ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    ஆங்கில மருத்துவம் -விழி பிதுங்கி நிற்கும் 51 நோய்கள்

    3 posters

    Go down

    ஆங்கில மருத்துவம் -விழி பிதுங்கி நிற்கும் 51 நோய்கள்  Empty ஆங்கில மருத்துவம் -விழி பிதுங்கி நிற்கும் 51 நோய்கள்

    Post by ஜவாஹிரா Wed 17 Nov 2010, 3:36 pm

    ஆங்கில மருந்துகள் எந்தப் பயனும் அற்றவை என்பதையும் பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும், அந்த நோய்களைக் குணப்படுத்துவோம் என்று சொல்லக்கூடாது என்றும் இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

    “Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995, ‘Schedule J’ contains a list of 51 disease and ailments (by whatever name described) which a drugh may not purport to prevent or cure or make claims to prevent or cure”.

    ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்’ 1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் - ‘J’ என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்!’ என்றோ, ‘மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்!’ என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.

    நோயால் வாடும் மக்களின் நன்மைக்காக, அவர்கள் உயிர்களும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்காக நமது அரசாங்கம், ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்கள் மொத்தம் 51 என்று மேற்சொன்ன சட்டத்தில் ஷெட்யூல் - Jயில் வலியுறுத்தியுள்ளது. இந்த 51 வியாதிகளையும் ஆங்கில மருத்துவர்கள் எவரும் தங்கள் மருந்துகளால், குணப்படுத்த முடியும் என்றோ, குணப்படுத்திக் காட்டுகிறேன் என்றோ கூறுவது சட்டப்படி குற்றமாகும் என்று எச்சரிக்கிறது.

    இந்த 51 நோய்களும் ஆங்கில மருத்துவத்துக்கு மட்டுமே சொந்தமானவை. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது நோய்கள் இந்த ‘லிஸ்ட்’டில் சேரும் வாய்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த வகையில் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் நோய்கள் ‘எய்ட்ஸ், சார்ஸ்’ ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ஹெப்படைட்டிஸ் என்ற ஒரு நோயும் இதிலே அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

    இவ்வாறாக, ஆங்கில மருத்துவம், தான் கண்டுபிடித்த நோய்கள் ஒவ்வொன்றையும் ஆதி முதல் அந்தம் வரை ஒவ்வொன்றாக அவற்றைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து அந்த நோய்களை அடக்கம் செய்து கொண்டு வரும் வேளையில் இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், அதாவது, ஆங்கில மருந்துகளில் எந்த ஒரு மருந்தும் ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள ஆங்கில மருத்துவத்தில் நோய்களைக் குணமாக்காது என்பதை அந்த மருத்துவம் சர்வதேச அளவில் ஒப்புக்கொண்டு அதை பகிரங்கமாக அச்சிட்டிருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பதற்காகவும், எனவே, ஆங்கில மருத்துவம் பார்க்கும் எந்த ஒரு மருத்துவரும், ஆங்கில மருத்துவத்தில் மருந்து என்பதே கிடையாது என்ற உண்மையான காரணத்தினால் ஷெட்யூல்-Jயில் உள்ள நோய்களுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது என்பதற்காகவும்,

    ஆங்கில மருத்துவம் இந்த 51 நோய்களுக்கும் குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கிறது என்று கூறுவது தவறான, ஆபத்தான போக்கு. நோயால் அவதியுறும் மக்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பதை எச்சரிப்பதற்காகவும், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் பேரில் நமது அரசாங்கமும் தகுந்த எச்சரிக்கையுடன் ஆங்கில மருந்துகளை ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின்’, பிடியில் ஷெட்யூல் -J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று 51 நோய்கள் அடங்கிய பட்டியலைச் சேர்த்திருக்கிறது.

    ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களில் விவரம் வருமாறு.

    1. எய்ட்ஸ்

    2. நெஞ்சுவலி

    3. ‘அப்பெண்டிஸைட்டிஸ்’ என்னும் குடல் வால் நோய்

    4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு

    5. தலை வழுக்கை

    6. கண்பார்வை அற்ற நிலை

    7. ஆஸ்துமா

    8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை

    9. கண்புரை

    10. தலைமுடி வளர, நரையை அகற்ற

    11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.

    12. பிறவிக் கோளாறுகள்

    13. காது கேளாமை

    14. நீரிழிவு நோய்

    15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்

    16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்

    17. மூளைக்காய்ச்சல்.

    18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.

    19. மார்பக வளர்ச்சிக்கு

    20. புரையோடிய புண்

    21. மரபணு நோய்கள்

    22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்

    23. கழுத்து (தைராய்டு) வீக்கம்

    24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்

    25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்

    26. விரை வீக்கம்

    27. பைத்தியம்

    28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.

    29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.

    30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.

    31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.

    32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.

    33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்

    34. இரத்தப் புற்றுநேரய்.

    35. வெண் குஷ்டம்

    36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.

    37. மூளை வளர்ச்சிக்குறைவு.

    38. மாரடைப்பு நோய்

    39. குண்டான உடம்பு மெலிய

    40. பக்க வாதம்

    41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்

    42. மூல நோய் மற்றும் பவுத்திரம்

    43. வாலிப சக்தியை மீட்க

    44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

    45. குறைந்த வயதில் தலை நரை

    46. ரூமாட்டிக் இருதய நோய்

    47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்

    48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்

    49. திக்குவாய்

    50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப் பை கற்கள்

    51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.

    ஆக, மேற்கண்ட இந்த ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த 51 வியாதிகளுக்கும் ஆங்கில மருத்துவம் தங்கள் மருந்துகளால் வைத்தியம் அளித்து வருவது குற்றச்செயல் என்று அரசாங்கம் சட்டப்பூர்வமாக எச்சரித்த பின்பும் இந்த அனைத்து நோய்களுக்கும் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், மக்கள் நலனுக்கு எதிராகவும் ஆங்கில மருத்துவத்தால் பகிரங்கமாகவும், ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்ற பெயரிலும், விலையுயர்ந்த மருந்துகளைக் கொண்டும் ஆங்கில மருந்துக் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபங்களை வாரி வழங்கிக் கொண்டும் சட்ட விரோத காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

    இந்திய மருத்துவச் சங்கமும் (IMA) தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலும் (TMC) ஷெட்யூல் - J பற்றி பொதுமக்களுக்கு விளக்காதது ஏன்? இந்தக் குற்றச் செயல்புரியும் மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்று மக்களிடம் தவறாக அடையாளம் காட்டிக் கொண்டிருப்பதேன்? போலி மருத்துவத்தை விஞ்ஞானப் பூர்வமானது என்றும் போலி மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்றும் மக்களிடம் முன்னிலைப்படுத்தக் காரணம் என்ன? குற்றச் செயல்களுக்கு இன்றுவரை துணைபோய்க்கொண்டிருக்கக் காரணம் என்ன?

    மேற்கண்ட 51 நோய்களுக்கு மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது என்றிருக்க சட்டத்தை பகிரங்கமாகத் தூக்கியெறிந்து விட்டு மருந்துகளைக் கொடுத்து நோயாளிகளின் உயிர்ச்சக்தியை சாகடித்துக் கொண்டிருக்கும் ஆங்கில மருத்துவம், அம்மருத்துவத்தைச் சார்ந்தவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்று மக்களிடையே நடமாடவிடும் இந்தத் துரோகச் செயலை மக்களே! அரசுக்கு தெரிவியுங்கள். மருத்துவச் சங்கத்தில் கேட்பதற்கு ஆளில்லை என்ற ஒரே காரணத்தால் தான் இப்படிப்பட்ட கொடூரச் செயல் நடந்துக் கொண்டிருக்கிறது.

    மக்களே! இந்திய மருத்துவச் சங்கத்தை ஆங்கிலேயர்களின் மருத்துவத்தைப் பார்க்கும் டாக்டர்கள் மட்டுமே அடங்கப்பெற்ற குழுவாகப் பாதுகாத்து வருகின்றனர். அம்மருத்துவம் நோய்களைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ லாயக்கற்றது என்று தீர்மானித்து சட்டமாக்கிய பின்பும் அதைப்பற்றி மக்களிடம் மூச்சுக் கூட விடவில்லை.

    ஷெட்யூல்-J-சட்டத்தின்படி இன்றுள்ள டயாபிடிஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், கார்டியாக் (இருதய) ஸ்பெஷலிஸ்ட்டுகள், இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான ஸ்பெஷலிஸ்ட்டுகள், மூளை சம்பந்தப்பட்ட ஸ்பெஷலிஸ்ட்டுகள், தைராய்டு ஸ்பெஷலிஸ்ட்டுகள், சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட்டுகள் பைத்தியக்கார ஸ்பெஷலிஸ்ட்டுகள் போன்ற இவர்கள் அனை வரும், இன்னும் அனைத்து ஸ்பெஷலிஸ்ட்டுகளும் போலிகள் என்ற அடைமொழியுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள். மக்களே இது பற்றிய விளக்கத்தை உங்களிடமும், மறைத்து, அரசாங்கத்திடம் மறைத்தது ஏன் என்பதற்கான விளக்கத்தைக் கேளுங்கள்.

    TMC இதைப் பற்றி மக்களுக்குச் சொல்லாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் நன்மையா? தங்கள் சங்கத்தில் உள்ள மருத்துவர்களுக்கு செய்யும் நன்மையா? தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்குப் பதிலாக அதன் இடத்தில் அகில இந்திய ஹெல்த் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் இருக்கும் அனைத்து மருத்துவங்களும் அடங்கப் பெற்ற சுகாதாரக் கவுன்சிலை அமைக்க வேண்டும். அதில் ஆங்கிலேயர்களின் மருத்துவத்தையும், ஒரு அங்கமாக்கி, அம்மருத்துவத்தின் அடாவடித்தனங்களை ஒரு நிலைக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

    மக்கள் உடல் நலன், சுகாதாரம் போன்றவைகளுக்காக அரசாங்கம் ஆற்றப்போகும் காரியங்கள் அனைத்துக்கும் அது நன்மையாக முடிவதற்கும், தீமையாக முடிவதற்கும், இந்த தார்மீகப் பொறுப்பேற்கும். உரியநடவடிக்கையிலும் இறங்க வேண்டும் என்ற சட்டப்பூர்வமான அதிகாரத்தையும் வழங்கவேண்டும். அல்லது தங்கள் உடல் நலனில் அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையை மக்கள் வெகு விரைவில் இழந்துவிடுவார்கள்.

    அடென்லால், கால்ஸிகார்ட், ஃப்ரூஸிமைட், இன்னும் அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த என்று இருதய சிறப்பு நிபுணர்கள் கொடுக்கும் அனைத்தும் நச்சுக்கள், உயிரைக் குடிப்பவை. இவையனைத்தும் சிறுநீரகங்களை படிப்படியாகச் சாகடிக்கும் நச்சுக்கள். அது மட்டுமல்ல, இருதய இயக்கத்தையே பாழாக்கும். அத்துடன் உடலின் மீதமுள்ள உறுப்புக்களும் கெடும். இரத்த அழுத்தத்திற்கான இருதய ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்பவர்கள் போலிகள் (Indian Drugs and Cosmetics Act, 1940 Schedule-J) சட்டத்தின்படி எழுதும் மாத்திரைகள் ஒவ்வொன்றும் வயிறு, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் என்று ஒவ்வொரு உறுப்பாக சீரழிப்பவை.

    போலிகள் சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள் யார் எனில், ‘எந்த டாக்டர் அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்து என்று நோயாளிகளை நம்பவைத்து ஆங்கில மருந்துகளை எழுதிக் கொடுக்கிறாரோ, அந்த மருத்துவரே ஆவார்’ என்பதாகும். சட்டத்தின்படி எந்த மருத்துவரும் அதிக இரத்த அழுத்தம் உட்பட எந்தவிதமான இருதய நோய்க்கும் குணப்படுத்தும் மருந்துகள் இவை அல்லது கட்டுப்படுத்தும் மருந்துகள் இவை என்று நோயாளிகளிடம் கூறுவாரேயானால் அவர் ஏமாற்றி தொழில்புரியும் போலி டாக்டராவார்.

    ஆனால் ஆங்கில மருத்துவம், சட்டத்தை துச்சமென மதித்து அகம்பாவத்துடன் போலிகளுக்கு ‘இருதய ஸ்பெஷலிஸ்ட்’ என்று அடைமொழியைக் கொடுத்திருக்கிறது. இவர்கள் தொழில் நடத்தும் முறை எப்படி என்பதை வாசகர்களாகிய நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் எதிர்காலம், நம் நாட்டு மக்களின் எதிர்காலம் காக்கப்படவேண்டும் என்ற உணர்வோடு இது எழுதப்படுகிறது. உங்கள் ஒவ்வொருவர் ஊரிலும் மருந்து ஆய்வாளர்கள் இருப்பார்கள். இவர்கள் உங்கள் நலனுக்காக விழித்துக் காத்திருந்து வேலை செய்யக் கடமைப்பட்டவர்கள். நோயாளிகளாகிய நம் ஒவ்வொருவர் உயிரும் இவர்கள் கையிலே இருக்கிறது. இவர்களின் வித்தியாசமான, போக்கால்தான் இன்று ஆங்கில மருத்துவம் போலிகளுக்கு ஸ்பெஷலிஸ்ட் பட்டம் கொடுத்து சட்டத்தை மிஞ்சி நடக்கும் அளவுக்கு உங்களிடையே உலாவ விட்டிருக்கிறது.

    மருந்து ஆய்வாளர்கள் கடமை என்னவென்றால் “இருதய நோய்கள் முதலாக எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தும் மருந்துகள் இவை; குணப்படுத்தும் மருந்துகள் இவை என்று கூறி, மக்களை ஏமாற்றி, நம்ப வைத்து மருந்துச் சீட்டுகளை எழுதிக் கொடுக்கும் ஆங்கில மருத்து வர்களிடம் அவர்களின் சட்டமீறுதலைப் பற்றிக் கடுமையாக எச்சரிக்கவேண்டும். அவர்கள் எழுதும் மருந்துகள் பற்றி அவற்றின் தன்மைகள் பற்றி, பக்கவிளைவுகள் பற்றி முறையாக நேர்காணல் மூலமாக பரீட்சிக்க வேண்டும். ஆங்கில மருத்துவம் அவர்களுக்கு அளித்துள்ள ஸ்பெஷலிஸ்ட் பட்டங்களை உடனடியாக நீக்கச் சொல்ல வேண்டும். தங்கள் விசிட்டிங் கார்டுகளிலிருந்தும், போர்டுகளிலிருந்தும் மறைமுகமாக மக்களை ஏமாற்றும் அந்த போலி அடைமொழிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..

    “உங்கள் உடல் நலன், சமுதாய நலன் காக்கப்பட Drug Inspectors உடனடியாக மேற்சொன்ன நடவடிக்கைகளை எடுக்கிறார்களா?” என்று கவனியுங்கள். இன்றிலிருந்து செயல்படத் தவறும் Drug Inspectorகளைத் தட்டியெழுப்பி கவனிக்கச் சொல்லுங்கள்.

    Drug Inspectorகளைக் கண்டுபிடிப்பது மிக எளிதான காரியம். உங்கள் வீட்டு அருகாமையிலுள்ள எந்த ஒரு மருந்துக்கடையிலும் அவர்கள் விலாசத்தை முழுமையாகக் கேட்டு அறிந்து கொள்ளலாம். உங்கள் நன்மைக்காக உங்கள் நலன் காக்கும் நண்பர்கள். அவர்களை நீங்கள் தினமும் விழிப்புணர்வுடன் சந்தித்து விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    வாசகர்களே, இந்தப் பட்டியலில் உள்ள நோய்களுக்கு ஸ்பெஷலிஸ்டுகள் என்று கூறும் ஒவ்வொருவரும் போலிகள். காரணம் சிறப்பு மருத்துவர்கள் என்ற அடைமொழி மறைமுகமாக பாமர மக்களை பெரிய அளவில் ஏமாற்றக் கூடிய தாக உள்ளது. மருத்துவமனைகளில் போர்டுகளில் காணப்படும் இந்த அடைமொழிகளை நீக்க சொல்வதில் சமுதாயமே கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

    நன்றி : ‘மருந்துகளால் வரும் நோய்கள்’
    ஹெல்த் டைம் வெளியீடு

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    ஆங்கில மருத்துவம் -விழி பிதுங்கி நிற்கும் 51 நோய்கள்  Empty Re: ஆங்கில மருத்துவம் -விழி பிதுங்கி நிற்கும் 51 நோய்கள்

    Post by mravikrishna1 Fri 03 Jun 2011, 7:41 pm

    இந்த நோய்களில் இருந்து உங்களை கண்டிப்பாக நான் காப்பாற்றி பழையபடி உங்களை மாற்றி காட்டுகிறேன் என்று எந்த அல்லோபதி டாக்டர் களும் கூறுவதில்லை. வரும் நோயாளிக்கு எதையாவது சொல்லி ஏமாற்ற நினைப்பதில்லை.நாம் தானே முட்டால் தனமாக நடக்கிறோம்.

    mravikrishna1

    Posts : 9
    Points : 9
    Reputation : 0
    Join date : 02/06/2011

    Back to top Go down

    ஆங்கில மருத்துவம் -விழி பிதுங்கி நிற்கும் 51 நோய்கள்  Empty Re: ஆங்கில மருத்துவம் -விழி பிதுங்கி நிற்கும் 51 நோய்கள்

    Post by thamizhan Sat 04 Jun 2011, 12:18 pm

    சாட்டையடி போன்ற கட்டுரை , நன்றி டாக்டர் ஜாவாஹிரா அவர்களே.

    இந்த கட்டுரையை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    schedule - J பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி அரசாங்கத்திடம் கேள்வி கேட்க வேண்டும்.

    thamizhan
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 19
    Points : 22
    Reputation : 1
    Join date : 08/01/2011

    Back to top Go down

    ஆங்கில மருத்துவம் -விழி பிதுங்கி நிற்கும் 51 நோய்கள்  Empty Re: ஆங்கில மருத்துவம் -விழி பிதுங்கி நிற்கும் 51 நோய்கள்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum