கேரக்டரேகர்ப்பமாவது மாதிரி கதையை மாற்றினார் டைரக்டர். ஆனால், ‘கர்ப்பம்என்ற வசனமும், கர்ப்பிணியின் திரைத் தோற்றமும் ஆபாசமானதுஎன்று தடை செய்தார்கள் டி.வி. நிலையத்தினர். பாதிரியார்கள், யூத மதகுருக்கள் பலரை சந்தித்து, ‘கர்ப்பம் என்பது ஆபாசமான விஷயம் இல்லை. இது மதநம்பிக்கைகளுக்கு எதிரானதும் இல்லை. இதை தாராளமாக டி.வி-யில் காட்டலாம்என லூசில்லே பால் விளக்கம் கொடுத்தார். இதைதொடர்ந்து லூசில்லேவுக்கு ஆதரவாக கருத்து சொன்னார்கள் - பாதிரியார்களும் மதகுருமார்களும். இதன்பின் லூசில்லே கர்ப்பிணியாக தோன்றுவதற்கு அனுமதித்த டி.வி.நிலையம், ‘கர்ப்பம்என்ற வசனத்தைமட்டும் சென்ஸார் செய்துவிட்டது. அதற்கு பதிலாக, ‘நான்எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்என்ற வசனத்தைபயன்படுத்தச் சொன்னது. அதை திக்கித் திக்கி பேசி காமெடி ஆக்கினார் அவர். உலகிலேயேடி.வி-யில் தோன்றிய முதல் கர்ப்பிணி அவர்தான்!

    கிட்டத்தட்டபதினான்காயிரம் ஆண்களிடம் இன்டர்வியூ நடத்தி, அவர்களதுபழக்கவழக்கங்களைத் தொகுத்து, ஆண்களின் செக்ஸ்பழக்கம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு புத்தகத்தை எழுதினார், டாக்டர் ஆல்ஃபிரட் சார்லஸ் கின்ஸி. ‘Sexual behaviour in HumanMale’ என்ற அந்தப் புத்தகம்1948-ல் வெளிவந்தது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:13 pm

    கின்ஸி அதில்சொல்லியிருந்த எல்லாமே வெடிகுண்டு சமாசாரங்கள். புத்தகம் வெளியான அடுத்த நொடி, அமெரிக்காவே பற்றி எரிந்தது.

    நான் பேசிய அத்தனைஆண்களில் 95 சதவிகிதம் பேர் வாழ்க்கையில் ஒரு தடவையாவது சுயஇன்பம் அனுபவித்ததாகஒப்புக்கொண்டார்கள். மீதி ஐந்து சதவிகிதம் பேர் அவசரமாக, ‘சேச்சே! எனக்கு அப்படி எந்த பழக்கமும் இல்லைஎன்று மறுத்தார்கள். அநேகமாக, அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றுதான் எனக்குத்தோன்றுகிறது’.
    அதேபோலவே ஆண்களில்பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கை எப்படிப்பட்ட உணர்வுகளைத் தரும் என ஒருதடவையாவது முயற்சித்துப் பார்த்ததாகச் சொன்னார்கள். இதுதவிர, அமெரிக்க ஆண்களில் பத்து சதவிகிதம் பேர்பெரியவர்கள் ஆனதும், ஓரினச்சேர்க்கைப்பிரியர்களாக இருக்கிறார்கள்.

    ஆண்களில் எண்பத்தைந்துசதவிகிதம் பேர் கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ் உறவை அனுபவித்து இருக்கிறார்கள்.தங்கள் மனைவி கற்போடு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் இவர்கள் அப்படி இல்லை.

    முப்பது முதல்நாற்பத்தைந்து சதவிகித ஆண்கள் திருமணத்துக்குப் பிறகு மனைவியைத் தவிர வேறுபெண்களோடு உறவு வைத்திருக்கிறார்கள்.
    & யாருக்கும் தெரியக்கூடாது என்று மனசுக்குள் பொத்திப் பொத்தி வைத்திருந்த அழுக்கான ரகசியங்கள் வெளியேதெரிந்தால் அளவிட முடியாத கோபமும், அதிர்ச்சியும்பொங்கி வழியும்! அப்படித்தான் ரியாக்ட் செய்தது அமெரிக்க சமுதாயம்.

    இப்போதுபோலஅமெரிக்கர்கள் அப்போது எதையும் டேக் இட் ஈஸிஎன அலட்சியப்படுத்தும் மனோபாவத்தில் இல்லை.இரண்டாம் உலகப் போர் அப்போதுதான் முடிந்திருந்தது. போரில் லட்சக்கணக் கானவர்கள்இறந்து போயிருக்க, குடும்பப் பிணைப்பு, அன்பு, பாசம் என எல்லாஉணர்வுகளும் உச்சத்தில் இருந்த நேரம் அது!
    அதோடுகாலம்காலமாக செக்ஸ் விஷயத்தில் மதம் புகுத்திய கட்டுப்பாடுகள் தளராமல் அப்படியேஇருந்துவந்தது. செக்ஸைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதே பாவ காரியமாக கருதப்பட்டநேரம் அது! கணவனுக்கும், மனைவிக்கும் இடையே நிகழும் தாம்பத்ய உறவைத்தவிர, யாரும் எதையும் தப்பாக செய்வதில்லை... சமுதாயம்நேர்மையான பாதையில் போய்க்கொண்டிருக்கிறதுஎன பொதுவானநம்பிக்கை இருந்த காலம்!

    அந்த சமயத்தில்போய் அவர்களின் அசிங்கமான மறுபக்கத்தை அம்பலப்படுத்தி, ‘உங்கள் புருஷன் கல்யாணத்துக்கு முன்பும் சரி, பின்னாலும் சரி, உங்களிடம்உண்மையாக இல்லை. அது மட்டுமில்லை... அவர் சுய இன்பம் அனுபவித்தார். ஓரினச்சேர்க்கை அனுபவத்துக்கும் அவர் ஆசைப்பட்டார்என்று சொன்னால்எப்படி இருக்கும்?
    அமெரிக்காவேஆத்திரத்தில் பொங்கியது. கின்ஸிசெய்திருக்கும் வேலை அமெரிக்காவில் குடும்ப அமைப்பையே சிதைத்துவிடும். அவர்ஒழுக்கக் கேட்டை பரப்புகிறார். காலம்காலமாக இருந்துவரும் ஒழுக்க மதிப்பீடுகளை ஒரேநொடியில் தகர்த்துத் தரை மட்டமாக்கி விட்டார். இளைய சமுதாயத்தைத் தவறான பாதையில்திருப்பி விடுகிறார். கலாசார சீரழிவை தொடங்கி வைக்கிறார்என்றெல்லாம் அவரைத் திட்டினார்கள். அவர் இறந்துஐம்பது வருஷங்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும்கூடஅவரைத் திட்டுபவர்கள் உண்டு. குழந்தைகளைக்கூட சிதைக்கும் செக்ஸ் வக்கிரம், எய்ட்ஸ் என்ற எமன்... இப்படி அமெரிக்காவைஇப்போது அச்சுறுத்தும் பல விஷயங்களுக்கும் அவரைக் குற்றம்சாட்டும் மனோபாவம்குறிப்பிட்ட சதவிகித மக்களிடம் இருக்கிறது.

    கின்ஸி, அடிப்படையில் ஒரு விலங்கியல் ஆராய்ச்சி யாளர்.அவர் செக்ஸைப் பற்றி ஆராய வந்ததே தனிக் கதை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே அவரைஈர்த்த விஷயம் அது! பள்ளியில் அவர் சாரணர் படையில் சேர்ந்தார். அதில் சேரும்விடலைப் பள்ளிப் பையன்களுக்கு ஒரு ஒழுக்கக் கையேடு கொடுப்பார்கள். அதில் ஒரு பாராஅவரைக் குழப்பியது.

    மீசை அரும்பும்வயதில் பையன்கள் தப்பான வழிகளில் போகக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும் கையேடுஅது! அதில், ‘பையன்கள் விடலைப்பருவத்தைத் தொடும் சமயத்தில் கடவுள் அவர்களுக்கு ஓர் அற்புதமான திரவத்தைப்பரிசாகக் கொடுப்பார். அது அவர்கள் உடம்பில் சுரக்க ஆரம்பிக்கும். அவர்கள்வேகமாகவும், உயரமாகவும் வளர்ந்துதிடகாத்திரமான வாலிபன் ஆவதற்கு, இந்தத்திரவம்தான் உதவுகிறது. அதை எந்த வழியிலும் வீணாக்காமல் பத்திரமாக சேமித்துவைத்தால், மட்டுமே அவர்கள் வளரமுடியும். அதை வீணாக்குபவர்களைகடவுள் தண்டித்து விடுவார்என்றிருந்தது.

    வளர்ந்துகல்லூரிக்குப் போனபிறகு அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார் கின்ஸி. ஆனால், விலங்குகளின் செக்ஸ் உறுப்புகள், பழக்கங்கள் பற்றிய புத்தகங்கள்தான் அவருக்குக்கிடைத்தன. மனிதர்கள் பற்றிய புத்தகங்களைத் தேடிய அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

    ப்ளூமிங்டன்நகரில் இருக்கும் இண்டியானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராக வேலைக்குசேர்ந்தபிறகு, அவர் தனது பாடத்துக்குவெளியிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார். திருமணம் மற்றும்குடும்ப உறவுஎன்ற தலைப்பில் செக்ஸ்உணர்வுகள் பற்றி அவர் கொடுக்கும் உரை, இண்டியானாபல்கலைக்கழகத்தில் ரொம்ப பாப்புலர். மாணவர்கள் மட்டுமின்றி, வெளிநபர்களும்கூட வந்து கேட்குமளவு அவரது உரைசுவாரஸ்யமானது. தனது உரையைக் கேட்க வருகிறவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிஅவர்களது செக்ஸ் அனுபவங்களை விசாரிப் பார் கின்ஸி. அப்போதுதான் அவருக்கு அந்தஉண்மை புரிந்தது. முறைகேடான செக்ஸ் உறவுகள் பற்றி மக்கள் நினைப்பதற்கும், நிஜமாக நடப் பதற்கும் இடையே ஏகப்பட்ட இடைவெளிஇருந்தது.

    ராக்ஃபெல்லர் அறக் கட்டளைஅப்போது செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி களுக்குநிதியுதவி செய்து கொண்டிருந்தது. தனது ஆராய்ச்சி குறித்து அந்த அறக் கட்டளைக்குஎழுதி நிதியுதவி கேட்டார் கின்ஸி. உடனே அது கிடைத்தது. பல்கலைக்கழகத்தின் தலைவர்ஹெர்மன் வெல்ஸ் அனுமதி கொடுக்க, ஆராய்ச்சியைஆரம்பித்து விட்டார் கின்ஸி. 1938&ம் ஆண்டுதொடங்கிய அந்த ஆராய்ச்சி அவர் இறக்கும் வரை தொடர்ந்தது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:14 pm

    கின்ஸியின்ஆராய்ச்சி,மாஸ்டர்ஸ் செய்ததைப் போலபரிசோதனைக்கூட செக்ஸ் இல்லை. அவரது காலத்தில் அதைச் செய்திருக்கவும் முடியாது.அவர் மனிதர்களின் செக்ஸ் மனோபாவத்தை அம்பலப்படுத்த விரும்பினார். அதனால் முழுக்கஇன்டர்வியூக்கள்தான்!

    அதற்கு முன்நடந்த செக்ஸ் சர்வேக்கள் வேறுவிதமாக இருந்தன. ஆராய்ச்சியாளர் ஆணாக இருந்தால், பெண்களை முகத்துக்கு நேரே பார்த்து அந்தரங்கமானகேள்விகள் கேட்க கூச்சப்படுவார். ஆண்களிடமே ஆண்கள் கேட்கத் தயங்கும்சந்தர்ப்பங்களும் உண்டு. இதற்காக பொத்தாம் பொதுவாகக் கேள்விகள் அடங்கிய ஒருபடிவத்தைக் கொடுத்து, அதில் டிக்அடிக்கச்சொல்வார்கள். இப்படி பலரும் டிக்அடித்துக் கொடுக்கும் படிவங்களை வைத்துஆராய்ச்சி இறுதி செய்யப்படும்.

    ஆனால், கின்ஸிக்கு இந்த டைப் ஆராய்ச்சியில் விருப்பம்இல்லை. அவர் ஒவ்வொருவரையும் முகத்துக்கு நேரே பார்த்துக் கேள்விகள் கேட்டு தகவல்திரட்ட விரும்பினார். இப்படிப்பட்ட நேரடி இன்டர்வியூக்களில் யாரும் பொய்சொல்லமாட்டார்கள் என அவர் நம்பினார். மொத்தம் 521 கேள்விகள் அடங்கிய படிவத்தை அவர்வடிவமைத்தார். அதில் முந்நூறு கேள்விகள் செக்ஸ் தொடர்பானவை... மற்றவை, தகவல் கொடுப்பவர் பற்றிய தகவல் குறிப்புகள்.தகவல் தரும் யாருடைய பெயரையும் அவர் பதிவு செய்யவில்லை. வயது, இனம், தொழில், குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர்... என்கிறமாதிரி தகவல்களாகத்தான் அவை இருக்கும். இப்படி ரகசியம் காக்கப்படும் என நம்பினால்தான்அவர்கள் உண்மை பேசுவார்கள் என்பது கின்ஸிக்கு தெரியும் (இண்டியானாபல்கலைக்கழகத்தில் கின்ஸி ஆராய்ச்சி நடத்திய மையம் இன்னமும் கின்ஸி செக்ஸ், பாலினம் மற்றும்மகப்பேறு ஆராய்ச்சி நிலையம்என்ற பெயரில்இயங்கிவருகிறது. அங்கு இந்த எல்லா படிவங்களும் பொக்கிஷம் போலபாதுகாக்கப்படுகின்றன. யார் வேண்டுமானாலும் போய் இவற்றைப் படிக்கலாம்).

    ஒரு நபரிடம்இன்டர்வியூவை முடிக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது. இந்த வேகத்தில் போனால், இந்த ஒற்றை ஆராய்ச்சியை முடிக்கவே தன் வாழ்நாள்போதாது என்பதை உணர்ந்த கின்ஸி மூன்று உதவியாளர்களை செலக்ட் செய்து, அவர்களுக்கும் பயிற்சி கொடுத்துத் தன்னைப்போலவே இன்டர்வியூ செய்ய சொன்னார்.

    கின்ஸி ஒருநாளில்பதினாறு, பதினேழு மணி நேரம் உழைக்கிற டைப்.பல்கலைக்கழகத்துக்கு தேடிவரும் நபர்கள் குறைவாக இருந்ததால், அவர் அமெரிக்கா முழுக்க சுற்றி பலரைசந்தித்தார். குறிப்பாக சிறைக்கைதிகள். செக்ஸ் தொடர்பான குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த பலரை அவர் சந்தித்து இன்டர்வியூ செய்தார். அதோடு ஆண்செக்ஸ் தொழிலாளர்களையும் விட்டு வைக்கவில்லை. அவரது டீம் எடுத்த மொத்தஇன்டர்வியூக்களில் இருபத்தைந்து சதவிகிதம் கைதிகளுடையது. ஐந்து சதவிகிதம் செக்ஸ்தொழிலாளிகளுடையது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:15 pm

    இது தவிர பலகல்லூரிகளுக்கு சென்று உரை நிகழ்த்துகிற பழக்கம் அவருக்கு இருந்தது. ஆனால், இந்த உரைகளுக்காக கட்டணம் எதையும் அவர்வாங்கியதில்லை. அதற்கு பதிலாக அதைக் கேட்கும் மாணவர் களையும் மற்றவர்களையும் வந்துதங்கள் அனுபவங்களைச் சொல்லும்படி அழைப்பு விடுத்தார்.

    இவ்வளவுஅனுபவங்களையும் அவர் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்ட போதுதான் அமெரிக்கா பற்றிஎரிந்தது. அது தடிமனான புத்தகம்... சாதாரண ஆசாமிகள் படித்தாலே கொட்டாவி வருகிறஅளவுக்குக் கடினமான மருத்துவ பாஷை. பல பக்கங்களை புள்ளிவிவர வரைபடங்கள் அடைத்துக்கொண்டிருந்தன. இவ்வளவும் இருந்தும் அந்தப் புத்தகம் ஐந்து மாதங்களில் இரண்டுலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இதன் விற்பனை வேகம் அதிகரித்த அதே அளவுக்குஎதிர்ப்புகளும் அதிகரித்தன.
    ஆனால், முரட்டுப் பிடிவாதக்காரரான கின்ஸி அசரவில்லை.ஆண்களை அம்பலப்படுத்திய அவர், அடுத்துக்குறிவைத்தது அமெரிக்க பெண்களை!
    முந்தைய விவகாரம்அணுகுண்டு என்றால் இது ஹைட்ரஜன் குண்டு...

    கின்ஸி, ஆண்களைப் போலவே அமெரிக்கப் பெண்களைப் பற்றியும்ஆராய்ச்சி செய்கிறார் என்ற தகவல் பரவியதும், நாடு முழுக்கப்பதற்றம் தொற்றிக் கொண்டது. தங்கள் தாயின், மனைவியின், மகள்களின் அந்தரங்க வாழ்க்கையை கின்ஸிகிளறுவதாகப் பலரும் உணர்ந்தனர். பெண்கள் இயக்கங்கள், சமூக அமைப்புகள், மதவாதிகள் என பலரும் அவருக்கு எதிராகக்கொடிபிடித்தனர்.

    கின்ஸிவேலைபார்க்கும் இண்டியானா பல்கலைக்கழகத்துக்கு எதிராக அவர்கள் கொதிக்க, பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹெர்மன் வெல்ஸ்கவலையோடு கின்ஸியைக் கூப்பிட்டுப் பேசினார். இனிமேல் எந்தஆராய்ச்சி செய்தாலும் அதைப் புத்தகமாக வெளியிட வேண்டாம்என்று கேட்டுக் கொண்டார். அந்தக்
    கல்விநிறுவனத்துக்கு அரசு வழங்கும் நிதியுதவியை ஒட்டுமொத்தமாக நிறுத்தவும் பலர் முயற்சிசெய்தார்கள்.

    இண்டியானாகத்தோலிக்க பெண்கள் அமைப்பு, கின்ஸிக்குஎதிராகக் காட்டமாக அறிக்கை விட்டது. ஆராய்ச்சி என்றபெயரில் தப்புத்தப்பாக எதையோ செய்கிறார் கின்ஸி. இதனால் எங்கள் பெண்கள்கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. அவர் அந்த ஆராய்ச்சியை நிறுத்திவிட்டு, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால்தான்எங்கள் பெண்களை அங்கு படிக்க அனுப்புவோம்என்று அறிவித்தது, அந்த அமைப்பு. ஆனால், இதற்கு கின்ஸி அசரவில்லை. கடைசியில் போராட்டம்பிசுபிசுத்துப் போனது.

    ஆனால், அவருக்கு அடுத்த சோதனை, அமெரிக்க கஸ்டம்ஸ் ரூபத்தில் வந்தது. செக்ஸ்தொடர்பான ஓவியங்கள், புத்தகங்கள், வரைபடங்கள் என பலவற்றை பல நாடுகளிலிருந்துவரவழைத்துத் தன் ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்திருந்தார்

    கின்ஸி. 1950&ம் ஆண்டு அவரது ஆராய்ச்சிக் கூடத்தை அமெரிக்ககஸ்டம்ஸ் அதிகாரிகள் ரெய்டு செய்தனர். அவர் ஆபாசமான பொருட்களை சேகரித்துவைத்திருப்பதாகச் சொல்லி, எல்லாவற்றையும்அள்ளிக்கொண்டு போய்விட்டனர் (கின்ஸி பொங்கி எழுந்து கஸ்டம்ஸ் மீது வழக்குபோட்டார். ஏழு ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, ‘அவை ஆராய்ச்சி நோக்கில் கொண்டு வரப்பட்டவை.ஆபாச எண்ணம் இல்லை. அதனால் எல்லாப் பொருட்களையும் திருப்பிக் கொடுங்கள்என கோர்ட் உத்தரவிட்டது. அவை திரும்பிவரும்போது கின்ஸி உயிருடன் இல்லை!).

    எரிவதைப் பிடுங்கினால்கொதிப்பது நிற்கும்என கணக்குப் போட்டனர், கின்ஸிக்கு எதிரானவர்கள். இந்த ஆராய்ச்சிக்குநிதியுதவி செய்யும் ராக்ஃபெல்லர் அறக்கட்டளைக்கு எதிராகவும் அவர்கள் பிரச்னை செய்ய, அந்த அறக்கட்டளை கின்ஸியின் ஆராய்ச்சிக்குநிதியுதவி தருவதை நிறுத்தியது. ஆனால், அதற்குள் கின்ஸிஆராய்ச்சியை முடித்துவிட்டார்.

    சுமார் ஆறாயிரம்பெண்களிடம் இன்டர்வியூ செய்து முடித்த அவரது குழு, புத்தகத்தைத்தயாரிக்கும் வேலையில் இறங்கியது. ஆனால், அதற்குவேட்டுவைக்கும் விதமாக ஒரு காரியம் நடந்தது. கின்ஸி தனதுஆராய்ச்சியை முடித்து விட்டார். அவரது கணிப்பின்படி பல பெண்கள் விதம்விதமான தப்புசெய்கிறார்கள். அமெரிக்க பெண்களின் மோசமான நடத்தை பற்றி ஷாக்தகவல்கள் அடங்கியஅவர் புத்தகம் விரைவில் வரப் போகிறதுஎன்கிறரீதியில்பயங்கரமான யூகங்களை பல பத்திரிகைகள் விதம்விதமாக அள்ளிவிட்டுக் கொண்டிருந்தன.இப்படி ஒவ்வொரு செய்தி வரும்போதும் பெண்கள் அமைப்புகள் கோபத்தில் கொதித்தன.

    இதை இப்படியேவிட்டால், தன் புத்தகமே வரவிடாமல் செய்து விடுவார்கள்என்பதை உணர்ந்த கின்ஸி, முன்னணிப் பத்திரிகைகளின்நிருபர்களை ஒருநாள் தன் ஆராய்ச்சிக் கூடத்துக்குக் கூப்பிட்டார். ஆராய்ச்சி முடிவுகளை உங்களிடம் வெளிப்படையாகச்சொல்கிறேன். அதற்கான ஆதாரங்களையும் நீங்கள் பார்க்கலாம். இதை அடிப்படையாக வைத்துநீங்கள் அதிகபட்சம் ஐயாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுதிக் கொள்ளலாம்.ஆனால், புத்தக ரிலீ்ஸுக்கு ஒருநாள் முன்னதாகத்தான்உங்கள் கட்டுரை வெளியாக வேண்டும்என நிபந்தனைகளைவிதித்தார். உஷாராக அதை அப்படியே ஒரு ஒப்பந்தமாக டைப் அடித்து அவர்களிடம்கையெழுத்தும் வாங்கிக் கொண்டார். அதன்பிறகே பத்திரிகைகள் அந்த ஆராய்ச்சி பற்றியயூகங்களை எழுதுவதை நிறுத்தின.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:15 pm

    1953&ம் ஆண்டு செப்டம்பர் 14&ம் தேதி. ‘Sexual behaviour in Human Female’’என்ற அந்தப் புத்தகம் வெளிவந்தது. பெண்களும் திருமணத்துக்கு முன்பே செக்ஸ்அனுபவங்களைத் தேடுகிறார்கள். திருமணமான அமெரிக்க பெண்களில் இருபத்தைந்து சதவிகிதம்பேர் தங்கள் கணவனுக்கு உண்மையாக இல்லை. திருமண பந்தத்துக்கு வெளியே அவர்கள் வேறுயாரோ ஓர் ஆணுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள்என்றஅதிரவைக்கும் உண்மையை சொன்னது, அந்தப் புத்தகம்.அதோடு மட்டுமில்லை... அமெரிக்க பெண்களில் 62சதவிகிதம் பேர் திருமணத்துக்கு முன்போ, திருமணமானபின்னரோ சுயஇன்பம் அனுபவித்து இருக்கிறார்கள். கணிசமானவர்கள் இதைத் தொடர்ச்சியானபழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கையில் நாட்டமுள்ள பெண்களும் நிறையபேர் உண்டுஎன்பதையும்அம்பலப்படுத்தினார் கின்ஸி. குறிப்பாக, அதிகம் படித்தபெண்கள்தான் விதம்விதமான செக்ஸ் அனுபவங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றார்கின்ஸி. சுயஇன்பம் அனுபவிக்க அவர்கள் பயன்படுத்திய முறைகள் குறித்தும் கின்ஸிசதவிகித வாரியாக பட்டியலிட்டு விலாவாரியாக எழுதியிருக்க, அமெரிக்க சமூகம் கோபத்தின் உச்சிக்கே போனது.அமெரிக்கா மட்டுமில்லை... அவரது ஆராய்ச்சி முடிவுகள் பல நாடுகளுக்கும் போக, அமெரிக்க மக்கள் தாங்கள் அவமானப்படுவதாகஉணர்ந்தனர். புகழ்பெற்ற பிரிட்டன் பத்திரிகையான தி பீப்புள்’& கின்ஸியின் புத்தகம் வெளியானதும் அவசரமாக ஒருசர்வே எடுத்தது. பதினெட்டு முதல் ஐம்பது வயது வரையிலான பிரிட்டன் பெண்கள் ஆயிரம்பேரிடம் எடுக்கப்பட்ட சர்வே அது! தனது சர்வே முடிவுகளை வெளியிட்ட அந்தப் பத்திரிகை, ‘அமெரிக்க பெண்களைப் போல பிரிட்டன் பெண்கள்மோசமானவர்கள் இல்லை. நம் பெண்கள் இன்னமும் ஒழுக்கத்தோடுதான் இருக்கிறார்கள்.குடும்ப அமைப்பு, கற்புநெறி போன்றபாரம்பரியமான மதிப்பீடுகள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். கணவனுக்குவிசுவாசமாக இருக்கிறார்கள். திருமணமாகாத பெண்கள் கன்னித்தன்மையைக் காக்கிறார்கள்என்று எழுதி, எரிகிறஅமெரிக்கக் கொள்ளியில் எண்ணெய் வார்த்தது.

    கம்யூனிசசெல்வாக்கோடு வல்லரசாகி அமெரிக்காவை ரஷ்யா மிரட்டிக் கொண்டிருந்த சமயம் அது!கம்யூனிச தத்துவம் அமெரிக்க ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவிலும்அந்த சித்தாந்தம் நுழைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அமெரிக்காவை ஆட்டிப்படைத்தது. அப்போது அரசுக்கு எதிராகச் செயல்பட்ட பலரையும் கம்யூனிஸ்ட்கள் எனசந்தேகித்து, கேள்வி கேட்காமல்சிறையில் அடைக்கும் பழக்கம் இருந்தது. ஜோ மெக்கார்தி என்ற செனட்டருக்கு இதுதான்வேலை. கின்ஸியின் ஆராய்ச்சி அவரை கொதிக்க வைத்தது. ‘‘கின்ஸியைஆராய்ச்சி செய்ய வைத்தது கம்யூனிஸ்ட்கள்தான். அமெரிக்க சமூகத்தை அழிக்கதிரைமறைவில் கம்யூனிஸ்ட்கள் செய்த சதிதான் இது’’ என்றார் அவர். ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர்கள் யாரையாவது கின்ஸிதற்செயலாக எப்போதாவது ரோட்டில் பார்த்து சும்மா ஹலோசொன்னார்என செய்திகிடைத்திருந்தால்கூட போதும்... கின்ஸியை சிறையில் தள்ளி கொன்றே போட்டிருப்பார்கள்.ஆனால், கின்ஸியை சிறையில் அடைக்கும் அளவுக்குமெக்கார்திக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் கின்ஸி தப்பித்தார்.

    இருந்தாலும் மதத்தலைவர்கள் அவரை சும்மா விடவில்லை. ஏற்கெனவேஒழுக்கக் கேடு மலிந்திருக்கும் நாட்டில், இந்தப்புத்தகங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்என கொதித்தார்கள். கின்ஸி அவர்களை அலட்சியம் செய்தார். ‘‘என்னுடையஆராய்ச்சியை விமரிசனம் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை. விஞ்ஞானிகள் சமுதாயம் அதைமதிப்பீடு செய்யட்டும். அவர்கள் என் ஆராய்ச்சியில் தவறு இருப்பதாக சொன் னால் நான்ஏற்றுக் கொள் கிறேன்’’ என்றார்.
    மார்கரெட் மீட்என்ற பெண்மணி அந்த சமயத்தில் அமெரிக்காவே மதித்த மானுடவியல் அறிஞர். அவர்தான்அறிஞர் சமூகத்திலிருந்து முதன்முதலாக கின்ஸிக்கு எதிராகக் குரல் கொடுத் தவர்."கின்ஸியின் புத்தகங் களை தடை செய்ய வேண்டும்.அதற்காக நான் போராடுவேன்"என அவர்குரல்கொடுக்க,
    பெண்கள்அமைப்புகள், தங்களுக்கு வலுவான ஆதரவுகிடைத்த தெம்பில் இன்னும் ஆக்ரோஷம் காட்டின.

    மார்கரெட்கூடகின்ஸியின் புத்தகங்களில் புள்ளிவிவரக் குறைகளையோ, அறிவியல் ரீதியானதவறுகளையோ சொல்லவில்லை. சமுதாயத்தில் தவறான பழக்கங்களை இது வளர்த்துவிடும்என்றுதான் அவர் கவலைப்பட்டார். ‘‘நிறைய பெண்கள்தப்பு செய்யலாம். நான் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், அவர்கள் பயந்துகொண்டுதான் தப்பு செய்கிறார்கள்.மற்ற பெண்கள் எல்லாம் கற்புநெறியோடு வாழும்போதுநான் மட்டும் ஏன் இப்படி மாறிவிட்டேன்என்ற குற்றஉணர்ச்சி தப்பு செய்யும் பெண்களை அடிக்கடி முள்ளாகக் குத்துகிறது. இதனால் அவர்கள்காலப்போக்கில் திருந்த வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்தப் புத்தகம்அந்த குற்ற உணர்ச்சியைப் போக்கிவிடும்.

    கணவனை விட்டுஅடுத்த ஆணுடன் முறைகேடான தொடர்பு வைத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும், ‘நான் மட்டுமா தப்பு செய்கிறேன்? அமெரிக்க பெண்களில் நான்கில் ஒருத்தி செய்யும்அதே விஷயம்தானே இது!என நினைக்க ஆரம்பித்துவிட்டால், அவ்வளவுதான்... அமெரிக்காவில் குடும்ப அமைப்பேஉடைந்து சிதறிவிடும். இதைத்தான் கின்ஸி விரும்புகிறாரா?’’ என்று கேள்வி எழுப்பினார் மார்கரெட்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:16 pm

    ஆனால் கின்ஸிதெளிவாக இருந்தார். ‘‘அமெரிக்கர்களைஅசிங்கப்படுத்தவோ, குடும்ப அமைப்பைசிதைக்கவோ நான் ஆசைப்படவில்லை. நானும் அன்பான மனைவி, மூன்றுகுழந்தைகள் என இனிமையான குடும்ப வாழ்க்கை நடத்தும் அமெரிக்கன்தான். ஆனால், குடும்பம் வேறு... ஆராய்ச்சி வேறு. சமூகத்தில்அமைதியாக நிகழ்ந்து வரும் மாற்றங்களையும், அவலங்களையும்கண்டும் காணாமல் விட்டு, ‘எல்லோரும்ஒழுக்கமான பாதையில் போகிறார்கள்என்று குருட்டுத்தனமாக நம்புவது, அறிஞர்களின் வேலை இல்லை.மக்கள்தொகை கணக்கில்லாமல் பெருகுவது, புதிது புதிதாகபால்வினை நோய்கள் வருவது, இளம் வயதிலேயேபெண்கள் கர்ப்பமாவது, பிஞ்சுக் குழந்தைகள் மீதுசெக்ஸ் சித்ரவதை என ஏராளமான விஷயங்கள் தப்புத்தப்பாக நடக்கின்றன. எதிர்காலத்தில்இவை இன்னும் மோசமாகலாம். இதற்கெல்லாம் என்ன காரணம்... யார் குற்றவாளி... இந்தத்தவறுகளை தவிர்க்க என்ன வழி என ஆராய்ச்சி செய்யாமல் விட்டால், இன்னும் சில தலைமுறைகள் தாண்டி உலகமேவெறியர்களின் கூடாரமாகி விடும். மனிதர்களின் செக்ஸ் பழக்கங்கள் பற்றிஆராய்ந்தால்தான் இதன் பின்னணி புரியும். அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து நன்மைசெய்யும் ஆராய்ச்சியைத்தான் நான் செய்தேன்’’ என்றார் அவர்.

    செக்ஸாலஜியின்தந்தை என்று இப்போது கின்ஸி புகழப்படுகிறார். பக்தர்கள் புண்ணியத் தலங்களுக்குயாத்திரை போவதுபோல, உலகெங்கும் இருக்கும்செக்ஸாலஜி நிபுணர்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது போக நினைப்பது, அவர் நிறுவிய கின்ஸி ஆராய்ச்சிநிலையத்துக்குதான்! அமெரிக்க சமூகம் பற்றி அவர் சொன்ன எல்லாமே, உலகத்துக்கே பொருந்தும் உண்மை என்பது ஐம்பதுஆண்டுகள் கழித்து இப்போது புரிகிறது.

    ஆனால், அவர்மீது செக்ஸ்வெறிபிடித்த மனநோயாளி’, ‘குழந்தைகளைசெக்ஸ் கொடுமைக்கு ஆளாக்கியவர்என ஏகப்பட்டகுற்றங்களை பலர் சுமத்த, இன்றைய தேதிவரைஅதற்கெல்லாம் பதில் சொல்லியபடி இருக்கிறது கின்ஸி நிலையம்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:16 pm

    எல்லாஎதிர்ப்புகளையும் சமாளிக்கிற ஒருவர், அவரது குடும்பம்தாக்கப்படும்போது நிலைகுலைந்து போவார். கின்ஸியை அப்படித்தான் அழிக்கப்பார்த்தார்கள்.
    ‘‘செக்ஸைப் பற்றி இவ்வளவுஅருவருப்பான ஆராய்ச்சியை கின்ஸி செய் யக் காரணம் இருக்கிறது. அடிப்படையில் அவர்செக்ஸ் பற்றிய விபரீதமான கற்பனைகளைக் கொண்ட ஒரு மனநோயாளி. அவருக்கு எந்நேரமும்செக்ஸைப் பற்றிய நினைப்புதான். திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தாலும், அவர் ஹோமோசெக்ஸ் பிரியராக இருந்தார்.அதனால்தான் அமெரிக்கர்கள் எல்லாம் அதே பழக்கம் உள்ளவர்களாக அவருக்குத்தெரிந்தார்கள். அது மட்டுமில்லை... தன் மனைவியையே விநோதமான செக்ஸ் உறவுகளில் ஈடுபடவைத்து, ஆபாசப்படம் எடுக்க முயன்றார் கின்ஸி. இதனால்அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சரியான உறவு இல்லாமல் போனது. தன் உதவியாளர்கள்சிலரையும் கூப்பிட்டு, ‘உன் மனைவியோடு செக்ஸ்உறவில் ஈடுபடுவதை ஆராய்ச்சிக்காகப் படமெடுக்க வேண்டும்என்று கட்டாயப்படுத்தினார் கின்ஸி. இதனால் பலர்அவரிடமிருந்து விலகிவிட்டார்கள்!’’

    இப்படி ஒருவதந்தி திட்டமிட்டுக் கிளப்பப் பட்டது. இது பத்திரிகைகளில்கூட செய்தியாகவெளியானது. கின்ஸியிடம் இதுபற்றி சிலர் கேட்டனர். ‘‘விலங்குகள்எப்படி உறவு வைத்துக் கொள்கின்றன என்பது பற்றிய படங்கள்தான் இப்போது உள்ளன.மனிதர்கள் உறவு கொள்வது பற்றிய டாகுமென்டரி படங்களை எடுப்பது சாத்தியமில்லை.உறவுக்காட்சிகள் பற்றிய சில புகைப்படங்கள்தான் என்னிடம் உள்ளன. அதுகூட வேறுசிலர்எடுத்துக் கொடுத்தது’’ என்று வெளிப்படையாகப்பதில் சொல்லி இந்த வதந்தியை சாகடித்தார் கின்ஸி.

    ஆனால், அமெரிக்காவில் சமூக ஒழுக்கத்தைக் காக்கும் ஓர்அமைப்பை நடத்திவரும் ஜூடித் ரீஸ்மேன் என்ற பெண்மணி, கின்ஸி பற்றிஎழுப்பி வரும் கேள்விகளுக்கு இன்றுவரை பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது, கின்ஸி நிலையம். ஆர்.எஸ்.வி.பி. (Restoring Social Virtue and Purity in America) என்ற அமைப்பின்தலைவராக இருக்கிறார் ரீஸ்மேன். ‘‘நடுத்தரவர்க்கத்தின் மனோபாவத்தைக் களங்கப்படுத்த அறிவியலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார் கின்ஸி. முறைகேடான செக்ஸ் உறவுகளை அமெரிக்க மக்களுக்கு அறிமுகம் செய்தவர்அவர்தான். அமெரிக்காவில் செக்ஸ் தொடர்பான கலாசார நம்பிக்கை, சட்டங்கள், குற்றங் கள்எல்லாமே மோசமானதற்கு காரணம் அவர்தான். திருமணத்துக்கு முன்பே இளம்பெண்கள்கர்ப்பமாவது, இளம் குழந்தைகள் செக்ஸ்வெறியர்களால் சிதைக்கப் படுவது என எல்லா செயல்களுக்கும் காரணமான நரகத்தின் கதவுகளைஅமெரிக்காவில் திறந்துவிட்டவர் கின்ஸி’’ என கடுமையாகக்குற்றம் சாட்டினார் அவர். மற்றவர்கள் மாதிரி வெறுமனே அவர் பேச்சோடு நிற்கவில்லை.கின்ஸியின் ஆராய்ச்சி குறித்து இரண்டு புத்தகங்கள் எழுதினார். கின்ஸி செய்தஆராய்ச்சியைக் குற்றவியல் நோக்கோடு பார்த்தன அந்தப் புத்தகங்கள். ஆனால், அவை வெளிவந்தபோது கின்ஸி உயிரோடு இல்லை. அதனால்கின்ஸிக்குப் பிறகு அவரது நிலையத் தின் இயக்குநராகப் பணிபுரிந்த பால் கெப்பார்ட், அவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்குஆளானார். ஆண்கள் தொடர்பான தன்னுடைய செக்ஸ் ஆராய்ச்சி முடிவுகளில், ஆண் சிறுவர்கள் பற்றிய விவரங்களையும்குறிப்பிட்டு இருந்தார் கின்ஸி.

    இதைத்தான்ரீஸ்மேன் வகையாகப் பிடித்துக் கொண்டார். ‘‘இந்தப்பட்டியலில் 317 சிறுவர்களைப் பற்றிய விவரங்கள் இருக்கின் றன. இதில் சில நிகழ்வுகளைநிமிடக் கணக்கில் விவரிக்கிறார் கின்ஸி. பக்கத்திலேயே கடிகாரத்தோடுஉட்கார்ந்துகொண்டு கணக் கெடுத்தால் தவிர, இவ்வளவுதுல்லியமாக இதை எழுத முடியாது. அந்த சிறுவர்களின் உணர்வுகளை விவரிப்பதும்பக்கத்தில் இருந்து பார்த்தால்தான் சாத்தியம். கின்ஸி இந்தக் குற்றத்தைச்செய்திருக்கிறார்’’ என்று தன் புத்தகத்தில்கடுமையாகத் தாக்கி எழுதினார் ரீஸ்மேன்.

    அதே சமயத்தில்அமெரிக்காவில் இருக்கும் குடும்ப ஆராய்ச்சி கவுன்சில் என்ற அமைப்பு, வீடியோ படம் ஒன்றை எடுத்து, கின்ஸி மீது தாக்குதல் தொடுத்தது. பிரிட்டனில்இருக்கும் யார்க்ஷயர் டெலிவிஷன்

    நெட்வொர்க், ‘கின்ஸியின் குழந்தை செக்ஸ் வெறியர்கள்என்ற பெயரில் பரபரப்பான டாகுமென்டரி படம் ஒன்றைஎடுத்து ஒளிபரப்பியது.

    இந்த எல்லாகுற்றச்சாட்டுகளுக்கும் தெளிவாகப் பதில் சொன்னது கின்ஸி நிலையம். கின்ஸி பல சிறுவர்களை இன்டர்வியூ செய்தபோதுகூடஅந்த சிறுவர்களின் பெற் றோர்கள் முன்னிலையில்தான் செய்தார். அது மட்டுமில்லை... பலஆண்கள் தங்களது சிறுவயது அனுபவங்களை அவரிடம் சொன்னார்கள். அதுவும் இதில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில தகவல்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் தாங்கள் நேரடியாகப் பார்த்தசிறுவர்களைப் பற்றிச் சொன்னவை.

    இதுதவிர, ஒன்பது குற்றவாளி கள் தாங்கள் சிறுவர்கள் மீதுமேற்கொண்ட செக்ஸ் வன்முறை களைப் பற்றி சொன்னார்கள். இதில் மிஸ்டர் கிரீன்என்றுபுனைப்பெயர் தரப்பட்ட ஒருவன், தன் டைரியைகின்ஸியிடம் கொடுத்தான். அவன் 1917ல் ஆரம்பித்து 48ம் ஆண்டு வரை கிட்டத்தட்டஎண்ணூறு சிறுவர் களிடம் செக்ஸ் உறவு கொண்டான். அந்த எல்லா உறவுகளையும் ஆரம்பத்தில் இருந்து முடிக்கும் வரை நேரத்தைக் குறிப்பிட்டுத் துல்லியமாக வர்ணித்துஇருந்தான். கின்ஸி அவனது செயலை மன்னிக்க முடியாத குற்றம் என கண்டித்து இருக்கிறார்.அந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப் பட்டுதான் அவன் சிறையில் இருந் தான். அவன்கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவன் பெயரை மட்டும் மறைத்தார் கின்ஸி. தன்னுடையஆராய்ச்சி முடிவுகளில் அவர் சொல்லியிருந்த பெரும்பாலான விஷயங்கள் "மிஸ்டர்கிரீன்" சொன்னதுதான்என்றுவிலாவாரியாக விளக்கியது கின்ஸி நிலையம்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:17 pm

    அடுத்ததாகஇன்னொரு விஷயம் கிளம்பியது. இரண்டாம் உலகப் போரின்போது போலந்து நாட்டை ஹிட்லரின்ஜெர்மன் படை ஆக்கிர மித்து இருந்தது. அந்த சமயத்தில் போலந்து மக்கள் கடும்சித்ரவதைக்கு ஆளானார்கள். இந்த சித்ரவதை படையில் இருந்த ஜெர்மன் தளபதி ஒருவர், கிட்டத்தட்ட 800 போலந்து சிறுவர்களை பாலியல்பலாத்காரம் செய்தார். கின்ஸியின் ஆராய்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர், தனது அனுபவங்களை எழுதி அனுப்பி வைத்தார். அதைப்படித்த கின்ஸி அவருக்கு, ‘உங்கள் அனுபவக்குறிப்புகள் என் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தன. அவற்றைப் படித்து மகிழ்ச்சிஅடைந்தேன்என பதில் எழுதியதாகஅடுத்தக் குற்றச்சாட்டு. சிறுவர்கள்செக்ஸ் சித்ரவதைக்கு ஆளானதைப் படித்து மகிழ்ச்சி அடையும் ஒரே ஆள் இந்த உலகத்தில்கின்ஸியாகத்தான் இருக்க முடியும்என்றனர் எதிர்ப்பாளர்கள்.

    கின்ஸி நிலையம், அந்தத் தளபதிக்கு கின்ஸி எழுதிய கடிதத்தின்பிரதியை வெளியிட்டது. உங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றதுஎன வெறும் ஒப்புகை வாசகம் மட்டுமே அதில்எழுதியிருந்தார் கின்ஸி. அதோடு இந்தக் குற்றச்சாட்டு பிசுபிசுத்தது.

    கடைசியாக இன்னொருவிஷயமும் சொல்லப்பட்டது. கின்ஸிஇன்டர்வியூ செய்ததில் 25 சதவிகிதம் குற்றவாளிகள், ஐந்து சதவிகிதம்செக்ஸ் தொழிலாளிகள். இப்படி சமூகத்தில் ஒழுக்கக்கேடானவர்களை விசாரித்து, அவர்கள் சொல்வதை வைத்து ஒட்டுமொத்தஅமெரிக்கர்களின் பழக்கம் இதுதான் என்று எப்படி வரையறுக்க முடியும்? அவர் சந்தித்த நபர்களில் கிராமத்து மக்கள், படிக்காதவர்கள் என யாருமே இல்லை. சமூகவிரோதிகள்செய்யும் தவறுகளை அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த பழக்கமாக அவர் காட்டிவிட்டார்என்றார்கள் அவரை எதிர்ப்பவர்கள்.

    இதற்காககின்ஸியின் ஆராய்ச்சிப் படிவங்களை சுத்தம் செய்யும்வேலையில் இறங்கினார், கின்ஸி நிலைய இயக்குநரான பால் கெப்பார்ட்.1979ம் ஆண்டு இப்படி திருத்தப்பட்ட கின்ஸியின் ஆராய்ச்சி அறிக்கை வெளியானது.சிறைக்கைதிகள் கொடுத்த வாக்குமூலங்களை அகற்றிவிட்டு, மற்றவர்களின்தகவல்களை மட்டும் வைத்துப் புள்ளிவிவரங்களைத் தொகுத்தபோது ஆச்சர்யம்தான். கின்ஸிஏற்கெனவே சொல்லியிருந்த புள்ளிவிவரங்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவேஇப்போது வித்தியாசம் வந்தது. அதாவது, சிறைக்கைதிகளாகஇருக்கட்டும் அல்லது அமெரிக்க மக்களாக இருக்கட்டும்... செக்ஸ் மனோபாவம் என்பதுஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை பால் கெப்பர்ட் உறுதிப்படுத்தினார்.

    கின்ஸியின்வாழ்க்கை, நாவலாக வந்தது. கடந்த 2004ம் ஆண்டு கின்ஸிஎன்ற பெயரிலேயேஹாலிவுட் படமாகவும் வெளியானது. அப்போது இதே பழைய சர்ச்சைகள் மறுபடியும் விஸ்வரூபம்எடுத்தன. தங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவதோ, அட்வைஸ் செய்வதோயாருக்குமே பிடிக்காது. அந்த வகையில் அமெரிக்கர்களுக்கு கின்ஸியைப் பிடிக்காமல்போனதில் ஆச்சர்யமில்லை.

    ஆனால், இன்றைக்கு... அறியாமைஎன்ற எதிரியை வீழ்த்த அறிவு ஆயுதத்தோடு போராடியபோராளியாக அவர் உலகெங்கும் செக்ஸாலஜி நிபுணர்களால் கருதப்படுகிறார்.

    கின்ஸி சந்தித்ததாக்குதல்களே பரவாயில்லை என்கிற அளவுக்கு அவருக்கு முன்னதாக சித்ரவதைகளைஅனுபவித்தார், இன்னொரு ஆராய்ச்சியாளரானமாக்னஸ் ஹர்ஷ்ஃபீல்ட். ஹிட்லரின் எதிரியாக ஒருவர் கருதப்பட்டால், அவருக்கு என்னென்ன சித்ரவதைகள் நேரும்என்பதற்கு ஆராய்ச்சியாளர் பட்ட வேதனைகள்தான் உலக உதாரணம்!

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:17 pm

    ஹிட்லர் வாழ்ந்தகாலத்தில் அவரைவிட பாப்புலராக ஒருவர் ஜெர்மனியில் இருக்க முடியுமா? அப்படி இருந்தவர்தான் மாக்னஸ் ஹர்ஷ்ஃபீல்ட்.தற்போதைய போலந்து நாட்டின் கோல்பெர்க் நகரம் அப்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாகஇருந்தது. அங்கு 1868&ல் பிறந்தவர்ஹர்ஷ்ஃபீல்ட்.

    அவர்அடிப்படையில் ஒரு டாக்டர். முறுக்கு மீசையோடு தோற்றம் தந்தாலும், பெண்மைத்தன்மை மிகுந்த ஆணாக அவர் இருந்தார். டிரான்ஸ்வெஸ்டிசம்எனப்படும் கோளாறு அவருக்கு இருந்தது. அதோடுஅவர் ஹோமோ செக்ஸ் பிரியராக வேறு இருந்தார். (ஆண்களுக்கு பெண்களின் உடைகளை அணியவேண்டும் என ஆசை வருவது... இதேபோல பெண்களுக்கு ஆண்கள் உடைகளின் மீது நாட்டம்வருவது... இந்த செக்ஸ் கோளாறுக்குதான் டிரான்ஸ்வெஸ்டிசம்என்று பெயர். ‘Transvestism என்ற இந்த வார்த்தையை அறிமுகம் செய்தவரேஹர்ஷ்ஃபீல்ட்தான். அதற்கு முன்புவரை இப்படி உடை மாற்றி அணிபவர்களை அலிகள்எனப்படும் அரவாணிகளாகவே பலரும் கருதி வந்தனர். ஆனால், ‘அரவாணிகளுக்கு ஹார்மோன் பிரச்னைகளும் சேர்ந்துஇருக்கிறது. டிரான்ஸ்வெஸ்டிசக் கோளாறு வெறுமனே மனதளவில் இருக்கும் பிரச்னைதான்.இதை யும் அதையும் சேர்க்கக் கூடாதுஎன்றுவிளக்கினார் ஹர்ஷ்ஃபீல்ட். அதோடு ஹோமோசெக்ஸ் உணர்வுள்ளவர் களையும் இந்த வகையில்சேர்த்து பலர் குழப்பிக் கொண்டி ருந்தார்கள். அதுவும் தப்பு என்பது ஹர்ஷ்ஃபீல்டின்வாதம்! மூன்றுமே தனித்தனியான குறைபாடுகள்... ஒருவருக்கே இதில் இரண்டு குறைபாடுகள்சேர்ந்து வரலாம் என்பது அவர் கட்சி!).

    எனக்கு ஏன் இப்படிப்பட்டஉணர்வுகள் தோன்றுகின்றன? மற்ற ஆண்கள்எல்லோரும் மிடுக்காக கோட் சூட் அணிய, எனக்கு ஏன்பெண்களின் ஆடைகளை அணிய வேண்டும் என ஆசை வருகிறது? பெண்களைப்பார்த்தால் எந்த உணர்வும் ஏற்படாமல், ஆண் களைப்பார்த்தால் பரவசம் ஏற்படுகிறது?’ என அவருக்குள்எழுந்த அடுக்கடுக்கான கேள்விகள்தான் அவரை செக்ஸ் ஆராய்ச்சி பக்கம்திருப்பிவிட்டது. அப்போது ஜெர்மனி, ரஷ்யப் பேரரசின்அங்கமாக இருந்தது. உலகின் மற்ற முன்னேறிய நாடுகளை விட ஜெர்மனியில்தான் அந்தசமயத்தில் செக்ஸ் ஆராய்ச்சி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. இந்த ஆராய்ச்சிகளின்முடிவுகள் உலகம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தடாக்டர்கள்கூட ஜெர்மனியை உன்னிப்பாகக் கவனித்தனர்.

    இதில் முதல்பரபரப்பு சிக்மண்ட் ஃபிராய்டு. அடிப்படையில் நரம்பியல் நிபுணரான ஃபிராய்டு, உளவியல் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருபவராகசீக்கிரமே மாறினார். வியன்னா நகரில் இருந்தபடி அவர் தந்த சிகிச்சைகளும், அவர் சொன்ன தத்துவங்களும் பலத்த சர்ச்சைக்குஆளாகின. கனவுகளின் அர்த்தங்கள், ஆழ்மனதின்வேட்கைகள் என பல விஷயங்களைச் சொன்ன ஃபிராய்டு, செக்ஸ் பற்றியும்அதிர வைக்கும் கருத்துகளைச் சொன்னார்.

    ‘‘குழந்தைப்பருவத்திலிருந்தே செக்ஸ் உணர்வுகள் தலைதூக்கி விடுகின்றன. தாயின் மார்பில்பால்குடிக்கும் குழந்தைக்கு செக்ஸ் உணர்வு இருக்கிறது. வளரவளர பெற்றோர் மீதுகுழந்தை காட்டும் அன்பும் இந்த திசையில்தான் போகிறது. பெண் குழந்தை அப்பா மீதும், ஆண் குழந்தை அம்மா மீதும் பாசம் காட்டும்.இப்படி எதிர்ப்பாலை நாடி பாசம் காட்ட அடிப்படைக் காரணம் செக்ஸ்தான். நான்குழந்தையிலிருந்தே என் அம்மா மீது பாசத்தோடும், அப்பா மீதுவெறுப்பு காட்டியும்தான் வளர்ந்தேன். உலகம் முழுக்க இப்படித்தான் நடக்கிறது என்பதுஎன் ஆய்வில் தெரியவந்தது’’ என்றார்ஃபிராய்டு.

    என்ன இது? பிஞ்சுக் குழந்தைகளைப் பற்றி அவர் இப்படிசொல்கிறாரேஎன சமூக அமைப்புகள் பலகொந்தளித்தன. ஃபிராய்டை ஒரு தலைசிறந்த டாக்டராக ஏற்றுக் கொண்டவர்கள்கூட அவரதுஇந்தக் கருத்துகளைக் கேட்டு முகம் சுளித்தனர். ஆனால், அவர் பழங்கால வரலாறுகளில் இப்படி நடந்த சம்பவங்களைஆதாரமாகச் சொல்லி, தன் கருத்தில் உறுதியாகஇருந்தார். அதோடு, ‘‘சிறு வயதில்ஏற்படும் அனுபவங்களைப் பொறுத்துதான் ஒருவர் இயல்பான செக்ஸ் பழக்கம் கொண்டவராகவோஅல்லது ஹோமோசெக்ஸில் நாட்டமுள்ள நபராகவோ ஆகிறார். சந்தர்ப்பங்கள் கிடைத்தால் எந்தஆμம் ஹோமோசெக்ஸ் பழக்கத்தில் ஈடுபடவாய்ப்பிருக்கிறது’’ என்று வேறு சொல்லி எரிகிறகொள்ளியில் எண்ணெய் வார்த்தார் அவர்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:18 pm

    ஃபிராய்டுகிளப்பிய பரபரப்புக்கு மத்தியில் ஹென்றி ஹேவ்லாக் எல்லிஸ் என்ற பிரிட்டன் டாக்டர் செக்ஸ் உளவியல்என்ற தலைப்பில்ஏழு பாகங் களைக் கொண்ட ஒரு புத்த கம் வெளியிட்டார். அந்த சமயத்தில் டாக்டர்கள்செக்ஸைப் பற்றி தெரிந்து கொள்ள உதவிய ஒரே உருப்படியான புத்தகமாக இது இருந்தது. ‘‘வாழ்க்கையின் ஆணிவேரே செக்ஸ் தான். அதுபற்றிசரியான புரிதல் இல்லாத எவரும் முழுமை பெற்ற மனிதர்கள் ஆவதில்லை’’ என்றார் அவர்.

    ஹோமோசெக்ஸ், லெஸ்பியன், சுய இன்பம் அனுபவித்தல்போன்ற பல விஷயங்கள் மோசமான செக்ஸ் பிரச்னைகளாகக் கருதப்பட்ட காலம் அது! அவற்றுக்குஉளவியல் நிபுணர்கள் சீரியஸான சிகிச்சை தந்து கொண்டிருந்தனர். சில நாடுகள் இந்தப்பழக்கங்களை சட்டவிரோதமாகக் கருதி தண்டனைகளும் தந்து வந்தன. அந்த சமயத்தில் எல்லிஸ், ‘‘இதெல்லாம் செக்ஸ் பிரச்னைகளே கிடையாது.அவர்களின் செக்ஸ் பழக்கங்கள் வழக் கத்துக்கு விரோதமானதாக இருக்கிறது...அவ்வளவுதான்! இதை பெரிய விஷயமாக நினைக்கக் கூடாது. இதெல்லாம் நோயும் கிடையாது.சட்டவிரோதமும் கிடையாது’’ என்று அதிரடியாகசொன்னார்.

    ‘‘குற்றவியல், செக்ஸ் அறிவு ஆகிய இரண்டையும் அறிவியலின் ஒருஅங்க மாக ஆக்கி, பல்கலைக்கழகங்களில்கற்றுத் தர வேண்டும். செக்ஸ் சிரிக்கக்கூடிய விஷ யமோ, ஆபாசமோ, அருவருப்பானதோஇல்லை. அது அறிவியல்’’ என்றார் அவர். குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியை போதிக்கவேண்டும். அப்போதுதான் வருங்கால சமுதாயம் நன்றாக இருக்கும்என்று சொன்ன முதல் ஆராய்ச்சியாளரும் அவர்தான்.

    இப்படிசர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லி வந்ததால் அவரை பிரிட்டன் அரசாங்கத்துக்குப்பிடிக்கவில்லை. அவரது புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர்ஜெர்மனியில் உள்ள நண்பர்களோடு தொடர்புகொண்டு தன் புத்தகங்களை அங்கு அனுப்பினார்.ஜெர்மனியில் அவை அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்தன. இதனால் அவர் பிரிட்டனைவிடஜெர்மனியில்தான் பாப்புலர். அவரது புத்தகங்கள் பிரிட்டனுக்குக் கள்ளத்தனமாகக்கடத்தப்பட்டன. அங்கு அவற்றை விற்ற கடைக்காரர்கள், வாங்கியவர்கள் எனஎல்லோரும் கைது செய்யப்பட்டார்கள்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:19 pm

    செக்ஸ்மனநோயாளிகள் சிலருக்கு ஒரு பழக்கம் உண்டு. தன் உடம்பை கண்ணாடியில் பார்த்து ரசித்தால்தான்அவர்களுக்கு செக்ஸ் உணர்வு கிளர்ந்து எழும். இந்த மனநோய்க்கு நார்ஸிசிஸம்என பெயர்வைத்தவர் எல்லிஸ்தான். சிறுவயதிலிருந்து ஒருவர் வளரும் குடும்பச் சூழல்தான் இந்தமனநோய் வருவதற்கு காரணமாக அமைகிறது என்றார் அவர்.

    நார்சிஸஸ்என்பவன் கிரேக்க காவியங்களில் வரும் ஒரு ஹீரோ. எக்கோ என்ற தேவதை அவனைக்காதலித்தாள். ஆனால், நார்சிஸஸ் அவளிடம்நாட்டம் காட்டவில்லை. இதனால் அவனை சபித்துவிட்டாள் எக்கோ. நீர் நிலைகளில் தன்னுடையநிர்வாண பிம்பத்தை தானே ரசிக்கும் மனநோயாளியாக அவன் மாறிப்போனான். இதுதான் சாபம்.பின்னாளில் நார்சிஸஸ் ஒரு அழகிய மலராக உருவெடுத்தான் (இன்றைக்கும்கூட இந்தநார்சிஸஸ் மலர் இருக்கிறது). அவன் பெயரிலிருந்தே தன் உடலைத் தானே ரசிக்கும்நோய்க்கு பெயரைச் சூட்டினார் எல்லிஸ்.

    வில்ஹெம் ரீக், ஆல்பர்ட் மால் என பல நிபுணர்கள் அடுத்தடுத்துஆராய்ச்சி புத்தகங்களை எழுதிக் குவித்தனர். கருத்தரங்குகள், விவாதக் கூட்டங்கள் என செக்ஸ் பற்றியவெளிப்படையான பேச்சுகள் சகஜமான விஷயங்கள் ஆயின. அதேபோல அவர்களுக்கு எதிர்ப்புகளும்வளர்ந்தன.

    இவர்கள்எல்லோரையும்விட ஹர்ஷ்ஃபீல்டை அதிகம் கவர்ந்தவர், ரிச்சர்டு வான்கிராஃப்ட் எபிங் என்பவர்தான். ஜெர்மனியின் புகழ்பெற்ற உளவியல் நிபுணரான இவர்சிக்மண்ட் ஃபிராய்டின் ஆசிரியர். இவர் எழுதிய பல மருத்துவ புத்தகங்களில் செக்ஸ் மனநோய்’ (லத்தீன் மொழியில்எழுதப்பட்ட அதன் பெயர் ’Psychopathia sexualis’) என்ற புத்தகம் இன்றைக்கும் மதிக்கப்படும்ஒன்று.

    ஹோமோசெக்ஸ் பழக்கம்கொண்ட பல ஆண்களை யும், லெஸ்பியன் உறவில்ஈடுபடும் பெண்களையும் இன்டர்வியூ செய்த அவர் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார். ‘‘ஓரினச் சேர்க்கைப் பிரியர்கள் மனதளவில்பாதிக்கப்பட்ட செக்ஸ் நோயாளிகள் இல்லை... அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியகுற்றவாளிகளும் இல்லை. அது உடல்ரீதியான ஒரு குறைபாடு. அவர்கள் கருவில் உருவாகும்போதே தீர்மானிக்கப்படும் விஷயம் அது. மூளையில் செக்ஸ் உணர்வுகளைத் தீர்மானிக்கும்பகுதியில் ஏற்படும் குறைபாடுதான் அவர்களை இப்படி ஆக்கிவிடுகிறது.

    அவர்களையும் மற்றமனிதர்களைப் போல நார்மலான ஆசாமிகளாகவே கருத வேண்டும். உடல்ரீதியாக ஏற்பட்ட ஒருகுறைபாட்டுக்கு பாவம்... அவர்கள் என்ன செய்வார்கள்? அதை ஒரு வகைஊனமாகத்தான் கருத வேண்டும். ஊனமுற்றவர்கள் மீது கருணை காட்டுவது போல இவர்கள்மீதும் இரக்கம் காட்ட வேண்டும்’’ என்றார் அவர்.

    ஆனால், சட்டங்கள் வேறுவிதமாக இருந்தன.

    ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் எல்லோரும் வக்ரமான மனசு படைத்த ஆசாமிகள் என காலம்காலமாகஇருந்துவந்த நினைப்பை அடியோடு நிராகரித்த எபிங்கின் கருத்து, ஹர்ஷ்ஃபீல்டுக்குப் பிடித்திருந்தது.துரதிர்ஷ்டவசமாக அப்போது ஆசிரியர் எபிங்கைவிட அவருடைய மாணவர் ஃபிராய்டுதான் செக்ஸ்விஷயங்களில் ஜாம்பவானாக இருந்தார். ஓரினச்சேர்க்கைக்கு மனசுதான் காரணம்என ஃபிராய்டுசொன்னதுதான் பாப்புலராக இருந்தது. எபிங் சொன்னதை எல்லோரும் மறந்துவிட்டார்கள்.ஹோமோசெக்ஸ் பிரச்னைக்கு மருத்துவரீதியான தீர்வு தேடும் முயற்சியில் இறங்கும் நாம், எபிங் போட்டுக்கொடுத்த பாதையில்தான் போகவேண்டும் என முடிவெடுத்தார் ஹர்ஷ்ஃபீல்ட். 1908ல் உலகிலேயே முதன்முதலாக செக்ஸ்அறிவியலுக்காக மாத இதழ் ஒன்றை ஆரம்பித்தவர் ஹர்ஷ்ஃபீல்ட். புகழ்பெற்ற பலநிபுணர்களைத் தேடி வெளிநாடுகளுக்குக் கூடச் சென்று அவர்களின் கட்டுரைகளை வாங்கிஅதில் பிரசுரம் செய்தார். ஆனால் ஒரே ஆண்டில் அதை மாக்ஸ் மார்க்யூஸ் என்பவரிடம்கொடுத்துவிட்டு ஹோமோ செக்ஸுவல்கள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார் அவர்.அப்போதைய ஜெர்மனியின் சூழல் மிக இறுக்கமானதாக இருந்தது. 1871ல் வில்ஹெம் மன்னர்ஜெர்மன் கிரிமினல் சட்டத்தைப் புதுப்பித்தார். இதன்படி ஹோமோசெக்ஸ், இயற்கைக்கு விரோதமான கிரிமினல் செயலாகக்கருதப்பட்டது. அந்த சட்டத்தின் 175ம் பாரா இதைத் தண்டனைக்குரிய குற்றமாகஅறிவித்தது. குற்றத்தில் ஈடுபடும் நபரின் பின்னணிக்கு ஏற்ப சிறைத் தண்டனை ஒரு நாள்என்ற குறைந்த அளவிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை விதிக்கப்படலாம்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:22 pm

    ஒரு அறைக்குள்தாழிடப்பட்ட கதவுக்குப் பின்னே இரண்டு ஆண்கள் மேற்கொள்ளும் உறவை போலீஸ் எப்படிமோப்பம் பிடிக்கும் என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தாலும்கூட, ஹோட்டல்கள், நடன அரங்குகளில்நிறைய பேர் கையும்களவுமாக சிக்கினார்கள். தங்களுக்குப் பிடிக்காத இளைஞர்கள் பற்றிஅக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் துப்பு கொடுத்தார்கள். பெர்லின் நகரில் மட்டும்ஒரு ஆண்டுக்கு சராசரியாக ஐந்நூறு பேர் இப்படி கைதானார்கள். அதைவிட பெரியகொடூரம்... பலர் தற்கொலை செய்து கொண்டது. பிரபலங்கள் பலரது ஹோமோசெக்ஸ் பழக்கத்தைஎப்படியோ தெரிந்துகொண்ட கிரிமினல்களும், போலீஸாரும்அவர்களை அடிக்கடி பிளாக்மெயில் செய்து பணம் பறித்தார்கள். இதனால் சஞ்சலப்பட்டுஅவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

    நான் ஹோமோசெக்ஸ் பழக்கம்உள்ளவன்தான். நான் இரவில் படுக்கையில் பெண்களோடு படுக்காமல் ஆண் தோழர்களோடுதான்படுக்கிறேன்என வெளிப்படையாக ஒருவர்

    அறிவித்துக்கொள்வது என்பது, ஏதோ பல்லவன் பஸ்ஸில்பர்ஸ் அடித்தவன் குற்றத்தை ஒப்புக்கொண்டு தர்மஅடி வாங்குவது போன்ற விஷயமாகஇருந்தது.
    ஹோமோ பிரியரானஹர்ஷ்ஃபீல்ட், இதைப் பார்த்துக்கொதித்தார். ஹோமோவுக்கு எதிரான கெடுபிடிகளை எதிர்த்து முதலில் புனைப்பெயரில் எழுதஆரம்பித்தார். ரேமியன் என்ற புனைப்பெயரில் அவர் 1896ல் வெளியிட்ட சில துண்டுப்பிரசுரங்கள் உணர்ச்சிகரமானவை. பழங்கால கிரேக்க பெண் கவிஞரான சாஃபோ (பிளாட்டோவின்ஆசிரியராக இருந்தவர்), தத்துவமேதை சாக்ரடீஸ்போன்ற பிரபலங்கள் ஹோமோசெக்ஸ் மற்றும் லெஸ்பியன் காதல் பற்றி எழுதிய கவிதைகள், கருத்துகள் ஆகியவற்றைத் தொகுத்துத் துண்டுப்பிரசுரங்கள் ஆக்கினார் ஹர்ஷ்ஃபீல்ட்.

    இவை, பரபரப்பான ஒரு அடித்தளத்தைப் போட்டுக் கொடுக்க, அடுத்த ஆண்டே ஹோமோசெக்ஸ் ஆண்களைதண்டனையிலிருந்து பாதுகாக்க, ‘விஞ்ஞானமனிதாபிமானிகள் சங்கம்’ (Scientific Humanitarian Society) என்ற அமைப்பை ஆரம்பித்தார் அவர்.

    ‘‘எப்படி பெரும்பாலானவலதுகை பழக்கமுள்ள மனிதர்களுக்கு மத்தியில் சிலர் இடதுகை பழக்கம் உள்ளவர்களாகஇருக்கிறார்களோ, அப்படி பல இயல்பான செக்ஸ்விரும்பிகளுக்கு மத்தியில் சிலர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள். இதுஅவர்களின் தவறு இல்லை. அவர்கள் வக்ரமான உணர்வு கொண்ட செக்ஸ் வெறியர்களும் இல்லை.இது பிறவிக் கோளாறு. அவர்களது உணர்வுகளுக்கும், பழக்கங்களுக்கும்உடல்ரீதியான மாறுபாடுகள்தான் காரணம். இதை அறிவியல்ரீதியாக அμக வேண்டும். அதைவிட்டு அவர்களை கிரிமினல்கள்மாதிரி நடத்தக் கூடாது. அறிவியல்தான் அவர்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும்’’ என அந்த கமிட்டி சார்பாக முழக்கமிட்டார் அவர்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:23 pm

    அதோடுமட்டுமில்லை... ஆண்கள், பெண்கள் என இரண்டு இனமாகமனித குலத்தை பிரிக்கக் கூடாது. இவற்றைப் போலவே ஓரினச் சேர்க்கை உணர்வு கொண்டவர்களைமூன்றாவது இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

    ஜெர்மனியைஅதிரவைத்த அமைப்பு அது. வெறும் எழுபது பேர்தான் அதில் உறுப்பினர்கள். ஆனால், ஆயிரக்கணக்கான பிரபலங்களின் அனுதாபத்தைத்தங்கள் பக்கம் திரட்டி, சட்டத்தையே மாற்ற அவர்முயற்சித்தார். அதோடு செக்ஸ் ஆராய்ச்சியையும் அவர் விட்டுவைக்கவில்லை. அதுதான் செக்ஸ் அறிவியலின் ஐன்ஸ்டீன்என்ற பெயரை அவருக்கு வாங்கிக் கொடுத்தது.அதேசமயம், ஹோமோசெக்ஸுக்கு ஆதரவான அவரது போராட்டத்துக்குஅடி, உதைதான் பரிசாகக் கிடைத்தது. ஹர்ஷ்ஃபீல்ட் உதைவாங்கியது பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, அப்போதைய ஜெர்மன்சூழலைப் புரிந்து கொள்வது முக்கியம்.

    தொழிற்புரட்சிஅப்போதுதான் துவங்கியிருந்தது. கிராமங்களைப் புறக்கணித்துவிட்டு மக்கள்சாரிசாரியாக நகரங்களை நோக்கி நகர ஆரம்பித்திருந்தார்கள். ஜெர்மனியின் தலைநகரானபெர்லின் அப்போது லண்டனுக்கு இணையான பெருநகரமாக வளர்ந்தது... 1895-வாக்கில்பெர்லின் நகர மக்கள் தொகை இருபத்தைந்து லட்சம்.

    இப்படி நிகழ்ந்தமக்கள் தொகைப் பெருக்கம் செக்ஸ் விஷயத்திலும் எதிரொலித்தது. கிராமங்களில்தனிமையில் இருந்த ஹோமோசெக்ஸ் நபர்கள் புதிய தோழர்களைத் தேடிக்கொள்ளும் வாய்ப்பாகஇது அமைந்தது. ஹர்ஷ்ஃபீல்ட் ஆரம்பித்த பிரசாரத்தின் விளைவாக இவர்களுக்கு நெருக்கடிதருவதையும் போலீஸ் நிறுத்திக் கொண்டது. பெர்லினில் மட்டும் ஹோமோசெக்ஸ் ஆண்களுக்காகஎன்று நாற்பது பார்கள் இருந்தன. இதுதவிர இரண்டாயிரம் ரகசிய சந்திப்பு இடங்கள்இருந்ததாக ஒரு கணக்கு சொல்கிறது. ஹோட்டல்கள், நாடக அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நடன அரங்குகள்... என பலவிதமான இடங்கள்!ஆண்களும், ஆண்களும் ஜோடியாகக் கட்டித் தழுவியபடி ஆடும்நடன அரங்குகளும் அங்கு உண்டு.

    ஹர்ஷ்ஃபீல்ட்தலைசிறந்த பேச்சாளர். ‘‘என் பேச்சை ஒரு தடவைகேட்கும் ஜெர்மன் மக்கள், ஹோமோசெக்ஸ்குற்றம் இல்லை என்பதை உணர்வார்கள். அவர்கள் மீது பரிதாபம் காட்ட ஆரம்பிப்பார்கள்.இதற்கு தண்டனை தரலாமா என பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால், அவர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் என் கருத்தைஆதரிப்பார்கள்’’ என நம்பிக்கையோடு அவர்சொல்வார். அது ஒருவகையில் உண்மையும்கூட. ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதுஅவர் பேசிய அரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தங்கள் செக்ஸ் பிரச்னைகளைஅவரிடம் சொல்லித் தீர்வு தேட பலர் க்யூவில் நின்றார்கள். தங்கள் வீட்டு விழாக்கள், பார்ட்டிகளில் அவர் கலந்துகொள்வதை ஜெர்மனியின்கனவான்கள் பெரிய கௌரவமாக நினைத்தார்கள்.

    ஜெர்மனியின் பலஅரசியல் கட்சிகள் அப்போது ஹோமோசெக்ஸுக்குத் தண்டனை தருவதை எதிர்த்தன.

    குற்றவியல் சட்டத்தையேதிருத்தினால் என்ன?’ என்கிறரீதியில் பலவீடுகளிலேயே விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

    இதற்காகபேசுவதோடு மட்டுமில்லாமல், ஒரே ஆண்டில்சுமார் முந்நூறு புத்தகங்களை வெளியிட்டது, அவரது விஞ்ஞான மனிதாபிமானிகள் சங்கம்.அந்த சங்கத்தின் சார்பாக ஒரு பத்திரிகையும்வெளிவந்தது. ஹோமோசெக்ஸ் ஆண்களின் மருத்துவ மற்றும் சட்டப் பிரச்னைகளைப் பற்றியகட்டுரைகளுக்கு இது முக்கியத்துவம் கொடுத்தது. இந்தவகையில் முதல் பத்திரிகை, உலகிலேயே இதுதான்!

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:24 pm

    இப்படி ஒருபுறம்ஹோமோசெக்ஸ் நபர்களுக்காகப் போராடினாலும், விஞ்ஞானி மற்றும்ஆராய்ச்சியாளர் என்று அழைக்கப்படுவதையே பெரிய அங்கீகாரமாக அவர் நினைத்தார். செக்ஸ்பிரச்னைகளுக்காக அவரிடம் ஓரினச் சேர்க்கையாளர்கள் மட்டுமின்றி, எல்லோரும் வந்தனர். தன்னிடம் இப்படி ஆலோசனைக்குவந்த ஆண்கள் மற்றும் பெண்கள் முப்பதாயிரம் பேரிடம் 130 கேள்விகள் அடங்கிய ஒருபடிவத்தைக் கொடுத்து அவர் சர்வே நடத்தினார். செக்ஸ் விஷயத்தில்தம்பதிகள் ஒளிவுமறைவில்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்ததுஎன்பது அவர் இந்த சர்வே மூலம் கண்டுபிடித்துச்சொன்ன கருத்து.

    இந்தஆராய்ச்சிகளை வைத்து அவர் எழுதிய செக்ஸ்நோயறிவியல்என்ற மூன்று பாகங்கள்கொண்ட புத்தகம், இன்றளவும் பலரைப் பிரமிக்கவைக்கும் ஒன்று. இதேபோல செக்ஸ் அறிவுஎன்ற ஐந்து பாகங்கள் கொண்ட இன்னொருபுத்தகத்தையும் அவர் எழுதினார்.

    இந்த இரண்டுமேசாதாரண வாசகர்கள் படித்துக் கிளர்ச்சி அடைவதற்காகப் படைக்கப்பட்ட ஆபாசஇலக்கியங்கள் இல்லை. டாக்டர்கள் செக்ஸ் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு தங்களிடம்வரும் நோயாளிகளுக்குத் தீர்வு தர வேண்டும் என்ற அக்கறையில் எழுதப்பட்ட பாடபுத்தகங்கள். ஆனால், வெறும் புத்தகங்களைப்படித்து டாக்டர்கள் சிகிச்சை தருவது கஷ்டம் என அவர் நினைத்தார். எனவே டாக்டர்கள்பிராக்டிக்கலாக பயிற்சி பெற ஒரு ஆராய்ச்சி நிலையத்தை ஆரம்பிக்க விரும்பினார்.அவரது அந்தக் கனவு, 1919-ம் ஆண்டு ஜூலை 6-ம்தேதி நிஜமானது. பெர்லினில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மாளிகையை அந்த நிலையத்துக்காகக்கொடுத்தார். ‘Institut e of Sexual Science’ என்ற பெயரோடு துவக்கப்பட்ட இது, உலகின் முதல்செக்ஸ் ஆராய்ச்சி மையமாக அமைந்தது.

    ‘‘வெறுத்து ஒதுக்க வேண்டியஅருவருப்பான பொருளாகவோ, மூடி மறைக்க வேண்டியரகசியமாகவோ செக்ஸை இனியும் கருத வேண்டாம். அதை அறிவியலின் ஒரு அங்கமாக்கிஆராய்ச்சிக்கு உட்படுத்தி, பிரச்னைகளுக்குத்தீர்வு காண்போம். செக்ஸ் பிரச்னைகளை மூடிமறைத்து இனி எந்த குடும்பமும்சிதைந்துவிடக் கூடாது’’ என்றார் அவர்.

    ஆனால், இந்த ஆராய்ச்சி நிலையம்தான் அவரது உயிருக்குஎமனாக அமைந்தது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:25 pm

    ஹர்ஷ்ஃ பீல்டின்ஆராய்ச்சி நிலையம் செக்ஸ் தொடர்பான எல்லா விஷயங் களையும் டீல் பண்ணியது. செக்ஸ்உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவது, செக்ஸ் மன நோயாளிகளுக்கு சிகிச்சை, திருமணத்துக்கு முன்பே கவுன்சிலிங் கொடுத்து--செக்ஸ் உறவு பற்றிய சந்தேகங்களைக் களைவது, முதலிரவு பற்றியபயத்தைத் தெளியவைப்பது (இப்படி கவுன்சிலிங் தருவதை ஹர்ஷ்ஃபீல்ட்தான் ஐரோப்பாவில்முதலில் ஆரம்பித்து வைத்தார்.), பாலியல்நோய்களுக்கான சிகிச்சை, செக்ஸ் ஆராய்ச்சி... எனஎல்லாம் அங்கு நடந்தது.

    அந்த நிலையத்தின்ஒருபகுதியில்தான் உலகின் முதல் செக்ஸ் நூலகம்ஆரம்பிக்கப்பட்டது. செக்ஸ் தொடர்பாகப் பலமொழிகளில் எழுதப்பட்ட இருபதாயிரம் அரிய புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டன. இதுதவிர 35,000 புகைப்படங்கள், பிரபலமானஓவியர்கள் வரைந்த செக்ஸ் ஓவியங் கள், சிலைகள் எனஎல்லாம் அங்கு இருந்தன. தங்கள் செக்ஸ் பழக்கங் களை விலாவாரியாக விவரித்துப் பலர்எழுதிய உணர்ச்சிகரமான கடிதங்களும் அங்கு பாதுகாக்கப்பட்டன.

    இங்கு வரும் ஒருவர்உலகத்தின் ஒவ்வொரு நாட்டு மக்களும் செக்ஸ் பற்றி என்ன அபிப்பிராயம்வைத்திருந்தார்கள், ஒவ்வொரு நாட்டிலும்வெவ்வேறு கட்டத்தில் மக்கள் என்னவிதமான செக்ஸ் உறவுகளில் நாட்டம் காட்டி னார்கள்என்பதையெல்லாம் புரிந்து கொள்ளலாம். இங்கு ஆராய்ச்சி செய்ய பல நாடுகளிலிருந்துவிஞ்ஞானிகள் வந்தார்கள். உலகிலேயே புதுமையான முயற்சி என்பதால் சும்மாபார்த்துவிட்டுப் போகவே பல நாடுகளிலிருந்து பிரபலமான நபர்கள் வந்தார்கள்.
    அமெரிக்காவில்போய் வெள்ளை மாளிகைக்கு அட்ரஸ் கேட்க வேண்டியதில்லை என்பார்கள். அப்படி பெர்லினில்மிகப் பிரபலமான இடமாக இருந்தது இந்த நிலையம்! இதன் பெருமையை உணர்ந்து, அரசே இந்த நிலையத்தைத் தன் பொறுப்பில்ஏற்றுக்கொண்டது. அது மட்டுமில்லை... இந்த நிலையத்துக்கு மாக்னஸ் ஹர்ஷ்ஃபீல்ட் அறக்கட்டளைஎன பெயர் வைத்தது.

    இது வெற்றிகரமாகசெயல்படும் திருப்தியில் மீண்டும் ஹோமோசெக்ஸ் பக்கம் கவனத்தைத் திருப்பினார்ஹர்ஷ்ஃபீல்ட். பிரபல டைரக்டர் ரிச்சர்ட் ஆஸ்வால்ட் இயக்கத்தில் "டிஃபரென்ட்ஃப்ரம் அதர்ஸ்" (Different from others) என்றதிரைப்படத்தைத் தயாரித்தார். மற்றவர்களிலிருந்துவேறுபட்டதுஎன்ற பொருள் கொண்ட இந்தப்படம் பரபரப்பாக வெளியானது. ஹோமோசெக்ஸ் பழக்கமுள்ள ஒரு

    பியானோ இசைக்கலைஞன்... அவன் இப்படி உறவு கொள்வ தைப் பார்த்துவிட்டு பிளாக்மெயில் செய்கிறது ஒருகும்பல். அதனால் மன நிம்மதி இழந்து அவன் தற்கொலை செய்து கொள்வதைக் கதையாகச் சித்திரித்து இருந்தது அந்தப்படம். ஹோமோசெக்ஸை மையக் கருத்தாக வைத்து வெளியான முதல் திரைப்படம் அதுதான்! அந்தப்படம் ஐரோப் பிய நாடுகள் பலவற்றிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. துரதிர்ஷ்டவசமாகஅதுதான் ஹர்ஷ்ஃபீல்டுக்கு பெரும் பிரச்னை யாக அமைந்தது. இந்த மாபெரும் வெற்றிஹிட்லரின் கவனத்துக்குப் போகவே பல்வேறு பிரச்னைகளை சந்தித்தார் ஹர்ஷ்ஃபீல்டு.

    ஹிட்லருக்குஇரண்டு கும்பல் களை சுத்தமாகப் பிடிக்காது. ஒன்று யூதர்கள்... இன்னொன்றுஹோமோசெக்ஸ் ஆண்கள். சோதனையாக அந்த சமயத்தில் ஜெர்மனியில் செக்ஸ் ஆராய்ச்சியில்பிரபலமாக இருந்த பலரும் யூதர்கள். ஹிட்லரின் எதிர்ப்பைத் தாங்கமுடியாமல் ஃபிராய்டுஉட்பட அவர்களில் பலர் ஜெர்மனியை விட்டே ஓடினார்கள்.
    ஹர்ஷ்ஃபீல்டுயூதராக மட்டுமில் லாமல், ஹோமோசெக்ஸுவலாகவும் இருந்தார். அதனால் தவிர்க்க முடியாமல் ஹிட்லரின் முக்கியஇலக்காகிவிட்டார்.

    ஹிட்லரின் நாஜிஇளைஞர் கும்பல், இந்தப் படம் ஓடியதியேட்டர்களில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டது. கல் எறிவார்கள்... புகை கக்கிபயமுறுத்தும் நாட்டு வெடிகுண்டுகளை வீசுவார்கள். வியன்னாவில் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களைக் கண்மண் தெரியாமல் துப்பாக்கியால் சுட்டனர். யாரும் சாகவில்லைஎன்றாலும்,நிறையபேருக்குப் பலத்தகாயம். படம் பார்க்கப் போவதே உயிருக்கு ஆபத்தான விஷயம் என்றால், யார் தியேட்டருக்கு வருவார்கள்? ஒருவழியாகப் படம் பெட்டியில் சுருண்டது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:25 pm

    அடுத்தகட்டமாக, ஹர்ஷ்ஃபீல்ட் பேசும் கருத்தரங்குகளைக்குறிவைத்தனர். மியூனிச் நகரில் 1920-ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்கினர். அவ ரது உதடுகளைக் குதறிஎடுத்து விட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்... இனி ஹோமோ செக்ஸில் ஈடுபடும்போது தனது சீடர்கள்யாரையும் இவர் முத்தமிட முடியாது’.

    சளைக்காமல், சில மாதங்கள் கழித்து வாய் சரியானதும் அதேமியூனிச்சில் பேசப் போனார் அவர். இம்முறை அவரைக் கூட்ட அரங்கிலிருந்து வெளியே
    இழுத்துவந்து தடிகளால்தாக்கினர். அடித்த அடியில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. எப்படியும்செத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவரை பிளாட்பாரத்தில் போட்டு விட்டு அவர்கள்போனார் கள். உறைபனியில் பேச்சு மூச்சற்றுக் கிடந்த அவரை யாரோ காப்பாற்றினார்கள்.

    இனியும் ஜெர்மனியில் இருந்தால்தன் உயிருக்கு ஆபத்துஎன்பது அவருக் குப்புரிந்தது. செக்ஸ் தொடர்பான கருத்தரங்கு களில் பேச அவர் உலகச் சுற்றுப்பயணம்கிளம்பி னார். அந்த சமயத்தில் ஹிட்லர் விஸ்வரூபம் எடுத்தார்.

    உலகத்தில் வேறெங்கும் இல்லாத அரிய படைப்புகளைக் கொண்ட ஹர்ஷ்ஃபீல் டின் ஆராய்ச்சி நிலையமும், நூலகமும் ஜெர்மனிக்கே அவமானம் தேடித் தருவதாகஹிட்லர் நினைக்க, செக்ஸ் ஆராய்ச்சிக்குஎதிரான முதல் நெருப்பு அங்கே பற்ற வைக்கப் பட்டது.

    இதற்காக அவர்குறித்த நாள், 1933-ம் ஆண்டு மே 6-ம்தேதி.

    அன்று நடந்தசம்பவங்களை நேரில் பார்த்த நிருபர் ஒருவரின் நேரடி வர்ணனை இதோ...

    ‘‘ஜெர்மானியர்களின்உணர்வுகளுக்கு எதிரான நூலகங் களை அழித்து நாட்டை சுத்தப்படுத்தும்பணியைச் செய்யு மாறு அன்று காலை நாஜிஇளைஞர்களுக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். இந்த தகவல் ஹர்ஷ்ஃபீல்டின் உதவியாளர்களுக்குஎப்படியோ தெரிந்துவிட்டது. அவர்கள் அங்கிருந்த அரிய புத்தகங்கள் சிலவற்றையாவதுவெளியே எடுத்துச் சென்று பாதுகாக்க முயன்றனர். ஆனால், முதல்நாள் இரவிலிருந்தே நூலக வாசலில் போலீஸ்காவல் இருந்தது.

    புத்தகங்களைவெளியே எடுத்துச் செல்ல முயன்ற நூலக ஊழியர்களைத் திருட்டுக் குற்றம் சாட்டி கைதுசெய்த போலீஸ், அந்தப் புத்தகங்களைபழையபடி நூலகத்தில் பத்திரமாகவைத்தது.

    காலை ஒன்பதரைமணி. பெர்லின் ஜிம்னாஸ் டிக்ஸ் அகாடமியிலிருந்து நூறு இளைஞர்கள் லாரிகளில்ஏறிவந்து, நூலகத்தின் முன்னால் இறங்கினர். ஏதோ ராμவ அணிவகுப்பு போல அவர்கள் நூலகத்தின் வாசலில்அணிவகுத்தனர். அவர்களுடனே வந்திருந்த ஒரு பேண்டு இசைக்குழு, வாசலில் நின்று நாராசமான இசையை எழுப்பியபடிஇருக்க, அந்த இளைஞர்கள் கதவை உடைத்துக் கொண்டு எல்லாஅறைகளுக்கும் சென்றனர். சுவர்களில் மாட்டியிருந்த ஓவியங்கள், புகைப்படங்கள், வரைபடங்களை சிலர்பிடுங்கி ஜன்னல் வழியாகத் தூக்கி ரோட்டில் எறிந்தனர். எல்லாம் கந்தரகோலமாயின.

    இன்னொருகுழுவினரிடம், ‘எந்தெந்த புத்தகங்கள்மிகவும் ஆபாசமானவைஎன்ற கறுப்புப் பட்டியல்இருந்தது. அதை வைத்து சில நூறு புத்தகங்களை அவர்கள் பறிமுதல் செய்து ஜன்னல் வழியேதூக்கி எறிந்தனர். அவை அவர்கள் வந்த லாரிக்குள் பத்திரமாக அடைக்கலமாயின.

    உடலில்எங்கெல்லாம் ஹார்மோன் சுரப்பிகள் இருக்கின்றன என்பதை மாணவர்களுக்கு விளக்க உதவும்ஆளுயர மாடல் பொம்மை ஒன்று ஹாலில் இருந்தது. வெள்ளைக் களிமண்ணால் ஆன அந்தப் பொம்மை, ஆடைகள் எதையும் அணிந்திருக்கவில்லை. ஆபாசமானஅந்தப் பொம்மையைமாடியிலிருந்து தூக்கி எறிய... அது சிதறி தூள்தூளானது. அதைப் பார்த்து அவர்கள்வெற்றிக் களிப்பில் சிரித்தார்கள்.

    ஹர்ஷ்ஃபீல்டின்மார்பளவு வெண்கலச் சிலை ஒன்று அங்கே இருந்தது. அதைக் கையோடு எடுத்துக்கொண்டார்கள். அதுதவிர, விதம்விதமான செக்ஸ்உறவுக் காட்சிகளை விளக்கும்விதமாக அங்கிருந்த சிலைகள் பலவற்றையும் அந்தக் கும்பல்பறிமுதல் செய்தது. ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்க்க, மதியம் பன்னிரண்டு மணிவாக்கில் இந்த சுத்தப்படுத்தும்பணி முடிந்தது. அவர்கள் கிளம்பினார்கள்.

    இன்னமும்புத்தகங்கள் மிச்சமிருந்தன. இதையாவதுவிட்டார்களேஎன நூலக ஊழியர்கள்பெருமூச்சு விட்டனர். ஆனால், மதியம் மூன்றுமணிவாக்கில் ஏழெட்டு லாரிகளில் ஆட்கள் வந்து இறங்கினர். இம்முறை அவர்களோடு போலீஸ்அதிகாரிகளும் வந்தனர்...

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:26 pm

    ‘‘காலையில் வந்தவர்களுக்கு நேரம் போதாததால்சரியாக சுத்தம்செய்யமுடியவில்லை. நாங்கள் நிதான மாக செய்கிறோம்’’ என்றபடி அவர்கள்உள்ளே நுழைந்தார்கள். நூலகத்தில் இருந்த எல்லா புத்தகங்களையும் எடுத்து லாரிகளில்ஏற்றினர். இரண்டு லாரிகள் நிரம்பின.

    நூலகம் காலியானபிறகு அந்தக் கும்பலின் தலைவன் அங்கிருந்த ஊழியர்களிடம், ‘‘ஹர்ஷ் ஃபீல்ட் எங்கே போயிருக்கிறார்... எப்போதுவருவார்?’’என அதட்டலாகக் கேட்டான்.

    ‘‘அவருக்கு மலேரியாகாய்ச்சல். சிகிச்சைக்காக வெளிநாடு போயிருக்கிறார்’’ என சன்னமானகுரலில் சொன்னார் ஓர் ஊழியர்.

    ‘‘அவரைத் தூக்கிலிட்டோ, கல்லால் அடித்தோ சாகடிக்க நாங்கள்ஆசைப்பட்டோம். எங்கள் உதவி இல்லாமலே அவர் செத்து விடுவார் போலிருக்கிறதே!’’ என்றபடி அவன் சிரிக்க, கூட வந்தவர்கள் எல்லோரும் அந்த சிரிப்பில்கலந்தபடி கிளம்பிப் போனார்கள்.

    மறுநாள், நூலகத்துக்கு நேர்ந்த கதி சர்வதேசபத்திரிகைகளில் வெளியாக, பல நாடுகள் கவலைஅடைந்தன. செக்ஸ் சீர்திருத்தத்துக்கான உலக கமிட்டி’& ஜெர்மன் கல்வி அமைச்சகத்துக்கு அவசரமாக ஒருதந்தி கொடுத்தது. அந்தப் புத்தகங்களில்பலவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானவை. அவற்றை எரித்து விடாதீர்கள்என்று கேட்டுக் கொண்டது.

    ஆனால், மே பத்தாம் தேதி மாலை... கையில் தீப்பந்தம்ஏந்திய ஓர் இளைஞர் கும்பல், ஊர்வலமாக ஓபராசதுக்கத்தை நோக்கி சென்றது. அந்த ஊர்வலத்தில் முன்னால் சென்றவனின் கையில்ஹர்ஷ்ஃபீல்டின் வெண்கலச் சிலை இருந்தது. நூலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட எல்லாப்புத்தகங்களும் லாரிகளில் வந்தன. அவற்றை எரித்த அந்தக் கும்பல், கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில்ஹர்ஷ்ஃபீல்டின் சிலையைத் தூக்கிப் போட்டது.

    விஷத்தைப் பரப்பி வந்தயூதர் ஹர்ஷ்ஃபீல்டின் ஆபாச நூலகம் சுத்தம் செய்யப்பட்டதுஎன மறுநாள் நாஜி அரசு செய்திக்குறிப்புவெளியிட்டது.
    இதற்குப் பிறகுஹர்ஷ்ஃபீல்ட், ஜெர்மன் திரும்பவில்லை.ஃபிரான்ஸில் தஞ்சம் புகுந்தார்.

    தங்கள் அரசின்சாதனைகளை செய்திப் படங்களாகத் தயாரித்து இருந்தார் ஹிட்லர். அவை நாஜிஅடக்குமுறையின் வேதனையான அடையாளமாக பல ஐரோப்பிய நாடுகளில் திரையிடப்பட்டன.ஹர்ஷ்ஃபீல்டின் நூலகத்தில் இருந்த புத்தகங்கள் எரியும் காட்சிகளும் இப்படிசெய்திப் படமானது. தான் சிரமப்பட்டு சேகரித்த

    நூல்கள்எரிக்கப்படும் காட்சியை பாரீஸில் ஒரு தியேட்டரில் பார்த்தார் ஹர்ஷ்ஃபீல்ட். அந்தவேதனையோடு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்தார். பெர்லினில் இருந்ததைப் போலவேஃபிரான்ஸில் ஓர் ஆராய்ச்சி நிலையமும், நூலகமும்ஆரம்பிக்க வேண்டும் என்ற அவரது கனவும் நிராசையானது (பெர்லினில் ஹிட்லர் ஆட்களின்ரெய்டுக்குப் பிறகு மூடியிருந்த அந்த ஆராய்ச்சி நிலையக் கட்டடம், இரண்டாம் உலகப் போரின்போது குண்டுவீச்சில்சேதமடைந்தது. பாழடைந்து புல் முளைத்திருக்கும் அந்தக் கட்டடத்தை சீரமைத்து, ஹர்ஷ்ஃபீல்ட் பெயரில் அங்கு ஆராய்ச்சி நிலையம்அமைக்கும் பணியில் இப்போது சிலர் ஈடுபட்டுள்ளனர்).

    ஹர்ஷ்ஃபீல்டின்ஆராய்ச்சி நிலையத்தையும், நூலகத்தையும்ஹிட்லர் திட்டமிட்டுக் காலி செய்ததற்கு இன்னொரு காரணமும் சொல்லப் பட்டது. நாஜி தலைவர்கள் பலரே ஹோமோசெக்ஸ் நபர்கள்.அவர்கள் ஹர்ஷ்ஃபீல்டிடம் சிகிச்சை பெற்றவர்கள். அவர்களைப் பற்றிய ஆவணங்கள் அந்தநூலகத்தில் இருந்தன. அவை ஆட்சிக்கே ஆபத்து விளைவிக்கும் அபாயம் இருந்ததால்அவற்றைக் குறி வைத்துதான் ஹிட்லர் தாக்குதல் தொடுத்தார்என்றும் சொல்லப்படுகிறது.

    ஹோமோசெக்ஸைஅடியோடு வெறுத்த ஹிட்லர், தனது அமைப்பினரைஎப்படி அந்தப் பழக்கத்தில் ஈடுபட அனுமதித்தார்? அதற்கு காரணம்எர்னஸ்ட் ரோம். ஹிட்லரின் கலகப் படையின் தலைவராக இருந்தவர் இந்த ரோம். பழுப்புச் சட்டைராணுவம்எனப்படும் இந்த அமைப்புதான் ஹிட்லரின்வலதுகரமாக இருந்தது. நகர்ப்புற சேரிகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட ஆட்களைக்கொண்ட குண்டர்படை இது. அரசியல் எதிரிகள், யூதர்கள், தன்னை விமர்சனம் செய்பவர்கள் என பலரைத்தீர்த்துக்கட்ட வும், கலகங்கள் செய்யவும் இந்தஅமைப்பைத் தான் பயன்படுத்தினார் ஹிட்லர். படிப்பறிவில் லாத, முரடர்கள் நிறைந்த இந்தப் படையில் பலர் ஹோமோசெக்ஸ் பார்ட்டிகள். ரோம்கூட இந்தப் பழக்கத்துக்கு அடிமை!

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum