ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    மதுவின் கோரப்பிடியில்

    Go down

    மதுவின் கோரப்பிடியில்  Empty மதுவின் கோரப்பிடியில்

    Post by Admin Thu 18 Nov 2010, 6:03 pm

    ஒழுக்கமும்வீரமும் நிறைந்த இளைஞன் ஒருவன் முக்கிய வேலையாகக் காட்டினூடேசென்றுகொண்டிருந்தான். அவனைப் பாதை மாற வைக்கவேண்டும், தவறு செய்யத் தூண்டவேண்டும் என்று விரும்பிய சாத்தான் காட்டில் அழகிய இளம்பெண்ஒருத்தி, ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு புட்டி மதுவுடன்வழியில் காத்துக்கொண்டிருந்தது. அவனை வழிமறித்து, "நீ மேற்கொண்டுபயணம் செய்ய வேண்டுமானால், இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்யவேண்டும், அல்லது இந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டும். இந்த இரண்டும் செய்ய விரும்பவில்லைஎன்றால் குறைந்த பட்சம் இந்த மதுவையாவது அருந்த வேண்டும். இல்லையெனில், நான் உன்னை விடமாட்டேன்." என்று சொன்னது.



    beer_invitationஇளைஞன் கொஞ்சம் யோசித்தான். அவன் சென்றுகொண்டிருக்கும் பணியோ அவசரமானது,முக்கியமானது. எனவே இந்தமூன்றில் ஏதேனும் ஒன்றை அவன் செய்துதான் ஆகவேண்டும். ஒழுக்கம் நிறைந்தவன் ஆதலால், அவன் பெண்ணை பலாத்காரம் செய்வதை அவன் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. ஒருவீரனால் ஒன்றுமறியா ஒரு பச்சிளங்குழந்தையை எப்படிக் கொல்ல இயலும்? எனவே மதுவை அருந்திவிடுவதே கொடுக்கப்பட்ட மூன்றில் எளியது என்று அவனுக்குத்தோன்றியது. சாத்தானிடம் அவன் தன் முடிவைச் சொல்லிவிட்டு, மதுப்புட்டியை எடுத்து அருந்தினான். மது உள்ளே சென்றதும், புத்தி தடுமாறியது. போதையில் மோகவெறி ஏறவே அப்பெண்ணைப் பலாத்காரம் செய்தான்.இடையில் குழந்தை அழுது, அவனைத் தொல்லை செய்தது. உடனே அவன் வாளால்அக்குழந்தையை வெட்டிக் கொன்றுவிட்டான். சாத்தான் தன் வேலை முடிந்த திருப்தியுடன்சென்றது.

    மதுவின் தீமையைவிளக்கக் கூறப்படும் கதை இது. மதுவின் பிடியில் சிக்கிய மனிதர்கள் தமது மனநலம், உடல் நலம் இரண்டையும் இழப்பதோடு, சமூகத்தில்தனக்குள்ள மதிப்பையும் இழக்கின்றனர்.

    மதுவினால்ஏற்படும் பாதிப்புகள்:
    மதுஅருந்துபவர்கள் சொல்லும் பொதுவான காரணங்கள், 'எனக்கு அலுவலில்பிரச்னை', 'வீட்டில் குழப்பம்', 'என் துயரத்தை மறக்கக் குடிக்கிறேன்', 'உடல் அலுப்பைமறக்கக் குடிக்கிறேன்' என்பன. ஆனால் உண்மையில் நமது மனம் அந்தப்போதையின் பாதையில் செல்ல விரும்புகிறது. அதற்கு இதுவெல்லாம் ஒரு நொண்டிச் சாக்கு.பார்க்கப்போனால், மதுவின் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கையில் நாம்மறந்திருக்கும் பிரச்னைகள் நாம் நனவுலகிற்கு வந்தவுடன் இன்னும் அதிகமாகத்தாக்கும். நம்மை மேலும் தனிமையாய் உணரச் செய்யும். அதிகமாக மனச் சோர்வையும் மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தும். மது கொஞ்சம் கொஞ்சமாக நமது சிந்தனைத் திறனை, மூளையின் செயற்பாட்டை மழுங்கடிக்கும். உடலிலும் மனத்திலும் மதுவினால் ஏற்படும்விளைவுகள் என்னென்ன என்று தெரிந்துகொண்டால் நாம் அதன் பிடியில் இருந்து விலகிக்கொள்ளலாம். நமது நெருங்கிய உறவு மற்றும் நண்பர்கள் இதற்கு ஆட்பட்டிருந்தால்அவர்களுக்கும் எடுத்துரைத்து அவர்களை மீட்க முயலலாம்.

    மதுவைஅருந்தியவுடன் மது அருந்துபவர்களின் இரத்தத்தில் நேரடியாக ஆல்கஹால்கலந்துவிடுகிறது. மூளைக்கு ஆல்கஹால் கலந்த இரத்தம் செல்கையில் உடல் உறுப்புகளைஇயக்கும் மூளை நரம்புகள் சரிவரச் செயல்படுவதில்லை. எனவே நடை தடுமாறுகிறது.நாக்குக் குழறுகிறது. கண்பார்வை விரிவடைவதால் பார்வை மசமசப்பாகிறது. உடல்இயக்கங்களை ஒருங்கிணைப்பதும், சிந்திப்பதும் கடினமாகின்றன.எனவே மறதிஏற்படுகிறது.

    தொடர்ந்து மதுஅருந்துகையில், மேலும் நிலைமை மேலும் மோசமாகிறது. இரத்தத்தில்கலந்திருக்கும் ஆல்கஹாலின் அளவு அதிகரிக்கிறது. அதிக அளவு ஆல்கஹாலை உடலால்உடனடியாக ஏற்றுச் சீரணித்துக்கொள்ள இயலுவதில்லை. இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை Blood Alcohol Count (BAC) என்று குறிக்கின்றனர். இது 0.10 அளவு வரைஇருக்கும்பொழுது பெரிய ஆபத்து எதுவும் நேரிடாது. ஆனால், தொடர்ந்து மது அருந்துபவர்கள் உடலில் இது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.இரத்தத்தில் மதுவின் அளவு மிக அதிகரிக்கையில் கோமா, மூச்சடைப்பு இவைஏற்படும் வாய்ப்புகள் மிக உண்டு.

    தொடர்ந்து மதுஅருந்துபவர்கள் உடம்பில் ஆல்கஹாலுக்கு எதிரான தாங்கும் சக்தி (Tolerance) அதிகரிக்கிறது. அதாவது குறைந்த அளவு ஆல்கஹால்போதையை ஏற்படுத்துவது இல்லை. எனவே மேலும், மேலும்குடிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுவிடுகிறது. அதிக அளவு மது உடல்உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்ல, போதையின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அதிக அளவில் விபத்துகளுக்குஉள்ளாகின்றனர். கீழே விழுதல், தீ விபத்து, நீரில்மூழ்கிவிடுதல், மோட்டார் வாகனங்களை ஓட்டும்பொழுதும், இயந்திரங்களை இயக்கும்பொழுதும் விபத்துக்குள்ளாகுதல் இவை எல்லாம் மதுஅருந்துபவர்களுக்கிடையேதான் அதிகம்.

    உடலில் அதிகமாகும்ஆல்கஹாலின் அளவு நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடும். சிறு சிறு உடல்உபாதைகளுக்கு எதிராகப் போராடும் சக்தியைக் கூட உடல் இழந்துவிடுகிறது. சளித்தொல்லைஅதிகமாகிறது. உணவில் இருந்து சத்துக்களை உறிஞ்சி உடலுக்குத் தரவேண்டிய உறுப்புகள்மெல்ல மெல்லச் செயல் இழக்கின்றன. இதன் காரணமாக உடலுக்குத் தேவையான சத்துக்கள்கிடைப்பதில்லை. ஆனால், மதுவில் இருக்கும் கலோரிகள் உடனடியாக உடலில்கலந்துவிடுவதால், உடல் பருமன் நாளடைவில் மிகவும் அதிகரித்துவிடக்கூடும். உடலில் உள்ள நீர்ச்சத்தினை மது குறைக்கிறது. இதனால் தோல் சுருங்கியும்வறண்டும் போகத்தொடங்கும். அது மட்டுமின்றி, இரத்த நாளங்கள்சுருங்கவும், அவற்றில் வெடிப்புகள் உண்டாகவும் மது காரணமாகிவிடுகிறது.

    அதிக அளவு மதுஅருந்துவது, அல்லது தொடர்ந்து மது அருந்துவது, நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். மூளையில் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாகஅழியத்தொடங்கும். கல்லீரல் மற்றும் குடலில் புண் உண்டாகும். இதனால் செரிமானக்கோளாறுகள் மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். மஞ்சள் காமாலை நோயும் தாக்குவதற்கானவாய்ப்பு அதிகரிக்கும். இரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். நரம்பு மண்டலப் பாதிப்புகள், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம். மாரடைப்பு, புற்றுநோய்இவற்றின் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடலாம்.

    அது மட்டுமல்ல.குடிப்பவர்கள் தங்கள் நிதானத்தை இழந்துவிடுவதால் வீட்டில் சண்டை சச்சரவுகள்அதிகரிக்கின்றன. சமூகத்தில் கெட்ட பெயரும் உண்டாகிறது. மானம் மரியாதை இவை காற்றில்பறக்கின்றன. இயக்குநர் சிகரம் திரு. பாலசந்தரின் சிந்து பைரவி திரைப்படம்பார்த்திருக்கிறீர்களா? குடியின் தீமையை அதைப்பார்த்தவர்கள் எல்லாரும்அவசியம் உணர்ந்திருப்பார்கள். இத்தகைய பல கேடுகள் உண்டாக்கக்கூடிய 'குடி கெடுக்கும்' குடிப்பழக்கத்தைக் கைவிட வேண்டியது அவசியம். குடிப்பழக்கத்தைநிறுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளுடன் மீண்டும் இப்பகுதியில்சந்திப்போம்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top


     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum